aththiyaayam : 2 papa karu.. karuvaaga uruvaagi.. 6 vaaram varai..valarchi-peraasiriyar so.moganaa அத்தியாயம் : 2 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை..வளர்ச்சி- பேராசிரியர் சோ.மோகனா

அத்தியாயம் : 2 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை..வளர்ச்சி- பேரா.சோ.மோகனா

பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 6 வாரம் வரை ..வளர்ச்சி கருமுட்டையும், விந்தணுவும் இணைவதே கருவுருதல் எனப்படுகிறது. இது நடந்து முடிந்த சுமார் 6 நாட்களுக்குப் பிறகு, கருவுற்ற பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) என்னும் செல்களின் பொட்டலம் கருப்பையின் புறணி/மேல்பகுதியில் ஒட்டுகிறது/இணைகிறது, பொதுவாக…
தொடர் 34: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ் Series 34: Bioscopekaran – Vittal Rao

தொடர் 34: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஸ்காண்டிநேவிய சினிமாஸ்விடிஷ் திரைப்படங்கள் ஸ்வீடிஷ் சினிமா என்றாலும் உலக சினிமா வென்றாலும் தலை சிறந்த திரைப்பட மேசைகளில் ஒருவராய் திகழ்பவர் இங்க்மர் பெர்க்மன் பெர்க்மன் என்று சொல்லும்போதே அவரது பல திரைப்படங்களுக்கு அழியாப் புகழ் தரும் வகையில் ஒளிப்பதிவு செய்து வந்த…
தொடர் 33: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 33: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஸ்காண்டிநேவியன் சினிமா.
நார்வே டென்மார்க்- ஸ்வீடன்

நமது பயாஸ்கோப்காரன் ஸ்காண்டிநேவியப் பகுதிக்குள் வந்துவிட்டான். நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளைக் கொண்ட ஸ்காண்டிநேவியப் பகுதிக்குள் வந்திறங்கியதுமே அவனது சினிமா நினைவுகளில் புகழ்பெற்ற “வைகிங் ஸ்” (Vikings) வீரத்திரைப் படமொன்று திரும்புகிறது. பத்து – பதினோறாம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் ஸ்காண்டிநேவியா மற்றும் நார்டிக் (பின்லாந்து பகுதி) பகுதிகளில் வைகிங்க்ஸ் எனும் வீரம் மிக்க கடற்போர் வீரர் சமூகம் இருந்திருக்கிறது. இவர்கள் இங்கிலாந்து, வட அமெரிக்கா என்று கடல் கடந்து போரிட்டவர்கள் வைகிங்ஸ் கூட்டம் கடற் கொள்ளைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் பல பிரிவுகளும் ஒன்றோடொன்று தலைமைப் பதவிக்காகவும் பெண்ணுக்காகவும் என்றெல்லாம் உட்பூசலும் போருமிட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்து திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்புகளுமுண்டு. ஸ்காண்டி நேவிய வீரர்களை வைத்து 1958-ல் வெளிவந்த ஹாலிவுட்டின் (Vikings) திரைப்படத்தை பயாஸ்கோப்காரன் சேலம் நியூசினிமா திரையரங்கில் பார்த்த நினைவு அலை புரண்டு வந்துவிட்டது. பயங்கரமான சாகசங்களைக் கொண்ட திரைப்படம் இது. Kirk Douglas Tony curtis கிர்க் டக்ளஸும் டோனி கர்டிஸும் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வைகிங்ஸ் வீரர்களாய் மூர்க்கமான வாட்போரில் ஈடுபடும் பாத்திரங்களில் நடித்தார்கள். இருவருமே இன்று உயிருடனில்லை.

ஸ்காண்டிநேவியாவின் டென்மார்கில் பிறந்த டேனிஷ் எழுத்தாளர் திருமதி கேரன் ப்ளிக்சென் ஐசக் டினேசன் (Isak Dinesan) என்ற புனை பெயரில் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் ஆப்ரிக்காவிலுள்ள கீன்யாவில் குடியேறி 1913 முதல் 1931 வரை காபி தோட்டங்களை விலைக்கு வாங்கி கவனித்து வந்தவர். இவரது கணவர் வெளிநாடு போனவர் திரும்பி வரவேயில்லை. ஆனால் உயிரோடிருந்தார். ஐசக் டினேசன் தமக்கு உதவியாக தம்மோடு காபித் தோட்டங்களை கவனித்துக் கொண்ட ஒருவரோடு மனைவியாக கொஞ்ச காலம் இருந்துவிட்டு பிறகு தனியாகவே வாழ்ந்து ஆஃப்ரிக்க பழங்குடி மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். அவர்களின் கல்வி, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டார். அவர்களை நாகரிகமான குடிமக்களாய் கொண்டுபோனதோடு தோட்டங்களில் வேலைவாய்ப்பும் உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும்படி வழி செய்தார். அவர்களின் வளர்ச்சிக்கும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டார். தனது வாழ்க்கை வரலாறு தோய்ந்த Out of Africa எனும் அற்புத புனைவு நூலை 1937ல் எழுதி வெளிக் கொணர்ந்தார். பலமுறை இவரது பெயர் நோபல் இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும், ஸ்காண்டிநேவிய பகுதி எழுத்தாளர்களுக்கே திரும்பத் திரும்ப நோபல் பரிசு தருவது சரியாகாது என்று காரணம் காட்டி இவர் நிராகரிக்கப்பட்டவர். திருமதி ஐசக் டினேசனின் ‘‘அவுட் ஆஃப் ஆஃப் ரிகா’’ நாவல் 1985-ல் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். நடிகர் சிட்னி பொல்லாக் (Sydney pollack) இயக்கத்தில் அற்புதமான திரைப்படமாயிற்று. அவ்வாண்டின் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட ஏழு ஆஸ்கர் பரிசுகள் பெற்றது.

டேனிஷ் பெண்மணி கேரன் ப்ளிக்சென் தான் விரும்பி மணம் புரிந்தவனோடு ஆப்ரிகாவில் கீனியாவில் காபித் தோட்டம் வாங்கி குடியேறுகிறாள். ஆனால் கணவன் அவள் பணத்தையும் அவளையும் மோசம் செய்துவிட்டு வெளிநாட்டுக்குப் போனவன் திரும்புவதே இல்லை. தன்னுடன் பணிபுரியும் இருவரில் ஒருவரை காதலித்த கேரன் அவனையே திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் வாழ்கிறாள். பிறகு தனியாக வந்து ஆப்ரிக்க பழங்குடி கலாச்சாரம், அம்மக்களின் சகல நலன்களிலும் உட்சென்று உதவி முன்னேற வைக்கிறாள். இப்படத்தில் ஐசக் டினேசனாக [கேரனின் புனைபெயர்] மெரில் ஸ்ட்ரீப், ஓடிப்போன கணவனாக ராபர்ட் ரெட்ஃபோர்டு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சிட்னி பொல்ரொக்கின் சிறந்த இயக்கத்தையும் மிஞ்சும்படியிருப்பது ஒளிப்பதிவு. படத்தின் அற்புத காமிரா கலைக்காக ஒரு ஆஸ்கர் விருது ஒளிப்பதிவாளர் டேவின் வாட்கினுக்கு [DAVID WATKIN] அளிக்கப்பட்டது. கண்களை விட்டு அகலா அதியழகிய இயற்கைக் காட்சிகளால் படம் முழுக்க ஒவ்வொரு சட்டகமும் அமைந்துள்ளது.

ஐசக் டினேசனின் மற்றொரு புகழ்பெற்ற டேனிஷ் நூல் ஆப்ரிக்க அனுபவம் மேலிட்ட ‘SHADOWS ON THE GRASS” இந்நூல் சிறிதும் சுருக்கப்படாமல் முழுவதும் 60-களில் ‘IMPRINT” மாத இதழில் வெளியிடப்பட்டது. இந்நூலிலுள்ள கோட்டோவியங்களையும் ஐசக் டினேசனே தீட்டியிருந்தார். இம்ப்ரிண்ட் இதழ் அந்த கோட்டோவியங்களையும் சேர்த்தே வெளியிட்டது. இந்நூலையும் ஐசக்கின் பிற நூல்களையும் படித்துவிட்டு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே [ERNEST HEMINGWAY] கூறினார், “எனக்கு நோபல் பரிசு அளித்திருக்காமல் இவருக்கல்லவோ இலக்கிய நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும்”, என்று.

ஐசக் டினேசனின் மற்றொரு புகழ்பெற்ற டேனிஷ் நாவல், ‘BABETTE’S FEAST” – பேபெட்டின் விருந்து. திரைப்பட ரசிகர்களின் கண்களுக்கு விருந்து. இந்த டேனிஷ் – ஸ்வீடன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பேசும் திரைப்படம் சிறந்த அந்நிய மொழிக்கான திரைப்பட ஆஸ்கார் விருதை 1988-ல் பெற்றது. இந்நாவல் மிக மிக அருமையாகவும் சரியாகவும் தழுவப்பட்டு 1987-ல் டேனிஷ் – ஸ்வீடிஷ் – பிரெஞ்சு மும்மொழிகளிலும் பேசும்படியாக தயாரிக்கப்பட்டு கேப்ரியல் ஆக்ஸெல் [GABRIEL AXEL] இயக்கத்தில் அற்புதமான காமிர கலைஞர் ஹென்னிங் கிறிஸ்டியன்சென் [HENNING CRISTIANSEN]னின் ஒளிப்பதிவில் திரைப்படமானது. அவ்வாண்டு கான் திரைப்பட விழாவிலும் சிறப்பு பரிசு அளிக்கப்பட்ட படம்.

மூலக்கதை நார்வேயின் நகரத்தில் நடப்பதாக இருப்பதை இயக்குனரும் திரைக்கதை கர்த்தாவுமான கேப்ரியல் ஆக்ஸெல், டென்மார்க்கிலுள்ள ஜுட்லாந்து [JUTLAND] எனும் கடற்கரை கிராமமாக மாற்றியிருக்கிறார். உலக வரலாறு ஓரளவுக்கு அறிந்தவர்களுக்கு “பாரிஸ் கம்யூன்” [PARIS COMMUNE] பற்றி தெரிந்திருக்கும். பாரிஸ் கம்யூன் என்ற பிரெஞ்சு தொழிலாளர் இயக்கம் 1870-71–களில் இயங்கி தொழிலாளருக்கு எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்து போராட்டத்தை நடத்தியது. கிட்டதட்ட உள்நாட்டுப் போராகவே பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வந்த பாரிஸ் கம்யூன்களின் போராட்டத்தில் உயிரிழந்தோர் பலர். அனாதைகளாக அண்டை நாடுகளுக்கு கடல் கடந்து சென்று அகதிகளாய் புகலிடம் தேடியவர்கள் அனேகம். பாரிஸ் கம்யூன் ஓரிரு மாதங்களிலேயே அடக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. “பெபெட்டின் விருந்து” – கதை நடக்கும் காலம் பாரிஸ் கம்யூன் போராட்டம் நிகழ்ந்த 1871ம் ஆண்டு மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக பல்வேறு உபயோகங்களுக்கு கொண்டு செல்லப்படாத காலம். பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் அரசாங்க சிப்பாய்களின் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டு போயினர். தாய் தந்தை கணவன்மாரை இழந்தவர்கள் அகதிகளாக அக்கம் பக்கத்து கடற்கரை நகரங்களுக்கு படகுகளில் பயணித்துப் போய் தஞ்சமடைகின்றனர். டென்மார்க்கும் அதன் பல்வேறு சின்னஞ்சிறு கடற்கரை பட்டினங்களும் அங்குமிங்கும் வந்து சேரும் பிரெஞ்சு அகதிகளுக்குப் புகலிடமாகின்றன. அப்படியாக ஜுட்லாந்தும் ஒன்று. ஒரு மூல நூலைத் தழுவி நாடகம் திரைப்படமென்று, மறுவடிவம் தரும் தழுவல், கலைக்கு மிக நல்ல எடுத்துக்காட்டாக இப்படம் சொல்லப்படுகிறது.

இந்த ஊரில் ஒரு இருபது வயது முதிர்ந்த தம்பதிகள், ஒரு சிறிய பல்பொருள் அங்காடி என்று இருப்பவை. கடற்கரையிலிருந்து ஊருக்குள் வந்து போக கோச்சு வண்டி சேவையுமிருந்தது. ஊரில் தெய்வீக சேவை செய்து வந்த பாதிரியாருக்கு இரு புதல்விகள், பிரெஞ்சு ராணுவத்தில் சிறிய பதவியிலிருந்த ஒருவர் பாரிசுக்குப் போய்விட்டு வருவதால் இளைய சகோதரியிடம் சொல்லிவிட்டுப் போய் வருவதேயில்லை. ஒரு பிரெஞ்சு இசைக்கலைஞன் சின்னவளுக்கு இசைக் கற்று தருவதாக வந்து பயிற்சி தொடங்கி அவளை அடைய முயற்சிப்பதை மோப்பம் பிடித்த பாதிரியார் அவளை விரட்டிவிடுகிறார். பாதிரியாருக்கு தம் இரு பெண்களையும் கன்னியாஸ்திரீகளாய் வளர்த்து பயிற்சியளித்து தனக்குப் பிறகு ஊரில் பூஜை ஜெபக் காரியங்களைத் தொடரும்படிக்கு ஆளாக்குகிறார். அவர் இறந்ததும் சகோதரிகள் தந்தை வழியில் ஜெபம் செய்து வருகின்றனர். வருவாய் போதவில்லை. ஏழ்மை ஜீவனத்தில் காலம் கடந்து அவர்களும் முதுமையை அடைகிறார்கள். இந்த சமயம் பிரான்சில் பாரிஸ் கம்யூன் இயக்கப் புரட்சி – போராட்டம் நடந்து நிறையபேர் இறந்து போக, அனாதைகள் அகதிகளாய் அறிமுகக் கடிதங்களோடு விலாசம் வாங்கிக்கொண்டு ஒரு மழைக்காலத்தில் எங்கெங்கோ போகிறார்கள். அந்த வகையில் நடுத்தர வயது பிரெஞ்சு பெண்மணி ஒருத்தி பாரிசிலிருந்த படகில் பயணப்பட்டு ஜுட்லாண்டை அடைகிறாள். கடைக்காரர் பிரெஞ்சு அறிந்தவர். சகோதரிகளின் வீட்டைக் காட்டுகிறார். அவள் அங்கு சென்று தன்னை அறிமுகப்படுத்துகிறாள். சில ஆண்டுகளுக்கு முன் காதலில் தோல்வியுற்று போன பிரெஞ்சு இசைக் கலைஞன்தான் இந்த விலாசத்தைத் தந்து அனுப்பியது. வந்தவள் பெயர் பெபெட் [BEBETTE] சமைப்பது, துவைப்பது, கடை கண்ணிக்குப் போவது இன்னபிற வேலைகளை செய்து கொண்டு அங்கிருக்க புகலிடம் கேட்கிறாள். உள்நாட்டுக் கலவரத்தில் கணவனும் பெற்றோரும் இறந்து போனதாயும் கூறுகிறார்கள். அவளை வேலைக்கு வைத்துக்கொள்ள பணவசதி தங்களுக்கில்லை என்றும், அவளிடம் பணம் எவ்வளவு இருக்கிறதென்றும் சகோதரிகள் கேட்கிறார்கள்.

“ஊரில் என் பெயரில் ஒரு லாட்டரி டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறேன். வேறு எதுவும் என்னிடமில்லை”, என்கிறாள் பெபெட்.

காலஞ்சென்ற தங்கள் தந்தையின் நினைவு நாளன்று வயதான குடும்பத்துக்கு வேண்டிய பத்து பேருக்கு ஒரு சிறு விருந்தை அளித்து பிரார்த்தனை நிகழ்த்துவது சகோதரிகளின் வழக்கம். பிரெஞ்சுக்காரி பெபெட் எல்லாருக்கும் அறிமுகமாகி விடுகிறாள். ஒருநாள் கடைக்காரரின் விலாசத்திற்கு பெபெட்டின் பெயரில் கடித உறையொன்று தபாலில் வருகிறது. பெபெட் அதைப் பிரித்துப் பார்க்கிறாள். சகோதரிகள் திகிலோடு பார்க்க பெபெட்டின் முகம் மலர்கிறது.

“என் பெயருக்கு லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது. பத்தாயிரம் ஃபிராங்க் பணம் பரிசுத்தொகை.” என்று கூறிவிட்டு காசோலையைக் காட்டுகிறாள்.

“நீ எங்களை விட்டு விட்டு ஊருக்கு போய்விடுவாயா?”

“இல்லை போகமாட்டேன்”

பாதிரியாரின் நினைவுநாள் விருந்தை தன் செலவில் ஏற்பாடு செய்வதாயும் அது ஒரு ‘FRENCH DINNER’ [பிரெஞ்சு இராச் சாப்பாடு] என்றும் அறிவித்து மூன்று நாட்கள் விடுப்பு பெற்று படகிலேறி பாரிஸ் போகிறாள் பெபெட். ஒரு பிரெஞ்சு இரவு விருந்துக்கான சகலவற்றையும் படகிலேற்றிக்கொண்டு பெரியப்பா பையன் ஒருவனை கூடமாட ஒத்தாசைக்கென அழைத்து வருகிறாள்.

விருந்துக்கான மூலப் பொருட்கள் படகிலிருந்து கொண்டுவரப்படுவதை தெருக்கள் கவனித்து அதிர்ச்சிக்குள்ளாகின்றன. காடைகள், முட்டைகள், கோழிகள், வாத்துகள், உரித்த ஆடு, உயிருள்ள ஆமை, நீரில் துள்ளும் மீன் வகைகள், காய்கறி பழ தினுசுகள், பால், வெண்ணெய் இத்யாதிகள், மது பாட்டில்கள், பெரிய ஐஸ் கட்டிகள் என்று ஏராளம்.

“உலகிலேயே பிரம்மாண்டமான விருந்து பிரெஞ்சு டின்னர்தான்”, என்கிறாள் பெபெட். தன் மகத்தான சமையலை ஆரம்பிக்கிறாள். படம் முன்பாதி, பெபெட் வந்து சேர்ந்த கதையாயும், பின் பாதி விருந்தாகவும் போகிறது. பிரான்சில் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலையும் அவர் மனைவியையும் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். இளைய சகோதரியை திருமணம் செய்து கொள்ளுவதாய்க் கூறிபோன ராணுவவீரன்தான் இந்த ஓய்வு பெற்ற ஜெனரல். பிரெஞ்சு ஆமை சூப் உலகப் புகழ் பெற்றது. அதற்காகவே பெரிய உயிருள்ள கடல் ஆமையை கொண்டு வந்திருக்கிறாள் பெபெட். ஆனால், அப்பாவித்தனம், மூடநம்பிக்கை மிக்க அவ்வூர் விருந்தினர்கள், இந்த விருந்தில் சந்தேகம் கொண்டு கற்பனையை வளர்க்கின்றனர். பெபெட் மீதும் அவளது இறை நம்பிக்கை மீதும் சந்தேகம் கொள்ளுகின்றனர்.

“இது ஏதோ பேய் வழிபாடாகத் தெரிகிறது. இதை அவள் நம்மைக் கொண்டு நடத்தத் திட்டமிட்ட பேய் வழிபாடு” என்று பேசிக் கொள்ளுகின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஒரு சத்திய பிரமாணம் செய்து கொள்ளுகின்றனர். சாப்பிடலாம், ஆனால் பேய் வழிப்பாட்டையொட்டி படைக்கப்படும் பெரு விருந்தை வாய் தவறியும் புகழ்ந்து பாராட்டிப் பேசிவிடக்கூடாது. அத்தகைய விருந்தின் உணவு பதார்த்தங்களின் சுவையைப் புகழ்ந்து சொல்லிவிட்டால், பேய் வழிப்பாடு ஏற்கப்பட்டு வாழ்த்தப்பட்டதாகி உண்ட உணவு நஞ்சாகவும் மாறிவிடும் என்று பேசிக்கொண்டு, யாரும் எந்தப் பண்டத்தையும் ருசித்து சாப்பிட்டதாய்க் காட்டிக்கொள்ளலாகாது என்றும் பேசிக்கொண்டு சகோதாரிகள் வீட்டு விருந்துக்கு தயாராகினர். இந்த சமயம் வயதான இருவர் தம் பழைய சண்டையை நினைவுபடுத்திக் கொண்டு,

“நீ முதுகில் மோசமா கொடுத்த அடி, ஒரு விருந்தப்போதான். மறக்க முடியாது” என்கிறார்.

இன்னொருவர், “என்னிடம் பத்து வருஷம் முந்தி மூணு பிராங்க் கைமாத்து வாங்கினது ஞாபகமிருக்கா? இன்னும் திருப்பித் தர்ரே”, என்கிறார் இன்னொருவரிடம்.

பெபெட் நிற்க நேரமில்லாமல் தான் ஒருத்தியே உறவுக்காரப் பையன் உதவியோடு அந்த மாபெரும் இரவு விருந்தை தயாரித்து முடிக்கும் தருவாயிலிருக்கிறாள். நமக்கே படபடப்பு ஏற்படுகிறது. ஐஸ்கிரீம், புட்டிங், ஃப்ரூட் சால்ட் என்று ஒருபுறம், ஒரேயொரு பெண்மணி பன்னிரெண்டு விருந்தினருக்கு மாபெரும் பிரெஞ்சு இராபோஜனம் தயாரிக்கிறாள், யார் இவள்? யாராயிருப்பாள் இந்த பெபெட்? என்ற கேள்வி அங்கு ஒருவருக்குமே எழவில்லை.

“ஜாக்கிரதை, மறந்தும் உணவுப் பதார்த்தங்களை பாராட்டிப் புகழ்ந்து பேசிவிடக்கூடாது”, என்று அவர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்வதிலேயே கருத்தாயிருக்கிறார்கள்.

சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு ஜெனரலும் அவர் மனைவியும் படகில் வந்திறங்கி கோச்சு வண்டியில் வந்து சேருகின்றனர். கோச்சு வண்டியோட்டி 13-வது விருந்தாளியாக சமையலறையிலேயே போய் உட்கார்ந்து தானே எடுத்துப் போட்டுக் கொண்டு ஒரு கை பார்க்கிறாள்.

சமையற்கலையின் ஒழுங்கை – அழகை – சீரான வகைமையை அந்த உள்ளூர் ஏழை ஜோடிகள் பார்த்து மெய் மறக்கின்றனர்.

“உஷார், மனதுக்குள் பாராட்டிக் கொண்டு சாப்பிடலாம். எதையும் ரசித்து ருசித்ததாய் சொல்லி சாத்தானுக்கான SABBATH-ஐ நிரூபித்து உண்டது செரிக்காது விஷமாக்கி விடலாகாது.”

ஐரோப்பிய உணவுப் பரிமாறலும் உண்பதும் வேறொரு கலை. அது ஒன்றையடுத்து ஒன்றாக பல கோர்ஸ்” எனப்படுவது. எல்லாவற்றுக்கும் முன்பாக ஆரம்பம் [STARTER] என ஒரு சூப். அது கடல் ஆமை சூப். ஒவ்வொருவரும் அதை பிசாசுக்கான ரத்தப் படைப்பாக மனதுக்குள் கற்பித்தவாறு அருந்துகின்றனர். அதையும் மீறி அதன் சுவை அவர்களை அசத்துகிறது.

“ஆஹா! இது அசல் பிரெஞ்சு சூப்தான். எத்தனையோ வருடங்களாகிறது, இவ்வளவு தரமான பிரெஞ்சு கடலாமை சூப் ருசித்து” என்று பிறர் கேட்கும்படி சூப்பை சுவைத்து ரசித்து அதன் உசத்தியான சுவையைப் பாராட்டுகிறார் ஜெனரல். ஆனால், தம் ஆனந்த சுகானுபவத்தை சக விருந்தாளிகளோடு பகிர்ந்து கொள்ளலாமென அவர்களைப் பார்த்துச் சொல்லுகையில் அவர்கள் ஒவ்வொருவரும் வாய் திறவாதிருக்கின்றனர். ஜெனரலுக்கு எந்த தயக்கமோ பயமோ, கட்டுப்பாடோ மூடநம்பிக்கையோ கிடையவே கிடையாது. உள்ளூர் விருந்தாளிகளின் எச்சரிக்கை இவருக்குத் தெரியாது. அவர் பாட்டிற்கு ஒவ்வொரு பதார்த்தத்தையும் ருசித்து ரசித்துப் பாராட்டினபடியே பக்கத்தில் எதிர் வரிசையில் உட்கார்ந்திருப்போருடன் தம் ருசி ரசனையை பகிர்ந்து கொள்ளுகையில், அவர்கள் அதற்கெல்லாம் வெறும் ஒரு புன்சிரிப்போடு சமாளிப்பது ஜெனரலுக்கு விளங்கவில்லை. அதே சமயம் அவர்கள் பத்துபேரும் ஒவ்வொரு பதார்த்தத்தையும் சுவைக்கும் போதெல்லாம் காலஞ்சென்ற பாதிரியாரை, அவரது தெய்வபக்தியை ஜெபக்கிருபையை அன்புள்ளத்தை, அவருக்குப் புதல்விகளாய்ப் பிறந்து திருமணமே புரிந்து கொள்ளாமல் தந்தை வழியில் இறை நம்பிக்கையை, வழிபாட்டை, திருச்சபையை பேணிக்காத்து தொடரும் பாங்கையெல்லாம் சொல்லிச் சொல்லி பாராட்டிக் கொள்ளுகின்றனர். ஆமை சூப்பிலிருந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது வரை, வைன், ஜின், ஓட்கா, விஸ்கி, ரம் மதுபானங்களைக் கேட்டுக்கேட்டு குடிப்பது வரை பாராட்டத் துடிக்கும் மனதையடக்கி, அதற்குப் பதிலாக அதையெல்லாம் பாராட்டும் முகமாய் பாதிரியாரை அவரது தெய்வீக இருப்பை, ஆத்ம திருப்தியை, அவரது புதல்விகளை பாராட்டியபடி இருக்கின்றனர்.

“ஜெனரலின் பெரிய கண்ணாடி குப்பி காலியாகாமல் பார்த்துக் கொள். அதில் அவருக்கு மட்டும் இந்த பாட்டிலிலுள்ளதை ஊற்றிக் கொணடேயிரு; என்று பையனுக்கு சொல்லி வைக்கிறாள் பெபெட்.

விருந்து முடிகிறது. ஜெனரல் எழுந்து நின்று உலகாயத தத்துவம் ஒன்றைக் கூறி, இறையாண்மையை நறுக்கென செருகி பேசி முடித்து, பிரெஞ்சு விருந்து தயாரிக்கப்பட்டிருக்கும் பாங்கை அதி உயர்வாக விமர்சிக்கிறார். சகோதரிகளையும் பாராட்டி விட்டு கூறுகிறார்,

“சில வருடங்களுக்கு முன் நான் விருந்தினனாக ஒரு ராணுவ மரியாதை நிமித்தம் ஒரு மாபெரும் பிரெஞ்சு இராபோஜன விருந்துக்கு பிரபலமான ஓட்டலுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதுபோன்ற விருந்தையும் சுவையையும் அதற்குப் பிறகு இன்றுதான் இங்குதான் சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். அந்த மாபெரும் ஓட்டலின் சமையற்காரர்களின் தலைமைச் சமையற்காரர் ஒரு பெண்மணி என்றார்கள். அவளை நான் பார்க்க முடியவில்லை”, என்று கூறிமுடித்து இளைய சகோதரியைத் தனியாக அழைத்துச் சென்று, “நான் சொன்னபடி அன்று திரும்பி வரவில்லை. எங்கிருந்தாலும் உடல் ரீதியாக வாழ முடியாவிட்டாலும் என்றென்றைக்கும் என் மனதில் நீ ஜீவித்திருக்கிறாய்” என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கோச்சு வண்டியில் மனைவியோடு ஏறி கடற்கரையை நோக்கிப் புறப்படுகிறார்.

பெபெட் தன் உறவுக்காரப் பையனோடு சமையலறையில் ஒரு மூலையில் அமர்ந்து மீதியுள்ள உணவுப் பதார்த்தங்களைச் சாப்பிட்டபடி சகோதரிகளிடம் கூறுகிறாள்.

“ஒரு காலத்தில் பாரிஸில் பிரபல உணவு விடுதியொன்றின் தலைமைச் சமையற்காரியாக நான் பணிபுரிந்திருக்கிறேன்.”

அவர்கள் கேட்கிறார்கள், “அப்படியானால் நீ பாரிசுக்கு திரும்பப் போய் விடுவாய்”

“இல்லை, என்னிடம் காசில்லை” என்கிறாள் பெபெட் பத்தாயிரம் ஃபிராங்க் லாட்டரி பரிசுப் பணம் வந்ததில் மீதியிருக்குமே?”

“இல்லை. எல்லாம் செலவழிந்து விட்டது. பன்னிரெண்டு பேருக்கு ஒரு பிரெஞ்சு டின்னர் தயாரித்து அளிக்க பத்தாயிரம் ஃப்ராங்க் ஆகிறது”, என்று கூறி புன்னகைக்கிறாள் பெபெட்.

இந்த அற்புதமான டேனிஷ் திரைப்படம் GABRIEL AXEL இயக்கத்தில் காமிரா கலைஞர் ஹென்னிஸ் கிறிஸ்டியென்சென் ஒளிப்பதிவில் கான் திரைப்பட விருதையும் ஆஸ்கார் விருதையும் பெற்றிருக்கிறது. ஸ்டீஃபன் ஔட்ரன் [STEPHANE AUDRAN] பெபெட் பாத்திரத்தில் அதி சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற எல்லா பாத்திரங்களுமே பழுதின்றி நடித்திருக்கிறார்கள். பெரும்பான்மை நடிக நடிகையர் இங்மர் பெர்க்மனின் ஸ்வீடிஷ் திரைப்படங்களில் நடித்திருப்பவர்களே டேனிஷ் படங்களிலும் நடிப்பது வழக்கம். இதை பிற டேனிஷ் படங்களிலும் காணமுடியும்.

வேலைவாய்ப்புகளை முன்னிட்டு தாம் கொண்டிருந்த பல்வேறு பந்தப் பிணைப்புகளை சட்டென உதறிவிட்டு வேறு இடங்கள் தேடிப்போக நிர்ப்பந்திக்கப்பட்டு வேறொரு இடத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் மனித வாழ்க்கையை ஜான் ஸ்டீன்பெக்கின் மகத்தான நாவல் GRAPES OF WRATH சித்தரிக்கிறது. இந்த அழுத்தமான நாவலை ஜான் ஃபோர்டு [JOHN FORD] அதியற்புதமாக திரைப்படமாக்கினார். இதற்கு இணையான டென்மார்க் ஸ்காண்டினேவிய நாவல் “PELLE EROBRENEN” என்பது. நான்கு பகுதிகளாய் அமைந்த இந்த நாவலை எழுதிய ஸ்காண்டினேவிய நாவலாசிரியர் டென்மார்க்கைச் சேர்ந்த மார்டின் ஆண்டர்சன் நெக்சோ [MARTIN ANDERSEN BNEXO] என்பவர். இந்நாவலின் முதற்பகுதியைக்கொண்டு “PELLE THE CONQUEROR” என்ற அரிய டேனிஷ் திரைப்படம் பில் ஆகஸ்ட் என்பவரின் சிறந்த இயக்கத்தில் 1988-ல் தயாராகி வெளிவந்தது.

19-ம் நூற்றாண்டின் இடையில் ஸ்வீடனில் ஒரு பஞ்சம் நிகழ்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. அதன்போது அண்டை நாடான டென்மார்க்கில் பண்ணைத் தொழில், மாட்டுப் பண்ணை, விவசாயம் எல்லாமே செழிப்பாக இருந்தது. ஸ்வீடனிலிருந்து குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக கப்பலில் பயணப்பட்டு டென்மார்க் துறைமுகத்தில் மக்கள் வந்திறங்கினபடியே இருந்தனர். இந்த ஆரம்பக் காட்சி திரைப்படத்தில் மனதை உலுக்கும்படியாக இருக்கிறது. ஸ்வீடனிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் இன்னும் தூங்கினபடியே கிடக்கும் வயதான தந்தையின் கையில் தான் கட்டிய கயிற்றை இழுத்தசைத்து எழுப்புகிறான் பத்து வயது சிறுவன் பெல்லே [PELLE] அந்த சிறுவனின் அறுபது வயது தந்தை லாஸ் காரல்சன் [LASS KARLSSON] அவர்கள் இருவரும் ஸ்வீடனிலுள்ள டோம்லில்லா எனும் ஊரிலிருந்து வந்திருப்பவர்கள். பையனுக்கு தாய் இல்லை. முதியவர் லாஸ் பையனையும் மூட்டையையும் சுமந்தபடி துறைமுகத்தில் வேலைக்கு ஆள் எடுக்குமிடத்தில் வரிசையில் நிற்கிறார். தன் விவரத்தைக் கூறுகிறார்.

“உனக்கு வயது அதிகமாகி விட்டது. பையனோ ரொம்ப சின்னவன். வேலைக்காகாது. வேண்டாம்”

இன்னொரு இடத்தை நெருங்கி “என் பெயர் லாஸ். மனைவியில்லை. நாடு ஸ்வீடன் என் பையன் இது” என்கிறார் லாஸ் காரல்ஸன்.

“அப்பால் போ, கிழவன் நீ. வேலையில்லை”

இப்படியாக பத்துபேரை அணுகியும் இருவரும் ஏற்கப்படாமல் வேலைக்கு வேண்டாமென நிராகரிக்க, அவர்களிருவரும் சோர்ந்து உட்காருகிறார்கள். இதில் கிழவனுக்கு வெற்று ஜம்பத்துக்கு குறைச்சலில்லை. ஒவ்வொரு முறை தான் நிராகரிக்கப்படும்போது, “பெல்லே, முதலில் வரும் வேலைக்கான அழைப்பை ஏற்க மாட்டேன். காத்து ஏங்கிக் கிடக்கிறவன் என நினைப்பார்கள்.”

இப்படியாக லாஸ் காரல்சன் மகனிடம் ஜம்ப வார்த்தை பேசுபவராகவே படம் சித்தரிக்கிறது. எல்லோருக்கும் வேலை கிடைத்து போய்விட இடமே வெறிச்சோடிக் கிடக்கிறது. தந்தையும் மகனும் மட்டும் உட்கார்ந்திருக்கையில் குதிரை வண்டியில் ஒருவர் வருகிறார்.

“வேலையா?”

“ஆமாம், என் பெயர் லாஸ். என் பையன் பெல்லே”

“டாகுமெண்ட்ஸ் எடு”

லாஸ் நம்பிக்கையோடு விரைப்பாக எடுத்து தருகிறார்.

“சரி சரி, இருக்கட்டும். இருவருக்கும் சேர்த்து வருஷத்துக்கு 100 க்ரோனா சம்பளம் தருவேன். தங்குமிடம் சாப்பாடு இலவசம். பண்ணை வேலை.”

