கதை 1:
குடிசையில், சில நாட்களில் கடைசி பருக்கை, பல நாட்களில் ஒரு சொம்பு தண்ணீர் அம்மாவின் உணவானது.
கதை 2:
“சமுக சேவகர்” விருது வழங்கும் விழாவில் விருது பெற்றுக் கொண்டு, நேரே மாத தவணை கட்ட அப்பா இருக்கும் முதியோர் இல்லம் சென்றார் மகன்.
கதை 3:
“ப்ளூ கிராஸ் ஆர்வலர்” வீட்டில் விருந்து. மட்டன் பிரியாணி, சிக்கன் 65.
கதை 4:
லஞ்ச ஒழிப்பு அதிகாரி டொனேஷன் கொடுத்து தன் பிள்ளைக்கு L.K.G அனுமதி வாங்கினார் தனியார் பள்ளியில்.
கதை 5:
ஃபாரஸ்ட் ஆபிசர் வீட்டில், கதவுகள், ஜன்னல்கள், மேசை, கட்டில், தேக்கு மர பலகையில் பளபளத்தன.
கதை 6:
ஸ்டார் ஓட்டல் முதலாளிக்கு வீட்டில் இருந்து மதிய உணவு வந்தது
கதை 7:
பள்ளி பையை போட்டு விட்டு குப்பை அள்ளும் பையை எடுத்தான் 5 வயது சிறுவன் அம்மாவின் ஈம சடங்குகள் முடிந்த சில தினங்களில்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


It is very nice one line story