உயிரையே விலை கேட்கும் பாடல்கள்
இசைப் பாடல்கள்
சிலர் உயிர் கலந்து பாடும் போது
மதி மயங்கிப் போகிறேன்
மண்ணில் சாய்கிறேன்
மனதோ
பாடச் சொல்லிப் பார்க்கிறது
என்னைக் கேட்கிறது
முயலுகிறேன்
முயன்று தோற்றுத் துவளுகிறேன்
வெறுத்துப்
போகிறேன்
பேசும் சித்திரங்கள் என்னை
பேதையாக்கி விடுகிறது
தூரிகை எடுக்க கையும்
துடிக்கிறது
துடித்தென்ன ஒரு கோடு போட
முடியாது துவண்டு விழுகிறது
பேசும் கவிதைகள் என்னை
பித்தனாய்ப்பிறக்க வைக்கிறது
சொற் சுவையில் சுருண்டு
கிடக்கிறேன் சோகம் மறக்கிறேன்
இங்கும் கூட சும்மா கிடக்கிறதா
இந்த மனது?
கவிதை வடித்துப் பார் என்கிறது
கல்லில் நாரா உரிக்க முடியும்?
ச.லிங்கராசு
98437 52635
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