சரியென்று கூற, அவர்களைத் தன் வண்டியிலேற்றிக்கொண்டு பண்ணையார் கோங்ஸ்டிரப் [KONGSTRUP] அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டையடைகிறார். அவருக்கு மூத்த மனைவி வழியாக நில்ஸ் [NILS] என்ற மகனும், குழந்தைப் பேறற்ற இரண்டாவது மனைவியும் இருக்கிறார்கள். பண்ணையிலிருக்கும் தொழிலாளரிடையே ஸ்வீடிஷ் ஜனங்களை அவ்வப்போது டேனிஷ்காரர்கள் சதாய்த்தபடியே இருக்கிறார்கள். “போங்க டா ஒங்க ஸ்வீடனுக்கு,” என்று சண்டை வந்தால் துரத்துவார்கள். பண்ணை முதலாளி கோங்க்ஸ்டிரப் பெண் பித்துப் பிடித்தவன். பெல்லேயும் அவன் அப்பாவும் மாட்டுப் பண்ணையில் பணிபுரிகின்றனர். மாட்டுக் கொட்டைகையிலே அவர்களுக்கு உறைவிடமும். இருபது வயது சட்டாம்பிள்ளை ஒருவன். பெல்லே மீது அவனுக்கு எரிச்சல். அவ்வப்போது துன்புறுத்துவான். முதலாளி மனைவிக்கு பெல்லே மீது கொஞ்சம் இரக்கமும் அன்புமுண்டு. கணவனுக்குத் தெரியாமல் பெல்லே மூலம் மது வரவழைத்து குடிப்பாள். அவனுக்கு பக்ஷீல்” தருவாள். ஒரு சமயம் முதலாளி இதைக் கண்டு பிடித்து மதுபுட்டியைப் பிடுங்கி கொட்டிவிடுகிறான். கணவன் மனைவிக்கு சண்டை இதை பெல்லே பார்க்கிறான். எல்லா நிகழ்வுகளையும் கவனித்து வரும் சிறுவன் பெல்லேயின் பார்வையில்தான் முழு படமுமே கொண்டு செல்லப்படுகிறது.

மூல நாவலின் ஆசிரியர் மார்டின் ஆண்டர்சன் நெக்சோவுக்கு சார்லஸ் டிக்கன்ஸனின் இலக்கிய பாதிப்பு இருப்பதை இப்படத்தின் வழியே அனுமானிக்கலாம். பண்ணை ஃபோர்மன் மகா கொடுமைக்காரன். அவனுக்குக் கீழுள்ள சட்டாம்பிள்ளைப் பையன் அதற்குமேல் துஷ்டன். அனுபவமும் வயதும் நிரம்பிய எரிக் [ERIC] என்பவனும் பெல்லேயும் சினேகிதர்களாகின்றனர். எரிக் நேர்மையும் நியாயமுமான அன்புள்ளம் கொண்டவன். தன் லட்சிய கனவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா என்று உலகம் சுற்றப்போவதாய்க் கூறுகிறான். தானும் வருவதாய் பெல்லேயும் சொல்லுகிறான். இந்த சமயம் ஃபோர்மன் எரிக்கிற்கு தண்டனை தருகிறான். அதை எதிர்த்து எல்லா தொழிலாளரும் ஃபோர்மனிடம் போகையில் உழவு ஆயுதத்தால் ஃபோர்மனைத் தாக்குகிறான் எரிக். அதற்குள் சட்டாம்பிள்ளை பெரிய கல்லால் எரிக்கின் மண்டையை அடித்து உடைக்கவும் மூளையில் அடிபட்டு மயங்கி விழுகிறான் எரிக். வாழ்நாள் முழுக்கு சுயநினைவையிழந்து நடைப்பிணமாகிறான். குற்றம் குத்த, ஃபோர்மன் இரக்கம் கொண்டு எரிக்கை உடனிருந்து கவனித்துக் கொள்ளுகிறான். கோங்க்ஸ்டிரப்புக்கு பல வைப்புகள். அதில் ஒருத்திக்கு முதலாளியின் உறவால் அவலட்சணமாய்ப் பிறந்த பையன் பெயர் ரூட் [RUT]. இவனும் மாடு மேய்ப்பவன், ரூட்தான் பெல்லேக்கு மாடுகளின் உளவியல் கூறையெல்லாம் சொல்லித் தருகிறான். எப்படி மாடுகளை அடக்கி சொன்னபடி கேட்க வைப்பதென்பதையெல்லாம் கற்றுத் தருகிறான், முதலாளியால் அனுபவித்து ஏமாற்றப்பட்ட பெண் அவ்வப்போது ரூட்டையும் இழுத்துக்கொண்டு பண்ணை வீட்டுக்கு வந்து, “கோங்ஸ்டிரப், வெளியேவாடா, உன் பையனப் பாருடா, குடுடா பணம்…”, என்று சத்தம் போட்டு பணம் கேட்பாள். அவளை ஆட்கள் அடித்து விரட்டுவார்கள். கோங்ஸ்டிரப்பின் மகன் நில்ஸ், மீன்களை வண்டியிலேற்றும் ஸ்வீடிஷ் இளம்பெண் அன்னாமீது ஆசை வைக்க இருவரும் காதலித்து இரவில் சந்தித்து உடலுறவு கொள்ளுவதையெல்லாம் பெல்லே கவனிக்கிறான். சில மாதங்கள் போனதும் கோழிகளையும் கவனித்துக் கொள்ளும் பெல்லே, காலையில் கணக்கிட்டு வைத்த முட்டைகள் மாலையில் குறைந்திருப்பதைக் கண்டு துணுக்குறும்போது ஒரு பெண்ணின் முனகல் கேட்டு போய்ப் பார்க்கிறான். வைக்கோல் மீது அன்னா படுத்திருக்கிறாள். அவளது வயிறு பெருத்திருக்கிறது. சோர்ந்து போனவளாய்ப் பேசுகிறாள்.

“நான் இங்கிருப்பதைக் காட்டிக் கொடுத்து விடாதே… நேரம் வரும் சமயம் நானே போய்விடுகிறேன். ஸ்வீடனுக்கே போய்விடுகிறேன்.” என்று கெஞ்சினாள். பெல்லே புரிந்தவனாக மேலும் கொஞ்சம் முட்டைகளை எடுத்து அவளுக்குத் தந்தான்.

