சந்தை மடம் ஆளுநர் மாளிகை:

சரக்குகளின் வகைகளுக்கு ஏற்ற முறையில் பல சந்தைகள் உள்ளது.
அப்படி ஒரு சந்தையாக பாஜக ச.ம.உ. களை வாங்க ஒரு சந்தையை உருவாக்கி உள்ளது.

மக்களிடம் வசூலிக்கும் வரிகளை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து முதலாளிகள் மூலம் பணத்தைப் பெற்று ச.ம.உ.சந்தைக்கு பல்லாயிரம் கோடி முதலீடு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 277 ச.ம.உ. களை வாங்கி உள்ளார்கள்.

கடந்த சில ஆண்டுகள் மட்டும் 6,300 கோடி ரூபாய் ச.ம. உ. க்களை வாங்குவதற்கு செலவு செய்துள்ளார்கள்.

கர்நாடகாவில், கோவா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, குஜராத் என பல மாநிலங்களில் விலை கொடுத்து வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார்கள்.

தெலுங்கானாவில் டி ஆர் எஸ் கட்சியின் ஒருச.ம.உ. விற்கு 100 கோடி ரூபாய் வரை விலை பேசி உள்ளனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ச.ம.உ. களை வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசி, அதிக எம்எல்ஏக்களை சந்தைக்கு கொண்டு வந்தால் 75 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படும் என்று விலை பேசி உள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி ச.ம.உ. களை வாங்குவதற்கு 800 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.

ராஜஸ்தானிலும் ராஜேஷ் பைலட் மூலம் ச.ம.உ. களை வாங்க சந்தைக்கு அழைத்து உள்ளனர் .

இந்தியாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இதுவரை ஒரு சிலர் கட்சி மாறுவது கட்சி தாவுவது சில சலுகைகளை வாங்குவது என்ற நிலையை மாற்றி மக்களின் ஆதரவோடு என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனத்தோடு ச.ம.உ. களை வாங்கும் சந்தையை பகிரங்கமாகத் தெரிந்து உள்ளனர்.

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பான மக்களின் அதிகாரத்தை உடைத்தெரியும் முயற்சியாகும். சந்தை மடமாக ஆளுநர் மாளிகை செயல்படுகிறது.

– அ.பாக்கியம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *