மோடியின் ஆட்சியில் மோர்பி மட்டுமல்ல…….! கட்டுரை – அ.பாக்கியம்

மோடியின் ஆட்சியில் மோர்பி மட்டுமல்ல…….! கட்டுரை – அ.பாக்கியம்




அக்டோபர் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் மோர்பி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்து 141 பேர்கள் மரணம் அடைந்தவர்கள்.

கடிகார கம்பெனியிடம் காண்ட்ராக்ட் கொடுத்ததும், கம்பெனியின் வேலைக்காரர்களை மட்டுமே கைது செய்ததும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள் ஆகும்.

ஏதோ குஜராத்தில் மட்டும்தான் இது நடந்து விட்டது என்று எண்ணி விடாதீர்கள் மோடி ஆட்சியில் இது தொடர்கதையாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் 9-ம்தேதி கிரேட்டர் மைதாவில் நொய்டாவில் சாலையில் திடீரென்று ஒரு பகுதி உள்ளே சென்றுவிட்டது. பெரும் போக்குவரத்து பாதிப்பாகி நாடு முழுவதும் வைரலாக மாறியது.

மேலும் இதே மாதம் முப்பதாம் தேதி பெங்களூர் பகுதியில் ஏலஹங்கா என்ற இடத்தில் பிரதான சாலை இடிந்து உள்ளே சென்று விட்டது அங்கு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்து 4 பேர் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குர்கனில் உள்ள துவாரகா விரைவுச் சாலையில் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய மேம்பாலம் ஒன்று கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பொழுது பாலம் இடிந்து விழுந்தது. மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். மாநில முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த முமத்புரா மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. 853 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இடிந்து விழுந்தது மாநில முழுவதும் தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.

இந்தப் பாலத்தை கட்டி வந்த நிறுவனம் ஏற்கனவே இரு பாலங்களை கட்டிய பொழுது இதே போன்று இடிந்து விழுந்து உள்ளது.

22 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரின் சுல்தான் கஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி, ஏப்ரல் 30ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது இடிந்து விழுந்தது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்து ஒரு முதியவர் பலியானதுடன் லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஷ்நாப் நகரில் பராக்கா தடுப்பணை மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் பொறியாளர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி காசர்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி காங்கிரீட் ஜல்லி போடுகிற பொழுது இடிந்து விழுந்தது தரமற்ற ஜல்லிகள் பயன்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடிபாடுகளுக்கு காரணம் ஒன்றிய அரசின் ஊழல் நிறைந்த நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என்று அனைவரும் அப்பட்டமாக அறிந்த உண்மை.

– அ.பாக்கியம்.

படங்கள்
குஜராத் பாலம், நொய்டாசாலை
விரைவு சாலை,
பீகார் விபத்து.

குஜராத் மட்டுமல்ல.. தேசிய நெடுஞ்சாலைகளில் திடீர் பள்ளம், தடுப்பணைகளில் உடைப்பு.. எழும் விமர்சனங்கள் | Not just Gujarat bridge, Many national level infrastructures sees ...

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *