மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி – தமிழில்: ச.வீரமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டை நோக்கி – தமிழில்: ச.வீரமணி




[இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 6-10 தேதிகளில் கேரளா மாநிலம், கண்ணூரில் நடைபெறுகிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சி அடுத்த மூன்றாண்டு காலத்திற்கு மேற்கொள்ளவேண்டிய அரசியல் திசைவழியை வகுத்திடும்.

மத்தியக் குழுவால், இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் இறுதிப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கேயுரிய நிகரற்ற வழிமுறைக்கிணங்க, கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு, கட்சி உறுப்பினர்களால் அரசியல் நடைமுறை உத்திகள் கோட்பாடு தீர்மானிக்கப்படுகிறது.

கட்சியின் அகில இந்திய மாநாடு சென்ற முறை 2018இல் நடந்ததற்குப் பின், 2019 மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையுடன் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குப் திரும்பியபின்னர், நாட்டில் வலதுசாரிகளின் நிலை ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தோம். அதன் விளைவாக, ஆட்சியாளர்கள் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாக அமல்படுத்தத் தொடங்கியதையும் பார்த்தோம். இத்துடன் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியதையும் பார்த்தோம். இவற்றின் விளைவாக ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசும் விரல் விட்டு எண்ணுகிற ஒரு சில பெரும் கார்ப்பரேட்டுகள் லாபமும், சொத்துக்களும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அதே சமயத்தில் வேலையின்மை, வருமானங்கள் இழப்பு, விலைவாசி உயர்வு மற்றும் விவசாய நெருக்கடியின் விளைவுகள் முதலியவற்றால் மக்களின் வாழ்நிலைமைகள் குறிப்பாக கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், மிகவும் மோசமாக மாறின.

இந்தக் காலகட்டத்தில் மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், அவற்றால் மக்கள் மீது ஏற்றப்பட்ட சுமைகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் பெரிய அளவில் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, அரசாங்கம் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய இயக்கம் ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி, அவற்றை ரத்து செய்ய வைத்திட்ட வரலாறு படைத்திட்ட போராட்டமாகும். தொழிலாளர் வர்க்கமும் தொழிலாளர் விரோத ‘லேபர் கோடுகளுக்கு’ (Labour Codes) எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும், போதுமான அளவு குறைந்தபட்ச ஊதியம் கோரியும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. 2018க்கும் 2022க்கும் இடையே நான்கு பொது வேலை நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் மார்ச் 28-29 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தங்களில் அனைத்துத்துறைகளில் பணிபுரியும் கோடானுகோடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்திடவும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இயக்கமாகும். இப்போராட்த்தில் நாடு முழுதும் மிக விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்தன.

இப்போராட்டங்களையும், இயக்கங்களையும் வளர்த்தெடுப்பதிலும், தீவிரப்படுத்துவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் முக்கிய பங்களித்திருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிரான போராட்டத்துடன் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான அரசியல்-சித்தாந்தப் போராட்டத்தையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சொல்லி வந்திருக்கிறது. தேசியவாதம் தொடர்பாக  இந்துத்துவா வெறியர்கள் மேற்கொண்டுவரும் முஸ்லீம்கள் எதிர்ப்புப் பிரச்சாரம் மக்கள் மத்தியில், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அங்கீகரித்தாக வேண்டும். இவ்வாறு இந்துத்துவாவாதிகள் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு வலுவான அரசியல்-சித்தாந்தப் போராட்டத்தை நடத்தாவிட்டால், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியை வலுவாக எதிர்த்திட முடியாது. இந்துத்துவாவிற்கு எதிராக இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியும் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை களும் தவறியுள்ளபோது, இதனை முன்னெடுத்துச் செல்லவேண்டிய  பொறுப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதர இடதுசாரிக் கட்சிகளுக்கும் மாறியிருக்கிறது. எனவே அதற்காக அவை, அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் தங்களைச்சுற்றி அணிதிரட்டி ஒரு மேடையை அமைத்திட வேண்டியிருக்கிறது.

கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சியை அரசியல் ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் சுயேச்சையான முறையில் வளர்த்தெடுப்பது எப்படி என்பது குறித்து கூர்மையாகக் கவனம் செலுத்திடும். கட்சி, வலுவாக இருந்த இரண்டு தலங்களில் பின்னடைவினையும், வீழ்ச்சியையும் அடைந்திருக்கிறது என்கிற உண்மையிலிருந்து இவ்வாறு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் திரிபுராவில் பாஜக ஆகிய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகளால் கடுமையாகத் தாக்குதலுக்கும், வீழ்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணற்ற கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறுவிதமான வடிவங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனினும், இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் கட்சியின் ஊழியர்கள் துணிவுடன் எதிர்கொண்டும், மீளவும் அணிதிரண்டும், உழைக்கும் மக்களைத் திரட்டி, போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு, கடந்த மாநாட்டிற்குப்பின் நடைபெற்றுள்ள ஸ்தாபனப் பணிகள் மற்றும் அளிக்கப்பட்ட கடமைகள் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்திடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிட் பெருந்தொற்றும், சமூக முடக்கங்களும் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கின்றன. ஏழை மக்கள் மீது அவை சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகு சிரமமிகு காலகட்டத்தில் கட்சி மக்கள் மத்தியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கும் உதவும் விதத்தில் கணிசமான அளவிற்கு நிவாரணம் அளித்தது. இத்தகு வேலைகள், கோவிட் தனிமை மையங்கள் அமைத்தல், ரேஷன் உணவுப் பொருட்கள் வழங்குதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளித்தல், முகக் கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்குதல் போன்ற விதத்தில் அமைந்திருந்தன. கட்சி ஸ்தாபனம் தொடர்பான அம்சத்தைப் பொறுத்தவரையில், கட்சிக்குள் இளம் தோழர்கள் மற்றும் பெண்களைக் கொண்டுவருவதற்கும், கட்சிக்குப் புத்துயிர் அளிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய பின்னணியில் கேரளாவில் நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு சிறப்புக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கண்ணூர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கோட்டையாகும். கட்சி இங்கே மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இம்மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 600க்கும் அதிகமாகும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு மத்தியில் அதிகபட்ச அளவு கட்சி உறுப்பினர் எண்ணிக்கை உள்ள மாவட்டம் இதுவேயாகும்.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், 2021 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, இரண்டாவது முறையாக பெரிய அளவு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளும், செயல்பாடுகளும் மக்களின் அபரிமித ஆதரவையும் ஏற்பளிப்பையும் பெற்றன. இடது ஜனநாயக முன்னணி பின்பற்றி வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கைகள், ஒன்றிய பாஜக அரசாங்கம் பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானவைகளாகும், மாற்றானவைகளாகும்.

எனவே, கேரளாவில் நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு, தேசிய அளவில் இடது ஜனநாயக சக்திகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடும் அதே சமயத்தில் அது கேரள இடது  இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்ப்பது இயற்கையேயாகும்.

கண்ணூர் அகில இந்திய மாநாடு, வலதுசாரி, நவீன தாராளமய இந்துத்வா சக்திகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி சக்திகளும் உறுதியாகப் போராடி வருபவர்கள் என்பதை உறுதிப்படுத்திடும். அகில இந்திய மாநாடு, நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் இடது ஜனநாயக மாற்றுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திசைவழியைக் காட்டிடும்.

(மார்ச் 30,2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 8 : கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் ! – இரா. சிந்தன்

1957 ஆம் ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இது உலகம் முழுவதுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக மாறியது. இந்த வெற்றிக்கு பின் 1958 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் கூடியது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

 

1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள்  62 லட்சம் மட்டுமே. 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் 12 கோடியாக இருந்தது.

பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் வந்தார்கள். எனவே நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. சென்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘புரட்சிகர எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு நல்ல பலனைக் கொடுத்தது.

கவனமான மதிப்பீடுகள்

  1. தென் மாநிலங்களில் ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் கட்சி சிறு பின்னடைவுகளை எதிர்கொண்டபோதிலும், கேரளத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது மிக முக்கியமான சாதனையாகும். இருப்பினும் கேரளத்தில் கிடைத்த வெற்றியைப் பற்றி, தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மிகவும் கவனமான மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
  2. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்ற போதிலும், நாட்டில் பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைப் பெறுவது சாத்தியமாகவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 48% மட்டுமே காங்கிரஸ்கட்சி பெற்றிருந்தது.
  3. இப்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருவாங்கூர், கொச்சி மற்றும் மலபாரில் காங்கிரஸ் கட்சியினால்  பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் கம்யூனிஸ்ட்இயக்கத்தின் பின் நின்றார்கள்.
  4. கேரள மாநில பகுதிகளில் தேசிய இயக்கத்தின் முகமாக கம்யூனிஸ்ட் தலைவர்களேஇருந்தார்கள்.
  5. விவசாயிகள் பிரச்சனைகளையும், மலையாள தேசிய இன பிரச்சனைகளையும்அறிவியல் பார்வையோடு முன்னெடுத்த காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி,கேரளத்தை ஒரு மாநிலமாக அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்றது.
  6. இருப்பினும் கூட, கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த மக்கள் ஆதரவும் ஒரு சிறுபான்மையான அளவிற்கே இருந்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 40% ஆகும். ஆனால் தேர்தல் முறையின் கரணமாக, இந்த வாக்குகளைக் கொண்டே அதனால் 52% இடங்களில் வெற்றிபெற முடிந்தது.

Co-leadership of the Communist Movement Kerala's first communist government and coup Web series 8 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 8 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், கவிழ்ப்பும் !

‘மத்தியில் காங்கிரசின் சிறுபான்மை அரசு வந்ததைப் போலவே கேரள மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை அரசு ஆட்சிக்குவந்தது’ என்றுதான் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அதுவே சரியான மதிப்பீடும் கூட.

ஆட்சியை தொடர முடியுமா?
இந்திய ஆளும் வர்க்கங்கள் மேற்சொன்ன வெற்றியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில், கரள மாநில அரசாங்கம், அரசமைப்பின் 365 வது பிரிவினை பயன்படுத்தி கலைக்கப்பட்டது.

5 வது மாநாடு நடைபெற்ற காலத்திலேயே கல்வி மசோதாவிற்கு எதிராகவும் விவசாய உறவுகள் மசோதாவிற்கும் எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் வேலையை காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டிருந்தது. பின்நாட்களில் அது முஸ்லிம் லீக், கிறித்துவ குருமார்கள் மற்றும் மேல்தட்டு சாதி தலைவர்களோடு இணைந்து ‘விமோசன சமரமாக’ (விடுதலைப் போராட்டமாக) முன்னெடுக்கப்பட்டது.

முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்குள்ளாக ஒரு மாநில ஆட்சியை தொடர்ந்து நடத்துவதை ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திடுமா ? என்ற கேள்வி அப்போது கட்சிக்குள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது.

‘அசாதாரண மாநாடு’ என்று அழைக்கப்படும் ஐந்தாவது மாநாட்டில் கட்சியின் அமைப்பு விதிகளை மேம்படுத்துவது பற்றி கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருவைப் பற்றி முற்போக்கான மதிப்பீட்டை எடுத்தன. அதனை பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை முடிவு செய்வதற்கு ‘திருத்தல்வாதிகள்’ முயற்சித்தார்கள். இந்த திருத்தல்வாத போக்குகள் தொடர்ந்தது, பின்நாட்களின் கட்சி பிளவிற்கு வழிவகுத்தன.

இ.எம்.எஸ் வெளிப்படுத்தும் கவலை
கேரள சூழல் பற்றிய ஒரு தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கேரளாவில் நடந்துவரும் மாற்றங்களை அந்த மாநாடு சரியாக உள்வாங்கிடவில்லை. இதுபற்றி தோழர் இ.எம்.எஸ் கவலையுடன் இவ்வாறு பதிவு செய்கிறார், “”ஐந்தாவது மாநாடு இதில் எதைப்பற்றியும் விவாதிக்கவில்லை. மாநாட்டின் முடிவுகளில் மிக முக்கியமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு மறுப்பு அறிவிப்பை மட்டும் வெளியிடுவது என்பதுதான். அதாவது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியான வழிமுறைகளையே மேற்கொள்ளும் என்றும் ஒரே கட்சியின் தலைமையை ஏற்படுத்தாது என்றும் அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் பின்னணியில் கம்யூனிசத்தை நிலைநாட்டின அமைதியான சோசலிச புரட்சி என்ற சமூக ஜனநாயக நிலைப்பாடு இருந்தது வெளிப்படை”

‘சோசலிசத்தை நோக்கிய பயணம் அமைதியான முறையில் இருக்க வேண்டும். அதே போல கட்சி ஏற்படுத்த விரும்புகிற அரசியல் அமைப்பில், ஒரே கட்சியின் தலைமை என்ற நிலைமைக்கு இடமில்லை’ ஆகிய கருத்துக்கள் சரியானவையே ஆனால் கேரளத்தில்  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாநில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் ஆளும் வர்க்கத்தின் அக்கிரமான முயற்சிகளை பற்றி கவனம் செலுத்த முடியாததற்கு திருத்தல்வாதப் போக்கே ஒரு காரணமாகும்.

ஏகாதிபத்தியமும், கேரள அரசாங்கமும்
கேரளத்தின் நிலைமைகளைப் பற்றிய கூடுதலான கவலையை தோழர் இ.எம்.எஸ் வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. கேரளாவில் அமையப்பெற்ற மாநில ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்தன. அதனால் முதலாளித்துவ – நிலவுடைமைக் கொள்கைகளின் வரம்பிற்கு உட்பட்டு, ஒன்றிய அரசு வகுத்த கொள்கைகளுக்குள்ளாகவே செயல்பட முடியும். ஆனாலும், கேரள அரசு பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி, விவசாயிகள் – தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் அரசு, காகித அளவில் மேற்கொண்ட பல அறிவிப்புகளை, கேரள அரசாங்கம் செயல்வடிவிற்கு கொண்டுவந்தது.

உதாரணமாக, நிலக் குவியலை உடைப்பதிலும், குத்தகை விவசாயிகளுடைய நில உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களையும், சுயநல சக்திகளையும் ஆத்திரப்படுத்தின. அதிகாரப் பரவலாக்களுக்கு முன்னோடியாக அமைந்த மாவட்ட நிர்வாக மசோதா, கல்வி மசோதா, போலீஸ் கொள்கை, கூட்டுறவுஅமைப்புகளுக்கு ஆதரவு, மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததொழில் நிறுவனங்களுக்கு உதவி ஆகிய நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் மேற்கொண்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ஆளும் வர்க்கங்கள் இந்த மக்கள் நல நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தார்கள்.

இது ஏகாதிபத்திய சதியின் ஒரு பகுதியாகவே நடந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த எல்ஸ்வொர்த் பங்கர், கேரளாவில் அமையப்பெற்ற கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வகித்த பாத்திரம் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை பின் நாட்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அதற்காக காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு சக்திகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பினை அமெரிக்கா மேற்கொண்டது. கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இந்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது.

பிற தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவந்த பின்னடைவு, ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துவதற்காக செய்ய வேண்டிய போராட்டங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக முன்னேறிய  மக்கள் போராட்டங்கள் ஆகிய பல்வேறு விசயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சிக் கிளை முதல், தேசியக் குழு வரையிலான அமைப்பு ஏற்பாடுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 7 : புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது அகில இந்திய மாநாட்டுக்கு பின், நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்கள், காங்கிரஸ் கட்சி தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றிய விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டுவந்தன.

ஆவடி சோசலிசம்:
அதாவது, அந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்திருந்தது. அந்த திட்டத்தை அமலாக்குவதற்கு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட சோசலிச நாடுகள் உதவி செய்தன. எனவே சோசலிச நாடுகளுடன் ஒத்துழைக்கும் போக்கினை வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டது நேருவின் அரசாங்கம். மேலும், 1955 ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ‘சோசலிச பாணியே தேசிய லட்சியம்’ என்ற அறிவிப்பையும் மேற்கொண்டது. இவையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் பற்றிய மதிப்பீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழச்செய்தன.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Avadi Socialim Image Credit: Frontline

எனவே, 1956 ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் 4 வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாகவே, மத்தியக் குழுவில் பல்வேறு கருத்துக்கள் மோதின. அந்த விவாதங்களுக்கு பின் மாநாட்டில் ஒரே அரசியல் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் இந்த தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஜோசி, ராஜேஸ்வர ராவ், ரவி நாராயண ரெட்டி, எஸ்.எஸ்.யூசுப், பவானி சென், சோம்நாத் லகிரி, கே.தாமோதரன், அவதார் சிங் மல்ஹோத்ரா, ரமேஷ் சந்திரா ஆகியோர் அதில் ஈடுபட்டார்கள். அந்த தீர்மானம் ‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜனநாயக முன்னணி அமைப்பது பொருத்தமானதல்ல’ என்றும் காங்கிரசோடு நெருக்கமான உறவு கொள்ள வலியுறுத்துவதாகவும் அமைந்தது. இவர்களே பிற்காலத்தில் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆகும்.

நான்காவது மாநாட்டின் விவாதத்தில் பங்கெடுத்த ஒரு பிரதிநிதி ‘காங்கிரஸ் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கங்களுடைய பிரதான கட்சியாக அமைந்த காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர வேண்டும் என்ற அந்தக் கருத்து மாநாட்டு அரங்கத்தில் கடும் விவாதங்களை உருவாக்கியது. அந்த விவாதத்தின் முடிவில் சரியான நிலைப்பாட்டுக்கு மாநாடு வந்து சேர்ந்தது என்றபோதிலும், மாற்றுக் கருத்துக்கு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தது என்பதையும் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் பதிவு செய்கிறார்.

அரசியல் தீர்மானம்:
மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் 6 பகுதிகள் இருந்தன. தேசிய விடுதலையையும், உலக சமாதானத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இந்தியா உயர்த்திப்பிடிப்பதை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. அதே சமயத்தில் உள்நாட்டில் அது கடைப்பிடித்த அரசியல், பொருளாதார கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Theprint

அதன்படி நேருவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம், இந்தியாவின் திட்டமிடல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று மாநாட்டு தீர்மானம் அங்கீகரித்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் அரசு கடைப்பிடித்த அணுகுமுறை, ஆளும் வர்க்கங்களுக்கே சாதகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்மய நடவடிக்கைகள் மிக அவசியம். அதற்கு அடிப்படையாக, நாட்டில் நிலச்சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக் குவியல் உடைக்கப்பட்டால்தான் அது சாத்தியம். இந்தியாவின் ஆட்சியாளர்கள், நிலவுடைமையாளர்களுடன் சமசரப் போக்கையே கடைப்பிடித்தார்கள். அது அரசின் வர்க்கத்தன்மையின் வெளிப்பாடே ஆகும். எனவே கம்யூனிஸ்டுகள் இந்தப் போக்கோடு ஒத்துழைப்பதோ, அணி சேர்வதோ சாத்தியமே இல்லை என்ற சரியான முடிவே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிவர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கேற்ற விதத்தில் அரசின் வரிக்கொள்கையும், இதர கொள்கைகளும் மாற வேண்டும் என்று மிகச் சரியாகவே மாநாடு அரைகூவியது. எனவே, இவற்றை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகர எதிர்க் கட்சியாக செயல்படவேண்டும் என முடிவு செய்தார்கள்.

இதில் ‘புரட்சிகர எதிர்க் கட்சி’ என்பதன் பொருளை சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் செயல்பாட்டை அனைத்துக் கட்சிகளுமே மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் போராடுவதோடு, களத்திலும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். முதலாளித்துவ – நிலவுடைமை அமைப்பிற்கு எதிராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சட்டப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமற்ற வழிகளிலும் போராட வேண்டும் என்ற முடிவினையும் கட்சி முன்னெடுத்தது.

மொழிவழி மாநிலங்கள்:
மாநாட்டின் பிற தீர்மானங்களில் மாநிலங்களை வலிமைப்படுத்துவதுடன், நாட்டின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. (சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநாட்டிற்கு சென்று திரும்பிய அஜாய் கோஷ் [பொதுச் செயலாளார்] ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் மொழி அடிப்படையிலேயே மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானமும் முன்வைக்கப்பட்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் உடன்பாடில்லை என்பதையும், மிகப்பெரும் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்ததன் பின்னணியில் ஆளும் வர்க்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டன என்பதையும் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்கு உதாரணமாக பார்க்கலாம்.

ஒரு லட்சம் உறுப்பினர்கள்:
இந்த மாநாட்டில் தோழர் கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தோழர்களை கொண்டு செயல்பட தகுதி ஆய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நாட்டில் மொத்தம் 75 ஆயிரம் கட்சி உறுப்பினர்களும், 30 ஆயிரம் பரிச்சார்த்த உறுப்பினர்களும் இருந்தார்கள். 427 பிரதிநிதிகள் வந்திருக்க வேண்டும், மாநாட்டில் பங்கேற்பு 407 ஆக இருந்தது.

Co-leadership of the Communist Movement Communists as the Revolutionary Opposition! Web series 7 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 7 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை புரட்சிகர எதிர்க் கட்சியாக கம்யூனிஸ்டுகள் !
Image Credit: Thewire

மேலும், 4 வது மாநாட்டின் விவாதம் அரசியல், தத்துவார்த்த பிரச்சனைகள் தொடர்பாகவே அமைந்திருந்த காரணத்தால், அமைப்பு விதிகளை மேம்படுத்துவது தொடர்பான விவதங்களை மேற்கொள்வதற்காக 6 மாத காலத்தில் ஒரு பிளீனம் (சிறப்பு மாநாடு) நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 1957 தேர்தல் காரணமாக அந்த சிறப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது மாநாடு மதுரையில் நடந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பான இடத்தை பெற்றிருந்த போதிலும், அரசின் தன்மையைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன.

வெளியே கடவுள், உள்ளே மிருகம் !
ஆளவந்தான் திரைப்படத்தில் தனது இரட்டை நிலையினைப் பற்றி நாயகன் பாடும் வரிகளை உல்டா செய்து படித்தால், அதுதான் அப்போது இந்திய அரசின் தன்மையாக இருந்தது. உலக அரங்கில் அவர்கள் ஏகாதிபத்திய முகாமிற்கு மாற்றினை முன்வைத்தார்கள். ஆனால், உள்நாட்டில் முதலாளித்துவ பாதையில் சென்றார்கள்.

இந்த நிலைமை பலருக்கும் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. மூன்றாவது மாநாட்டில், ஒரு சகோதர பிரதிநிதியாக பங்கேற்று பேசிய பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹேரி பொலிட், ‘நேரு தலைமையிலான இந்திய அரசு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாக புரிந்து கொண்டிருந்தார்’. எனவே இந்தியா உட்பட உலகம் ழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் நேரு அரசை ஆதரிக்க வேண்டும் என்றார். அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலை எடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வைத்து, முற்போக்கு சக்தியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நடந்தது என்ன?
இந்திய விடுதலைக்கு பிறகு நேரு அரசாங்கம் முன்வைத்த முதல் ஐந்தாண்டு திட்டம், ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. அயல் துறை கொள்கையிலும் ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைக்கும் போக்கினையே முன்னெடுத்தார்கள். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை என்பதாலேயே கூட்டுச் சேராக் கொள்கையை முன்னெடுத்தார்கள். இந்த மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கான ஒன்றாக பார்த்தது. ஆனால், இது உள்நாட்டு அணுகுமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவருமா என்பதுதான் கேள்வி.

1949 ஆம் ஆண்டில்தான் மக்கள் சீனம் உருவாகியிருந்தது. கொரிய அமைதி ஒப்பந்தம் 1953 ஜூலை 27 ஆம் தேதி கையெழுத்தானது. இப்படியான உலக சூழலில்தான், இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுத்தது. அணுகுண்டுகளுக்கு எதிராகவும், சோசலிச நாடுகளுடன் கலாச்சார பரிவர்த்தனை, தொழில்நுட்ப பரிவர்த்தனை, வணிக தொடர்புகள் என்று பல்வேறு கவனிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. (இந்த சமயத்தில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ராணுவத்தளத்தை பாகிஸ்தானில் அமைத்தது)

உள்நாட்டில் இந்திய அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகள் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளின் நலன்களை முன்னெடுப்பதாக அமைந்தன. தொழில்துறையும், வேளாண் துறையும் சந்தித்த நெருக்கடிகள் அதிகரித்தன. நிலவுடைமைக்கு முடிவுகட்டுவதில் இந்திய அரசிற்கு விருப்பமே இல்லை. வகுப்புவாதமும் ஒரு முக்கியமான பிரச்சனையாக எழுந்தது. இவற்றிற்கு எதிராக ஒரு புரட்சிகர திட்டம் தேவைப்பட்டது.