ஒருநாள் முதலாளிக்கும் தொழிலாளப் பெண்ணுக்கும் பிறந்த அவலட்சணமான பையன் மூட் எங்கோ போய்விடுகிறான். அந்தம்மாள் மீண்டும் கோங்ஸ்டிரப் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு விரட்டப்படுகிறாள். முதலாளி மனைவி மனக் குமுறலோடு இதைப் பார்க்கிறாள். பெல்லே பள்ளிக்கூடம் போகிறான். ஒருநாள் மழையில் மாட்டிக் கொண்ட பெல்லே ஊர் கோடியிலுள்ள வீட்டில் ஒதுங்குகிறான். அந்த வீடு ஓல்சென் [OLSEN] எனும் சிப்பாயினுடையது. அவன் ஒரு வருடமாய் சண்டையிலிருந்து திரும்பவில்லை. திருமதி ஓல்சென் ஆண் துணைக்கு ஏங்கி காத்திருப்பவள். மழைக்கு ஒதுங்கிய பெல்லேயை உள்ளே அழைத்துச் சென்று அவன் கதையைக் கேட்டறிந்து கொண்டு காபி கேக்கெல்லாம் தருகிறாள். வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் பெல்லே ஓல்சென் பற்றி விவரிக்கிறான். லாஸ் கார்ல்சனுக்கு கடைசிகால சபலம் ஒன்று. வழக்கம் போல ஓர் அதீத கற்பனையில் மூழ்குகிறான். தன்னையும் பையனையும் கவனித்துக்கொள்ள ஒரு பெண் துணை கிடைக்கும். நல்ல படுக்கை, இடம், சாப்பாடு, காலையில் படுக்கையிலேயே சூடான காபியெல்லாம் அளிக்கும் அற்புத வாழ்க்கையாக அது அமையும் என்றெல்லாம் மகனை அணைத்துக்கொண்டு பேசுகிறார். ஓல்செனை ஓரிரவில் சந்திக்கப் போகிறார் லாஸ். தன் பெட்டியைத் துழாவி தன் மனைவியின் அழகிய சால்வையை எடுத்து மடித்துக் கொண்டு ஓல்செனின் வீட்டுக்குப் போகிறார். அவளை கண்டு தன் கதையை சுருக்கமாய்ச் சொல்லி அந்த சால்வையை பரிசாக அவளுக்கு அளிக்கிறார். மதுவருந்துகிறார். அன்றிரவு தன்னோடு தங்கும்படி ஓல்சென் கேட்க, அவரும் தங்கியிருந்து காலையில் இருட்டில் வந்து விடுகிறார். இந்த உறவு தொடருகிறபோது ஊரில் பேச்சு அடிபடுகிறது. ஒரு நாள் பள்ளிக்கூட வகுப்பில் ஒரு சிறுமி பெல்லேயைச் சுட்டி காட்டி பேசிச் சிரித்துவிட்டு சிலேட்டில் எதையோ எழுதி ஒவ்வொருவரும் படிக்க அனுப்புகின்றனர். அதில் எழுதப்பட்டுள்ள வாசகம், பெல்லேயின் தந்தைக்கும் திருமதி ஓல்செனுக்குமுள்ள கள்ள உறவு குறித்தான செய்தி. அவமானத்தோடு வீடு திரும்பும் பெல்லேக்கும் சக மாணவர்களுக்கும் அது குறித்த சண்டை, கைகலப்பு ஏற்படுகிறது. மறுநாள் அவன் பள்ளிக்குப் போவதில்லை. வகுப்பாசிரியர் வகுப்பில் உறங்கினபடியே செத்துப் போகிறார்.

லாஸ் மீண்டும் கற்பனையில் பறக்கிறார். அந்தம்மாள் விவாகரத்து பெற்றால்தான் மணம் செய்து கொள்ளுவதாகக் கூறுகிறார். அப்பாவை அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் போக வேண்டாமென கூறுகிறான். ஸ்வீடிஷ் மக்களுக்கு அம் மண்ணின் விளையும் “காட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மீது மிகுந்த ஆசையும் பெருமையுண்டு. ஸ்வீடிஷ் திரைப்பட மேதை இங்மர் பெர்க்மன் தம் புகழ் பெற்ற திரைப்படம் ஒன்றுக்கு காட்டு ஸ்ட்ராபெர்ரிகள் [WILD STRAWBERRIES] என்றே தலைப்பிட்டவர். தம் நாட்டு பெருமை மிக்க WILD STRAW BERRIES விதைகளை தம்மோடு எடுத்து வந்த லாஸ் காரல்சன் அவற்றை ஆற்றங்கரையில் புல் நடுவே ஊன்றி விதைத்திருப்பார். டென்மார்க் மண்ணில் ஸ்வீடிஷ் பெருமையை நட்டு வளர்க்க முயற்சிப்பதாய் மகன் பெல்லேயிடம் கூறும் விதமும் அந்த ஊர்ப் பெருமை முகத்தில் ஒளிவிடும் பாங்கும் படத்தில் அருமையான காட்சி. ஸ்வீடிஷ் நடிகர் மாக்ஸ் வான்சைடோ [MAX VONSYDOW] இதுபோன்ற தருணங்களில் அற்புதமாக முகபாவம் காட்டி நடித்து விடுகிறார். சில தினங்களில் அவர் சோதிக்கையில் பெர்ரி பழங்கள் உயிர்பெற்று வந்திருப்பது கண்டு அவற்றைப் பறித்துச் சேகரித்து ஒன்றை வாயில் போட்டுச் சுவைக்கும் காட்சி அபாரம்.

ஆற்றில் பிறந்த குழந்தை அமுக்கப்பட்டு இறந்து மிதக்குகிற காட்சி – அப்பப்பா! போலீஸ் ஆணை கைது செய்து கொண்டு போகிறது, தான் பெற்ற குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக. புயலில் சிக்கிய கப்பலிலுள்ள மனிதர்களை காப்பாற்ற ஓடி எல்லோரையும் காப்பாற்றிவிட்டு தான் அடிபட்டு இறக்கிறான் முதலாளியின் மகன் நில்ஸ்.

இந்த சமயம் சிப்பாய் ஓல்சென் திரும்பி வந்துவிடுகிறான். எனவே பெல்லேயின் தந்தை போட்ட திட்டம் நடப்பதில்லை. அவர் திருமதி ஓல்செனை சந்திப்பதும் அத்தோடு நின்று விடுகிறது. கோங்ஸ்டிரப்பின் மச்சினி மகள் சிக்னே [SIGNE] என்பவள் பெரியம்மாவுடன் சிறிது காலம் இருக்கலாமென வருகிறாள். அந்த இளம்பெண் சிக்னே மீது கோங்ஸ்டிரப்பின் காமப் பார்வை ஆழப்பதிகிறது. ஊருக்கு வெளியில் நடக்கும் திருவிழாவுக்கு முதலாளி எல்லோரையும் வண்டிகளிலேற்றி அழைத்துச் செல்லுகிறான். திருவிழாவில் மலிவான சிறு சர்க்கஸ் ஒன்றை பெல்லே பார்க்கிறான். மேடையில் கோமாளிகள் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோமாளிச் சிறுவன் மேடையில் குதிப்பதைக் கண்ட பெல்லே அடையாளம் கண்டு கொள்ளுகிறான். ரூட்! ஓடிப்போன ரூட்டேதான். ரூட்டும் பெல்லேயை கண்டு மகிழ்ச்சியில் ஓடி வந்து கட்டிப் பிடித்து இருவரும் நடனமாடுகிறார்கள். இந்த திருவிழாவை ஒரு சந்தர்ப்பமாக தனக்கு ஆக்கிக்கொண்டு கோங்ஸ்டிரப் மச்சினி மகள் சின்னேயை ஆளில்லாத ஆற்றோரமாய்ப் பார்த்து அழைத்துச் சென்று மயக்கி கெடுத்து விடுகிறான். அதிர்ச்சியடைந்த சிக்னே அதைத் தன் பெரியம்மாவிடம் சூசகமாய்த் தெரிவித்து அழுதுவிட்டு ஊருக்குப் புறப்பட்டு விடுகிறாள். அவளைக் கப்பலில் ஏற்றிவிட்டு வரும் தன் கணவன் கோங்ஸ்டிரப்பை சிரித்து வரவேற்ற அவன் மனைவி கதவைத் தாழிட்டுக் கொண்டு அவனைத் தாக்குகிறாள். அவன் அலறும் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் ஓடி வந்து கதவைத் தள்ளிப் பார்க்கிறார்கள். இடுப்புக்குக் கீழே இரு தொடைகளுக்கிடையில் பெருகும் ரத்தத்தை துணியால் அழுத்திக் கொண்டு கைகளால் மூடிக் கதறிக் கொண்டிருக்கிறான் கோங்ஸ்டிரப். அவன் மனைவி அவனுடைய ஆண்குறியை கத்தியால் வெட்டி விடுகிறாள். எல்லோரும் மருத்துவரை அழைத்து வர ஓடுகிறார்கள்.

