Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம் : கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது – ஆனந்தவிகடன்

சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும். அதைத்தான் ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். முற்போக்கிலும் சரி, புனைவிலும் சரி, எதிலும் சமரசம் ஆகாமல் படைப்புகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

முதல் கதையான ‘யாசகம்’ முதலாளி தொழிலாளி இடையே காலம்காலமாக நடக்கும் சுரண்டல்களை விவரிக்கிறது. உழைப்புக்கேற்ற கூலியைத் தராமல் ஏமாற்றும் முதலாளியை அவமதிக்க முத்து செய்த செயல் ஆறாத வடு.
மிகவும் ஈர்த்த கதையாக வசீகரித்தது ‘கேமரா கண்கள் மூன்று முறை கண் இமைகளை மூடித்திறந்தால் பார்த்த காட்சிகள் செல்போனில் பதிவாகும் என்கிற புதுவித வினோதமான சூப்பர் பவர் தனக்கு இருப்பதை அறிந்துகொள்கிறான் கதை நாயகன். அந்த அதீத ஆற்றல் காவல்துறைக்கு உதவினாலும் தன் கல்யாண வாழ்க்கைக்கு உதவாது என்பது புரிந்து திக்குமுக்காடுபவனுக்கு, திருமணமும் ஆகிறது. முதலிரவில் பலமுறை கண் இமைகளைத் திறந்து மூடியவனது செல்போனை மறுநாள் காலையில் அவன் மனைவி எடுத்துப் பார்க்கிறாள். அப்போது என்ன ஆனது? கற்பனையாக இருந்தாலும் பதைபதைப்புடன் ரசிக்க வைக்கிறது கதை.
‘அந்திமத் தேடல்’ என்கிற தலைப்பில் இரண்டு கதைகள். ஏன் இரண்டுக்குமே ஒரே தலைப்பு என்ற கேள்விக்கான விடையும் நியாயமும் கதைகளுக்குள் இருக்கின்றன.
புத்தகத் தலைப்புக் கதையும் அறிவியல் புனைவுதான். காதலன் ஒருவன் காதலியின் நினைவுகளை அழிக்க நினைத்து மருத்துவரிடம் வருகிறான். சிகிச்சையின் விளைவால், பகல் நினைவுகள் மட்டுமே அழிகின்றன. இரவின் நினைவுகள் அழியாமலிருக்க கனவிலேயே அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான் என கற்பனையின் வேகத்தை நமக்கும் பரவச் செய்திருக்கிறார்.
மீண்டும் மீண்டும்’ கதையில் திருட்டுக்குற்றத்துக்காகச் சிறை சென்று, திருந்தி வரும் ஒருவனுக்கு நம் சமூகம் என்ன தந்தது, ‘கனவுக்கன்னி’ கதையில் ஒரு பெண் ஆணைச் சந்தேகிப்பது, சிறிது நீண்ட கதையான ‘பருவகால பக்தி’யில் ஒரு மதப்பண்டிகை சமயத்தில் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் டி.வி. சேனல் பற்றியது என விதவிதமான அனுபவங்களை நமக்கும் தந்திருக்கிறார். எளிமையான நடையில் சுவாரசியமான களங்களில் புதுமையான கண்ணோட்டங்களில் வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

நன்றி ஆனந்த விகடன்.

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here