மேலே சொன்னது ஒரு இரட்டை நிலையாகும். உலக அரங்கில் முற்போக்கு, உள்நாட்டு சூழலில் பிற்போக்கு என்று தோற்றமளித்த இந்திய அரசின் நிலைப்பாடு அதில் இருந்துதான் எழுந்தது. இதனைப் பற்றி குறிப்பிடும் இ.எம்.எஸ் – இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ‘ஏகாதிபத்தியத்தோடு முரண்பாடுகள் இருந்தன. உள்நாட்டில், இந்திய மக்களுடனும் அதற்கு முரண்பாடுகள் உள்ளன’ – என்று விளக்குகிறார்.

ஆரம்பத்திலேயே மேற்சொன்ன புரிதல் கட்சிக்குள் வரவில்லை. “அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலையை ஏற்கெனவே மேற்கொண்டுவிட்ட அரசு, காலப்போக்கில் படிப்படியாக அதன் உள்நாட்டுக் கொள்கைகளிலும் முற்போக்காக மாறும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது…” என்பதையும் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அயல்துறைக் கொள்கையில் காணப்பட்ட முற்போக்கான அம்சங்களுக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவில்லை…” ஆனால் இந்த “முற்போக்குத் தன்மை அரசின் உள்நாட்டுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும் என்ற வாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.” என்கிறார்.

அனைத்தையும் விவாதித்த மாநாட்டு, இந்தியாவின் உள்நாட்டுச் சூழலை கணக்கில் கொண்டு, தனது மதிப்பீட்டையும் நிலைப்பாட்டையும் மேற்கொண்டது. அதாவது, அயல்துறைக் கொள்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ற சுயேட்சையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

முதலாளித்துவ நலன்கள்
முதலாளித்துவ வர்க்கத்தினர், நிலப்பிரபுக்களோடும் இதர பிரிவினரோடும் முரண்பட்டார்கள். நாட்டை வேகமாக தொழில்மயமாக்க வேண்டும் என்று விருபினார்கள். ஆனால், பிற்போக்கு சக்திகள் இதற்கு எதிராக நின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ‘நிலவுடைமை எதிர்ப்பில் அரசோடு ஒத்துழைக்க முடியும். ஆனால், அரசுக்கு ஒரு புரட்சிகரமான எதிர்ப்பு என்பதே கட்சியின் நிலையாக இருந்தது.’

‘அதாவது புரட்சிகர தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினருக்கும் இடையே கூட்டு என்ற லெனினிய நடைமுறையை கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அகில இந்திய மாநாட்டிலும் அதற்குப் பிறகும் கடைப்பிடித்தது’ என்கிறார் இ.எம்.எஸ். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் மேற்சொன்ன நிலைப்பாட்டை ஏற்றார்கள்.

‘இந்திய அரசியல் பற்றி வெளிநாட்டுத் தோழர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் கூட, இந்திய கட்சி இங்கே கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை, தானே உருவாக்கிக் கொண்டது’

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

1952 கல்கத்தா பிளீனம்:
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் இருந்து ஒரு சதவீதத்தை கட்சிக்கு லெவியாக வழங்குவார்கள். அதே போல கட்சி உறுப்பினர்களுக்கென்று உரிமைகளும், கடமைகளும் உள்ளன. கட்சியில் ஒருவர் உருப்பினராகும் முன்பு அடிப்படைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற உட்கட்சி விசயங்களை 1952 கல்கத்தா பிளீனம் (சிறப்பு மாநாடு) விவாதித்தது. கட்சி விரிவாக்கத்தையும், கட்சி ஒற்றுமையும், தத்துவார்த்த – அரசியல் புரிதலை வலுவாக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன உட்கட்சி நடைமுறைகளைப் பற்றிய விரிவான விவாதமும் முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அதில் தோழர் இ.எம்.எஸ், ரன்னென் சென் மற்றும் ராமமூர்த்தி ஆகிய தோழர்களை உள்ளடக்கிய குழு, அமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளை வழங்க பணிக்கப்பட்டது. மூன்றாவது மாநாட்டில் தோழர் இ.எம்.எஸ் முன்வைத்த பரிந்துறைகள் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (India's path of revolution!) Web series 5 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 5 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (இந்தியாவின் புரட்சிப் பாதை !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்




1964 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டது. அது தனது திட்டத்தில் ‘மக்கள் ஜனநாயக’ புரட்சி என்ற தெளிவான தொலைநோக்கினை முன்வைத்தது என்பதை நாம் அறிவோம்.

உண்மையில், 1951 ஆம் ஆண்டில், முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற இலக்கினை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துக் கொண்டது என்பதை இ.எம்.எஸ் தனது நூலில் விளக்குகிறார். 1964 ஆம் ஆண்டில் கட்சி பிளவுற்ற பிறகு சி.பி.ஐ ‘தேசிய ஜனநாயகம்’ என்ற புதிய கோட்பாட்டினை உருவாக்கியது. உண்மையில் அதுவொரு வர்க்கப் போராட்ட திட்டமாக இல்லை. வர்க்க சமரசத்திற்கே வழிவகுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியோ ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற சரியான இலக்கையே தொடர்ந்து முன்னெடுத்தது.

இந்த இலக்கு, 1951 அக்டோபரில் கல்கத்தாவில் நடந்த சிறப்பு மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒன்றாகும். அப்போது ஏற்கப்பட்ட ஆவணத்தில் 53 பகுதிகள் இருந்தன.’நாட்டின் அனைத்து கனிம சுரங்கங்களும், கப்பல் கட்டும் தளங்களும், ஆலைகளும், பண்ணைகளும் தேசியமயமாக வேண்டும்’ என்ற புரட்சிகரமான அறைகூவலை விடுத்த அந்த திட்ட ஆவணத்தின் பகுதிகளை விளக்கி இ.எம்.எஸ் குறிப்பிடும் கருத்துக்களை பார்ப்போம்.

மக்கள் ஜனநாயகம் என்றால் என்ன?
அ) மக்கள் அனைவருக்கும் உண்மையான – நம்பகமான – விரிவான ஜனநாயக உரிமைகளை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தது போல பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் உறுதிப்படுத்துவது;
ஆ) அந்த ஜனநாயக அமைப்பில் தொழிலாளி மற்றும் விவசாயி மக்களின் தலைமையை உறுதிப்படுத்த வேண்டும்;
இ) அரசு மற்றும் அரசியல் அமைப்பின் தலைவனாக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும்

‘முதலாளிகளுக்குக் கூட விதிவிலக்கு இல்லாமல் பெரும்பான்மை மக்களாகிய தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துகிற ஒரு அரசு அமைப்பைத் தான்’ மக்கள் ஜனநாயகம் முன்வைக்கிறது. இந்த முடிவு நமது நாட்டின் வரலாற்று சூழலை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

தேர்தல்களில் பங்கேற்பு
மேலும் அந்த ஆவணம் தேர்தல்களை பற்றியும் பேசியது. ‘கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல்களைப் பயன்படுத்தி, பெரும்பான்மை பெற்று, ஆட்சியதிகாரத்தில் நீடிக்க முதலாளித்துவ வர்க்கம் அனுமதிக்கும் என்று முடிவு செய்து விடக் கூடாது. மாறாக, நாடாளுமன்ற அமைப்புகளையும் நிர்வாக ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் பலப்படுத்திட கம்யூனிஸ்ட்டுகள் முயல்கிறார்கள் என்பதை முதலாளித்துவ வர்க்கத்தினர் காண்பார்களானால் அதைத் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் – பலப்பிரயோகம் உட்பட – அவர்கள் மேற்கொள்வார்கள். அப்படியரு கட்டம் வருமானால், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி அதைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்திட வேண்டும்’

இது ஒரு எச்சரிக்கை. இதன் பொருளை கீழே காணும்படி விளக்குகிறார் இ.எம்.எஸ்., “நாடாளுமன்ற அமைப்புகளின் மூலம் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்கள் ஆதரவை வென்றெடுப்பதற்கான போராட்டங்களும் – இந்த போராட்டங்கள் மற்றும் ஆதாயங்களின் மூலமாக ஒரு புரட்சிகர இயக்கத்தை வலுவாகக் கட்டுவதும் – இந்தியப் புரட்சிப் பாதையின் துவக்கமாகும். ஆனால் முதலாளித்துவ படைபலத்துக்கு எதிராக புரட்சிகர வழிமுறைகள் மூலமாகப் போராட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் அதையும் செய்தாக வேண்டும்.”

தேர்தல்களில் பங்கேற்பது மட்டுமல்ல, பெரும்பான்மை பெறுகிற நேரங்களிலும் இடங்களிலும் அரசுப் பொறுப்பை ஏற்பதும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் பணியாகும். சோவியத் யூனியனிலோ, சீனாவிலோ, இருந்திராத, இந்தியாவுக்கே உரிய நிலைமையாக இது உள்ளது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிடைத்த பல்வேறு அனுபவங்களை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ், “இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமும் முயற்சிகளும் சோவியத்தைப் போலவோ சீனாவைப் போலவோ இதர சில சோசலிச நாடுகளைப் போலவோ பிரதியெடுத்தார்ப் போன்ற அரசு அமைப்பை ஏற்படுத்துவது அல்ல” என்பதையும் தெளிவாக்குகிறார்.

மேற்சொன்ன ஆவணம் கொடுத்த பார்வையின் அடிப்படையிலேயே 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலிலும், பிற தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்தார்கள். விடுதலைக்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியின் பகுதி என்ற முறையிலும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்தப் பெயரிலும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

இடது, வலது திரிபுகள்:
மேலே குறிப்பிட்ட ஆவணம், சில திரிபுகளைப் பற்றிய எச்சரிக்கையையும் முன்வைத்தது. பிற்காலத்தில் அத்தகைய திரிபுகளை எதிர்த்து போராட வேண்டி வந்ததை நாம் அறிவோம்.

‘தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி என்பது அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்’ ‘கோடிக்கணக்கில் உழைக்கும் மக்கள் பங்கேற்கிற தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் அன்றாடப் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்தான் உழைக்கும் மக்களின் ஜனநாயக இயக்கத்தின் ஆற்றல்மிகு அடித்தளமாகும்.’ என்பதை ஆவணம் தெளிவாக குறிப்பிட்டது.

· அவ்வாறு அல்லாமல், மக்கள் போராட்டங்களில் உறுதியாகக் காலூன்றாமல், முதலாளித்துவ நாடாளுமன்ற நிர்வாக அமைப்புகளில் செயல்படுவதும் தேர்தல்களில் பங்கெடுப்பதையும் மட்டுமே முன்னெடுத்தால் அது ஒரு வலதுசாரி திரிபு நிலைமையில் கொண்டு போய் தள்ளிவிடும்.

· மக்களைத் திரட்டாமல் அவர்களது போராட்டங்களுக்குத் தலைமை ஏற்காமல் முதலாளித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிவந்தால் அது இடது சாரி திரிபுவாதமாக சுருங்கிப் போகும்.

· அதே போல வர்க்கங்களின் சக உறவுகள் மற்றும் அரசியல் கூட்டணிகள் தொடர்பான பிரச்னைகளிலும் ஏற்படக்கூடிய வலது-இடது திரிபுகள் பற்றிய எச்சரிக்கைகளும் அதில் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, மக்கள் ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினரும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் கூட, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களும், குழுக்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது பகைமை கொண்டவர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது. எனவே முதலாளித்துவ பிரிவினர் தம்முடைய சொந்த வர்க்க நலன்களுக்காக ஜனநாயக லட்சியத்துக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளது. இது குறித்து பாட்டாளி வர்க்கமும் அதன் அரசியல் கட்சியும் தொடர்ந்து விழிப்புடன் இருந்ததாக வேண்டும்.

இதனை இ.எம்.எஸ் விளக்கும்போது சில உதாரணங்களையும் தருகிறார். “விவசாய அரங்கில், பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கத்தை நடத்துவதற்குக் கட்சி முயல்கிறது. ஆனால், பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினர் சில நேரங்களில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக மாறக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இது குறித்தும் விழிப்புடன் இருப்பது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பாகும். ஆனால் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயி மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டே, கட்சி இதனைச் செய்ய வேண்டியுள்ளது.”

சுருக்கமாக, நிலவுடைமை சக்திகளையும், ஏகாதிபத்திய சக்திகளையும், ஏகபோக பெருமுதலாளிகளையும் எதிர்த்து ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலை எடுக்கக்கூடிய எல்லாரோடும் ஒத்துழைக்க வேண்டும்; அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும், கூட்டாளிகளின் சமரச முயற்சிகளை எதிர்த்திட வேண்டு. இதுதான் மக்கள் ஜனநாயகத் தொலைநோக்குப் பார்வையின் பொருள் ஆகும்.

ஆம்‘நமது புரட்சிப் பாதை… இந்தியாவின் சொந்தப் பாதை, அதன் வடிவத்தை இந்திய மக்களே முடிவு செய்வார்கள்’

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (A time of chaos!) Web series 4 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (குழப்பங்கள் அலையடித்த காலம் !) 4

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்




கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, கல்கத்தாவில் இரண்டாவது மாநாடு தொடங்கியது. அப்போது இந்தியா விடுதலை பெற்று சில மாதங்களே ஆகியிருந்தன.

உலக அரங்கில் பாசிச சக்திகளை வீழ்த்துவதில் சோசலிச சோவியத் ஒன்றியம் முக்கியமான பங்கினை ஆற்றியது. ‘மக்கள் யுத்தம்’ பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது என்பதை காலம் நிரூபித்தது. மேலும், கட்சி எதிர்பார்த்ததை போலவே உலகில் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு செலுத்தும் காலனி ஆதிக்க முறை முடிவுக்கு வருவதற்கும் அது வழிவகுத்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், இந்தியாவில் நடந்த வரம்பற்ற ஏகாதிபத்திய சுரண்டல் மக்களை பஞ்சத்தில் தள்ளியது. அதற்கு எதிராக, மக்களோடு துணையாக கம்யூனிஸ்ட் கட்சி நின்றது. 1946 ஆம் ஆண்டில் ‘இறுதி தாக்குதலுக்கான’ தீர்மானத்தை கட்சி நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து தெபாகா போராட்டம், தெலங்கானா போராட்டம் (1946-1951), புன்னப்புரா-வயலார் போராட்டம், பீகார் – உ.பி மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம், அசாம் பழங்குடியினரின் ஆயுதமேந்திய தற்காப்புப் போர் ஆகியவை எழுச்சிகளாக வெடித்தன. இவைகளில் பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வீரச் சமர் புரிந்தார்கள் கம்யூனிஸ்டுகள்.

கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாகவும், இந்திய தேசிய ராணுவத்தினர் விடுதலையைக் கோரியும் மக்கள் எழுந்து அலையடித்தன.

விடுதலை பற்றிய மதிப்பீடு:
மேற்சொன்ன பின்னணியிலேயே இந்திய விடுதலை சாத்தியமானது. ஆனால், ஏகாதிபத்தியத்துடனான சமரசத்தின் விளைவாக இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நிகழ்த்தி முடிக்கப்பட்டது. (பிரிவினையின் போது, வகுப்புவாத சக்திகளின் கலவர முயற்சிகளை தடுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்றது).

இந்தியா பெற்ற விடுதலையை எப்படி மதிப்பிடுவது? ஆள்வது யார்? ஆளப்படுவது யார்? இனி கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? என்ற கேள்விகள் இயல்பாக எழுந்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இதனை விவாதித்து, “நாட்டின் சுதந்திரம் ஒரு யதார்த்தமான நிலையாகி விட்டதால் கட்சி தன் சக்தி முழுமையையும் செலுத்தி, மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிட சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல வேண்டும்” என்ற முடிவிற்கு வந்தது என்பதை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு வலுவான பிரிவு இந்த முடிவில் இருந்து மாறுபட்டதையும் குறிப்பிடுகிறார்.

“இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம் அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அதிகாரப்பூர்வமாக ஆட்சியதிகாரத்தைக் கைவிட்டாலும் கூட நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் உதவியோடு மறைமுகமாக ஆட்சியில் நீடிக்கவே செய்கிறார்கள்” என்று மதிப்பீடு செய்ததுடன், “புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தொலைநோக்குடன் ஒரு புரட்சிகர சக்தியாக கட்சி செயல்பட வேண்டும்” என்று அவர்கள் வாதிட்டார்கள். இந்த கருத்துக்கள் கட்சிக்குள் மோதிக்கொண்டன.

மேலும் தெலங்கானாவில் கம்யூனிஸ்டுகளில் தலைமையில் நடந்துவந்த எழுச்சியில், 2 ஆயிரம் கொரில்லா வீரர்களும், 10 ஆயிரம் தன்னார்வளர்களும் 3 ஆயிரம் கிராமங்களை கைப்பற்றி நிர்வகித்துவந்தார்கள். அங்கே 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களிடம் மறுவினியாகம் செய்யப்பட்டன. இப்படியான சூழலில், அதுவரை ஹைதராபாத் நிஜாமின் ஆளுகையில் இருந்த அந்த பகுதிகளில் 1948 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் நுழைந்து, தனது ஆளுகையில் எடுத்துக் கொண்டதும் இந்த காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

உலக நிலைமைகளில் மாற்றம்:
உலகப்போர் முடிந்தவுடனே, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கெடுபிடிகளை உருவாக்கி முன்னெடுத்தது (பனிப்போர்) அமெரிக்கா. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த போக்கிற்கு எதிரான சோசலிச நாடுகள் உறுதியான நிலையை எடுத்தார்கள். ஆனால் உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் இதில் மாறுபட்டார்கள். பாசிச எதிர்ப்பு போரில் ஏற்பட்ட ஒற்றுமையை தொடர்வதற்காக நெளிவு சுழிவாக இயங்கவேண்டும் என்றார்கள். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏர்ல் பிரௌடர் அங்கு கட்சியைக் கலைத்து விடவும் முடிவு செய்தார்.

இப்படியான திருத்தல்வாத போக்கின் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது. (1943 ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்டுவிட்டது என்பதால் தத்துவார்த்த குழப்பங்களை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அருகியிருந்தன).

கட்சிக்குள் அதிரடியான மாற்றங்கள்:
மேற்சொன்ன சூழல்கள் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் எதிரொலித்தன. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி, திருத்தல்வாத போக்கின் பிரதிநிதி என்ற விமர்சனத்திற்கு ஆளானார். அது தொடர்பான தீர்மானத்தை பி.டி.ரணதிவே முன்மொழிந்தார். பாகிஸ்தான் தொடர்பாக ஒரு தீர்மானத்தை பவானி சென் முன்மொழிந்தார். மாநாட்டின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், மத்தியக் குழுவிலும் இருந்தும் ஜோசி நீக்கப்பட்டார். பி.டி. ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர எதிரிநாடுகளாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியத்தின் விருப்பம் என்பதை அந்த மாநாடு சுட்டிக்காட்டியது.

குழப்பங்களின் ஆண்டுகள்:
ஆனால், கட்சியின் இரண்டாவது மாநாட்டில் தேர்வான மத்தியக்குழு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கூடவே இல்லை. அரசியல் தலைமைக்குழு ஒருமுறை மட்டுமே கூடியது. அந்த மத்தியக்குழுவின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே, மத்தியக் குழுவின் முழுமையான சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி தன்னை சுய விமர்சனம் செய்துகொண்டதுடன் பி.டி.ரணதிவே பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதுடன், இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரின் செயல்பாடுகளை பரிசீலிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.

தெலுங்கானா போராட்டத்தின் ஒரு முன்னணி தலைவரான சி.ராஜேஸ்வரராவ் பொதுச் செயலாளராகவும் பி.சுந்தரய்யா, எம். பசவபுன்னையா மற்றும் ஆந்திராவின் வேறு சில தோழர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு புதிய மத்திய குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மத்திய குழு ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. பி.டி.ஆர்., தலைமை போன்றே இந்த தலைமையும் தனிக் குழுவாதத்தன்மை கொண்டதாக விமர்சனத்திற்கு ஆளானது.

பிறகு, மேற்சொன்ன இரண்டுவிதமான போக்குகளுக்கு எதிராக ஒரு புதிய மத்தியக் குழுவும், அரசியல் தலைமைக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன் செயற்குழு அமைப்பாளராக அஜாய் கோஷ் முடிவுசெய்யப்பட்டார் என்கிறார் இ.எம்.எஸ்.

சோவியத் ரஷ்யாவின் உதவி:
விடுதலை பெற்ற இந்தியாவிற்கு, சோவியத் ரஷ்யாவின் உதவி தேவைப்பட்டது. அதைப் போலவே, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த சிக்கலை தீர்க்கவும் சோவியத் கம்யூனிஸ்டுகள் கைகொடுத்தார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்கள் அஜாய் கோஷ், எஸ்.ஏ. டாங்கே, பசவபுன்னையா, ராஜேஸ்வரராவ் ஆகியோர், ஸ்டாலின் தலைமையிலான சோவிய ரஷ்யாவின் பிரதிநிதிகள் குழுவை, அங்கு சென்று சந்தித்தார்கள். உரையாடினார்கள்.

இந்த சந்திப்பில், கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று ஒரு திட்ட ஆவணமும், கொள்கை அறிக்கையும் உருவாக்குவது அவசியம் என்று முடிவானது. அதற்கான உதவியை செய்த சோவியத் ஒன்றியம், இந்த ஆவணங்களை உருவாக்குவதற்கான மார்க்சிய – லெனினிய அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கு தெளிவு உண்டு ஆனால் இந்தியாவின் கள நிலைமைகள் குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. எனவே இந்த ஆவணங்கள், இந்தியாவில் கம்யூனிஸ்டுகளால் விவாதிக்கப்பட்டு திருத்தவோ, ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

எதிர்க் கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சி:
அந்த ஆவணங்கள் விவாதிக்கப்பட்டு திருத்தங்களோடு ஏற்கப்பட்டன. எனினும், கட்சிக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் சாதாரணமாக அடங்கவில்லை. அந்த குழப்பம் நடைமுறை பணிகளோடு சேர்த்து நீண்டகால இலக்கான சோசலிசத்தை எவ்வாறு எட்டுவது என்ற பாதையை தீர்மானிப்பதிலேயே பாதிப்பை ஏற்படுத்தியது.

மறுபக்கம், மக்களிடையே செல்வாக்கு அதிகரித்தது. விடுதலைக்கு முன்பே கட்சியால் தலைமைதாங்கப்பட்ட அடுக்கடுக்கான போராட்டங்களும், அளப்பரிய தியாகங்களும் தனித்துவமான இடத்தை கட்சிக்கு ஏற்படுத்தின. மற்ற எல்லா எதிர்க் கட்சிகளும், நாடாளுமன்றத்துடன் தங்கள் பணிகளை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களோடு நின்றது.

வீரம் செறிந்த போராட்டங்களை வழிநடத்திக் கொண்டேதான் தலைவர்கள் இந்த தத்துவார்த்த போராட்டத்தையும் முன்னெடுத்தார்கள். இந்த பின்னணியை விவரித்து எழுதும் தோழர் இ.எம்.எஸ் கூட மாநாடுகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்ததையும். பிறகு கூட்டான முடிவுகளுக்கு வந்து சேர்ந்ததையும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (Anti-fascism and national racial rights) Web series 3 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும்) 3

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்




(முதல் அகில இந்திய மாநாடு)

கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்த ‘திட்ட ஆவணம்’ மற்றும் அவ்வப்போது உருவாக்கப்படவேண்டிய நடைமுறைக் கொள்கை ஆவணங்களை நிறைவேற்றுவது, கட்சியின் மாநாடுகள்தான் என்பதை பார்த்தோம். எனவே, கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டு சூழல் குறித்து இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் வெளிச்சத்தில் பார்ப்போம்.

உலகப்போரும், பாசிச அபாயமும்:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது, அதுவரை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முனைப்புடன் இயங்கிவந்த கம்யூனிஸ்டுகள், சுயேட்சையான அரசியல் சக்தியாக வளரத் தொடங்கியிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பார்வேர்ட் பிளாக் ஆகிய சோசலிஸ்ட் கட்சிகளும் உருவாகியிருந்தன. இரண்டாம் உலகப்போரில், பாசிச அபாயம் உலகையே அச்சுருத்தியது.

இந்த நேரத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஆதரவாக தலைமறைவாக இயங்கியது, பார்வேர்ட் பிளாக் கட்சியோ, பாசிச முகாமின் உதவியைப் பெற்று இந்தியாவை விடுதலை செய்திட முடியுமா என்பதாக இயங்கியது. ஜப்பானின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ, பாசிச அபாயம் பற்றிய எச்சரிக்கை உணர்வோடு, புரட்சிகரத்தன்மை குன்றாமல் இயங்கியது. எனவே நாட்டில் இருந்த இரண்டு இடதுசாரி கட்சிகளின் போக்கில் இருந்தும் அது மாறுபட்டது. இதனால் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி தனிமைப்படும் சூழல் உருவானது என்கிறார்’

முதல் மாநாட்டின் விவாதப் பொருள்:
பம்பாயில் நடைபெற்ற முதல் அகில இந்திய மாநாடு இந்த பின்னணியில்தான் நடந்தது. அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட அணுகுமுறை “ராய் கோஷ்டியைப் போன்று பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பதாக இருக்கவில்லை. மாறாக, பாசிச எதிர்ப்பு போருக்கு ஆதரவாக இந்திய மக்களைத் திரட்ட வேண்டுமானால், நாட்டிற்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டால்தான் அது சாத்தியம் என கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகத் தெரிவித்தது. அதற்காக தேசிய இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களுடன் பிரிட்டிஷ் அரசு பேச்சு வார்த்தைகளைத் துவக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.” என்கிறார் இ.எம்.எஸ்.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியோ, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தது. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி முன்நின்றது. சிறைகளில் இருந்து தேசிய தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றது.

அடிப்படை என்ன?
“பாசிச எதிர்ப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உலக நிலைமையைப் பயன்படுத்தி, இந்திய சுதந்திரத்தை அடையும் நோக்கத்துடன் புரட்சிகரமான முறையில் இந்திய மக்களை திரட்டுவது” கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட அணுகுமுறையாகும். கட்சியின் முதல் மாநாடு மேற்கொண்ட இந்த அணுகுமுறையில் இருந்து காங்கிரசின் அணுகுமுறை வேறுபட்டதாக அமைந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் துவக்கிய காங்கிரஸ் தலைமை, இதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் விதத்தில் நிர்ப்பந்தம் தரவே விரும்பினார்கள்.

மூன்று கட்டங்கள்:
உலகப் போர் தொடங்கும்போது, அது இருவேறு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான போராக இருந்தது. இந்த சூழலை பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு பேரம் பேசுவதல்ல மாறாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு.

1941 ஆம் ஆண்டு காலத்தில், நாஜி ஜெர்மனியானது சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. சோசலிச நாடுகளும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இணைந்து பாசிசத்தினை வீழ்த்துவதற்கான போரை முன்னெடுத்தார்கள். எனவே, அது மக்கள் யுத்தம் என்ற தன்மையை அடைந்தது. இப்படிப்பட்ட சூழலிலும், மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் என்ற கம்யூனிஸ்டுகளின் அடிப்படை நிலைப்பாடு மாறவில்லை. ஆனால் மக்களின் புரட்சிகர ஆற்றலைத் தட்டியெழுப்ப வேண்டுமானால் சோவியத் யூனியனும் சீனாவும் அங்கம் வகித்த பாசிச எதிர்ப்பு முகாமின் வெற்றி அவசியம். அந்த புரிதலுடன் மக்களை அணி திரட்டியாக வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தினர்.

மூன்றாவது கட்டத்தில், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. காங்கிரஸ் கட்சியுடன் முஸ்லிம் லீக் பேசியது. இந்த நடைமுறைகளின் விளைவாக, இந்தியப் பிரிவினைக்கான உடன்பாடே ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் இயக்கமோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒரு பேரத்திற்குச் செல்வதற்கு மாறாக மக்களைத் திரட்டும் புரட்சிகரப் போராட்டத்திற்கான திட்டத்தை முன்வைத்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொலைநோக்கு இயக்கங்களின் பலனாக, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களும் விவசாயிகள் போராட்டங்களும் அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டங்களும் வெடித்தன. அவற்றின் உச்சகட்டமாக தெலுங்கானா, புன்னப்பரா-வயலார் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டங்கள் நடந்தன.

மேலே சொன்ன மூன்று கட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த தொழிலாளி வர்க்க புரட்சிகர) அணுகுமுறைக்கும், காங்கிரசின் முதலாளித்துவ (பேரம் பேசும்) அணுகுமுறைக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரசின் முதலாளித்துவ அணுகுமுறைக்கு ஒரு தற்காலிக வெற்றி கிடைத்தது என்றாலும், இறுதி வெற்றி கம்யூனிஸ்டுகளின் தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கே கிடைத்தது.

நடைமுறை பிழைகள்:
கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு எடுத்த நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கும் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது சில தவறுகள் நேர்ந்தன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த தவறுகளின் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளிடமிருந்து கட்சி தற்காலிகமாகத் தனிமைப்பட்டிருக்க நேர்ந்தது என்கிறார். கட்சியின் இரண்டாவது மாநாடு இதனை சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்தது என்கிறார்.

பாசிச சக்திகளை எதிர்ப்பதில், மிகத் தெளிவான பார்வையுடனும், உலகலாவிய ஏகாதிபத்திய இயக்கத்தின் அங்கமாகவும் கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்பட்டு வருவது இப்போதும் மனதில் நிறுத்தவேண்டியது ஆகும்.

பல தேசங்களின் நாடு:
அதே கட்டுரையில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் கவனப்படுத்தும் இன்னொரு நிலைப்பாடு, பல தேசிய இனங்களின் நாடாகவே இந்தியா அமைய முடியும் என்பதை பற்றியது.

கட்சியின் முதல் மாநாட்டிலேயே “இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். ஆனால் அதன் பல தேசிய இனத்தன்மை என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மொழி மற்றும் கலாச்சார வாழ்வின் அடிப்படையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக்கொண்ட ஒரு நாடு தான் இந்தியா. இந்த யதார்த்த நிலைமையை அங்கீகரித்து சுயாட்சி உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஒரு புதிய ஜனநாயக (கூட்டமைப்பு) அரசு கட்டப்பட வேண்டும்.” என தெளிவாக எடுத்துரைத்தது.

மேலும் “மாநிலங்களுக்கு விரிவான அதிகாரங்களை அனுமதிக்கிற ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்பதே நமது கட்சியின் முதல் மாநாட்டிலேயே எடுக்கப்பட்ட பெருமைக்குரிய நிலைப்பாடு என்கிறார் இ.எம்.எஸ்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறியது. நாடாளுமன்றத்திலும் நான்கு மாநில சட்டமன்றங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து, ஒரு மாநிலத்தின் (கேரளம்) ஆளும் கட்சி என்ற நிலையை எட்டியது அதே போல சோசலிச முகாமை பாதுகாப்பது, அவசியம் என்ற கருத்தும், இந்தியாவின் முதல் அரசாங்கத்திற்கு சோசலிச நாடுகளே உற்ற நண்பராக இருந்தது என்ற உண்மையின் மூலம் நிரூபனமானது.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (Individual, Project, Philosophy) Web series by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்




கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளும், விவாதங்களும் தனித்துவமானவை என்கிறபோது இரண்டு பொதுவான கேள்விகள் எழுகின்றன.
1) திறன் மிக்க தலைவர்களையும், அவர்களின் பங்களிப்பையும் எப்படி வகைப்படுத்துவது?
2) கூட்டாக முடிவுகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைவது எது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டம் உருவான பின்னணி என்ற நூலில், எம்.பசவபுன்னையா ஒரு மாறுபட்ட சூழ்நிலையை முன்வைத்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்றால் அவர் ஆணோ, பெண்ணோ “முதலில் கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இரண்டாவதாக கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். – இந்த வரலாற்றின் விசித்திரமான ஒரு விசயம் என்னவென்றால் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் அதற்கென்று ஒரு திட்டமோ, அமைப்புச் சட்டமோ, சில சமயங்களில் இவை இரண்டுமே இல்லாமல் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தார்கள்”

செயல் திட்டத்திற்கான போராட்டம்:
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவான பின்னணியையே இயக்கவியல் அடிப்படையில்தான் பார்க்க முடியும் என்பதை பசவபுன்னையாவின் எழுத்துக்கள் உணர்த்தின. முதலில் அவர் குறிப்பிட்ட சில முக்கியமான விபரங்களை பார்ப்போம்.

· 1920 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவானது.
· 1928 ஆம் ஆண்டில் ‘செயல் தளத்திற்கான வரைவு’ அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசியல் தீர்மானங்களும், கொள்கை அறிக்கைகளும் கட்சிக்கு வழிகாட்டிவந்தன.
· கட்சி தடை செய்யப்பட்ட சூழல்களில் கட்சியின் கீழ்மட்ட மாநாடுகளோ அகில இந்திய மாநாடுகளோ கூட முடியவில்லை. (1936-39) கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் மத்திய குழுவும் செயல்பட்டன – கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாடு கூட முடியவில்லை.
· 1942ம் ஆண்டில்தான் கட்சி மீதான தடை விலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து – ஒரே ஆண்டுக்குள் – 1943 மே மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு பம்பாய் நகரில் கூடியது.
· 1951 ஆம் ஆண்டில், கட்சி திட்டத்திற்கான நகல் உருவாக்கப்பட்டு சுற்றுக்குவிடப்பட்டது.
· 1953 ஆம் ஆண்டு நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு அந்த திட்டத்தை ஏற்று செயல்படுத்தினார்கள். ஆனால்
· 1955 ஆம் ஆண்டில் அந்த திட்டத்தின் பொருத்தப்பாடு விவாதத்திற்கு உள்ளாகியது.
· 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது அகில இந்திய மாநாட்டில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதென்று முடிவு எடுக்கப்பட்டது.
· 1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவாக்கப்பட்டது.

மேற்சொன்ன விபரங்களை மட்டும் தனியாக பார்க்க முடியாது. இத்தனை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அளப்பறிய தியாகங்களைச் செய்து முன்னேறியும் வந்தது.

வரலாற்றுச் சுவடுகள்:
1920களில் கம்யூனிஸ்டுகளின் கடும் உழைப்பால் தொழிற்சங்கங்கள் உருவாகின. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் என போராட்டங்கள் 1928-29 காலகட்டத்தில் அலையாக எழுந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியின் சதி வழக்குகளின் மேடைகளை தங்கள் பிரச்சார மேடையாக மாற்றிக் கொண்டு கம்யூனிஸ்டுகள் துணிச்சலுடன் இயங்கினார்கள். கட்சி தடை செய்யப்பட்டது.

1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது (1936). இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள்.

தெபாகா எழுச்சி, புன்னப்புரா வயலார், தெலங்கானா ஆயுதப் போராட்டம் ஆகிய வரலாறுகள் அளவிலடங்கா தியாகங்களின் வெளிப்பாடுகளாக அமைந்தன. 1957 ஆம் ஆண்டில், தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சரவை பொருப்பேற்றது.

லெனினின் வழிகாட்டுதல்:
இந்தியா உள்ளிட்ட காலனி ஆதிக்க நாடுகளில் நடக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அகிலம் நடத்திய விவாதங்களும், முன்வைத்த வழிகாட்டுதல்களும்தான் அந்த காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அச்சாணியாக அமைந்தன. இ.எம்.எஸ் அதனை குறிப்பிடுகிறார், “லெனின் தலைமையிலிருந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமை பின்வரும் மூன்று முடிவுகளுக்கு வந்தது.

மூன்று முக்கிய முடிவுகள்
முதலாவதாக-இந்தியா, சீனா உள்ளிட்ட கீழை நாடுகளில் உள்ள முக்கியமான உடனடிப் பணி என்பது ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் என முடிவு செய்யப்பட்டது. எனவே தேசிய முதலாளிகளுக்கும் ஒரு பங்குள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியாக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்த இயக்கத்தில் பிரதானமான முக்கிய சக்தி விவசாயிகள்தான்…எனவே விவசாயிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே ஒரு உறுதியான கூட்டை உருவாக்கினால் மட்டுமே தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளிடையே உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவினருக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல், விவசாயிகளின் புரட்சி பற்றிய தொலைநோக்கு இல்லாமல், முதலாளிகளுடன் ஒரு கூட்டினை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் சந்தர்ப்பவாதத்துக்கே இட்டுச் செல்லும்…

மூன்றாவதாக இந்தியா முதலான கீழை நாடுகளில் தொழிலாளி வர்க்கம் ஒரு பலவீனமான சமுதாய சக்திதான். எனினும், இருக்கக்கூடிய தொழிலாளி வர்க்க ஊழியர்களும், தேசிய புரட்சிக்காரர்களின் முன்னணிப் படையினரும் உள்ளிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டும்…“

தனிநபர்களின் பாத்திரம்:
மார்க்சிய தத்துவத்திலும், உழைக்கும் மக்களின் விடுதலையின் மீதும் மாறாப் பற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் – தத்துவத்தின் மனித வடிவங்களாக இயங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாற்றின் வளர்ச்சி விதிகள் மனிதர்களின் ஊடாகத்தான் செயல்படுகின்றன. எனவே, தனிச் சிறப்பான தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களுக்கு வழிகாட்டி இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.

அதே சமயம் அந்த தலைவர்கள், கட்சி திட்டத்திற்கான அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். அந்த போராட்டத்தின் விளைவாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உருவானது. திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, வரலாற்றின் வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப அதனை அமலாக்கும் பணிகளில், தனித்துவம் மிக்க தலைவர்களின் பாத்திரம் தொடர்ந்து வெளிப்பட்டது.

கூட்டான முடிவுகளுக்கு அடிப்படை:
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமும், அமைப்புச் சட்டமும் கூட்டான முடிவுகளை மேற்கொள்வதற்கான அடிப்படையான ஆவணங்கள் ஆகும்.

கட்சியின் திட்டம் என்பது, ஒரு நாட்டின் புரட்சிப் போராட்டம் எந்தக் கட்டத்தில் உள்ளது, அதன் தன்மை எப்படி அமைய வேண்டும் என்பதை தெளிவாக்க வேண்டும். இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கட்டத்தை நாம் கடந்துவிட்டோம். இப்போது மக்கள் ஜனநாயக புரட்சி என்ற கட்டத்திற்கு வந்துள்ளோம். மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க தேவையான அணிச் சேர்க்கை எது என்பதையும், யாருக்கு எதிரான போராட்டமாக இது அமையும் என்பதையும் கட்சியின் திட்டம் விளக்குகிறது. அதாவது கட்சி திட்டம் முன்வைப்பது இந்த வரலாற்று காலகட்டத்திற்கான இலக்கு ஆகும்.

அந்த இலக்கை நோக்கிய பயணம் ஒரே நேர்கோட்டுப் பாதையாக அமையாது. அதனால்தான் “மார்க்சிய லெனினிய சிந்தனைகளால் வழிநாடத்தப்படுகிற, பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர கட்சி … குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆழமான தன்மைகளை கூர்ந்து ஆராய்வதன் அடிப்படையில் தனது பிரச்சாரத்தையும், போராட்ட முழக்கங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் தோழர் பசவபுன்னையா. புரட்சிக்கான எழுச்சி அல்லது தளர்ச்சிக்கு ஏற்றபடி நமது அணுகுமுறைகளை தீர்மானிப்பதுதான் உத்தி (tactics) என்கிறார் அவர். எனவே, உத்திகள் அவ்வப்போது மாறும், அது இலக்கை நோக்கியதாக அமைந்திடும்.

எனவே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு திட்ட ஆவணமே வழிகாட்டியாக உள்ளது. மார்க்சிய – லெனினிய தத்துவ தெளிவோடு அந்த திட்டத்தை முன்னெடுக்கும் தரமான உறுப்பினர்களும், தனித்துவமான தலைவர்களும், கூட்டுத் தலைமையின் பிரிக்க முடியாத அங்கங்களாக, புரட்சிகர இயக்கத்தை வழிநடத்துகிறார்கள்.

முந்தைய தொடரை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்