பெல்லே ஊருக்கே திரும்பிப் போகலாமென்கிறான். லாஸ் மறுக்கிறார். தான் அங்கேயே இருப்பதாகக் கூறுகிறார். பெல்லே ஸ்வீடனுக்கு கப்பலேற நடந்தபடியிருக்கிறான். அவன் எரிக்கின் வார்த்தைகளை மறக்கவில்லை. உலக நாடுகளை பார்க்கும் ஆவலோடேயே நடந்தபடியிருக்கிறான்.

இந்த டென்மார்க் படத்திலும் நிறைய ஸ்வீடிஷ் நடிகர்களிருக்கிறார்கள். ஸ்காண்டிநேவிய சினிமாவில் அது சகஜம். முக்கிய பாத்திரம் லாஸ் கார்ல்சனாக குடிக்கும் பகழ்பெற்ற நடிகர் மாக்ஸ் வான் சைடோ [MAY VON SYDOW] இங்மர் பெர்க்மனின் சில புகழ்பெற்ற ஸ்வீடிஷ் திரைப்படங்களில் கதாநாயகனாய் நடித்திருக்கும் சிறந்த கலைஞர். இந்த டேனிஷ் படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாயிருக்கிறது. இப்படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக 1987-ன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் சிறந்த அயல் மொழிப் படத்துக்கான ஆஸ்கார் விருது அவ்வாண்டு PELLE THE CONQUEROR-கு அளிக்கப்பட்டது. பெல்லே – சிறுவனாக PELLE HVENE GAARD எனும் சிறுவன் நடிப்பால் நம்மை கொள்ளை கொள்ளுகிறான்.

PELLE THE CONQUEROR டேனிஷ் திரைப்படத்தை மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் பில் ஆகஸ்ட் [BILLE AUGUST]. படத்தின் ஒவ்வொரு காட்சி சட்டகமும் 19-ம் நூற்றாண்டு நீர்வண்ண ஓவியங்கள் போலத் தோன்றுமாறு ஒளிப்பதிவாக்கியிருப்பவர் காமிரா கலைஞர் ஜோர்கன் பெர்சன் [JORGEN PERSSON]

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் புத்தக விலைப்பட்டியல்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் புத்தக விலைப்பட்டியல்




பெரியார் சுயமரியாதைப் பிரச்சார புத்தக விலைப்பட்டியல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

No 84, 50(1, E VK Sampath Rd,
Vepery, Periyamet, Chennai, Tamil Nadu 600007
PH: 09176757084

S.No  Book Price List  புத்தகங்களின் பெயர்  விலை
1 PEN YEN ADIMAIYANAL? பெண் யென் அடிமையானால்? 40
2 KOVILGAL THONDRIYATHU EAN? கோவில்கள் ஏன் தோன்றின? 110
3 PERIYARIN PANPATTU PURATCHI பெரியாரின் பண்பாட்டு புரட்சி 60
4 INDUMADHA THATHTHUVAMUM MANU DHARMAMUM – NEW இந்துமத தத்துவமும் மனு தர்மமும் – புதியது 45
5 KADAVULUM PRABANCHAMUM கடவும் பிரபஞ்சமும் 30
6 ILAINGARGALEY UNGALUKKU THERIUMA? NEW இளையர்களே உங்களுக்குத் தெரியுமா? புதியது 25
7 PERIYAR VAZHKAI KURIPPU – NEW பெரியார் வாழ்க் குறிப்பு – புதியது 15
8 INDHU MADHA PANDIGAIGAL – NEW இந்து மதப் பாண்டிகைகள் – புதியது 25
9 THANTHAI PERIYAR EIRUTHI PERURARI – NEW தந்தை பெரியார் எய்தி பேரூரரி – புதியது 35
10 PERIYAL OLI MUTHUKKAL – DK பெரியல் ஒளி முத்துக்கள் – டி.கே 70
11 VARNASHRAMAN – DK வர்ணாஷ்ரமன் – டி.கே 15
12 AARIYA MAYAI -DK ஆரிய மாயாய் – டி.கே 40
13 SATHIYAI OZHIKKA VAZHI DK சத்தியை ஒழிக்க வாழி டி.கே 60
14 PARPANA THANTHIRANGAL – DK பார்ப்பன தந்திரங்கள் – டி.கே 50
15 SAMBIRATHAYANGAL SARIYA? – DK சம்பிரதாயங்கள் சரியா? – டி.கே 85
16 ARTHAMATRA INDHU MADHAM – 1 – DK அர்த்தமாத்ரா இந்து மதம் – 1 – டி.கே 70
17 ARTHAMATRA INDHU MADHAM – 2 – DK அர்த்தமாத்ரா இந்து மதம் – 2 – டி.கே 40
18 ARINJARKAL PARVAIEL JOTHIDAM -DK அரிஞர்கள் பார்வையேல் ஜோதிடம் -DK 60
19 NADALUMANDRATHIL PENGAL EIDAOTHIKKIDU நாடாளுமந்திரத்தில் பெண்கள் எய்தாஒதிக்கிடு 20
20 AMBEDKAR BHUDDA NERIYAI THAZHUVIYATHU EAN? அம்பேத்கர் புத்தா நெறியை தாழ்வியது ஈன்? 50
21 PERIYAR PIRAVAMALIRUYINTHAL – DK பெரியார் பிறவாமலிருயிந்தல் – டி.கே 20
22 YAAR INTHA RAAMAN? யார் இந்த ராமன்? 25
23 KALLURIGALIL JOTHIDA MOODANAMBIKKAIYA? கல்லுரிகளில் ஜோதிட மூடநம்பிக்கையா? 25
24 MOODANAMBIKKAIGAL – DK மூடநம்பிக்கைகள் – டி.கே 10
25 PENNUKKU VENDAM PENMAI DK பெண்ணுக்கு வேண்டும் பெண் டி.கே 100
26 THEENDAMAIYAI OZHITHATHU YAAR? – DK தீண்டாமையை ஒழித்தது யார்? – டி.கே 20
27 MEENDUM MANILA PATIYALIL KALVI EAN? DK மீண்டும் மணிலா பாடியலில் கல்வி ஈன்? டி.கே 50
28 KUDI ARASU KALAMBAGAM 1 குடி அரசு கலம்பகம் 1 70
29 DRAVIDA EIYAKATHIN THOTRAMUM THEVAIVUM DK திராவிட ஈயக்கத்தின் தோத்திரமும் தெய்வமும் டி.கே 15
30 DRAVIDATHAL EZHUNTHOM DK திராவிடத்தால் எழுந்தோம் டி.கே 30
31 THANTHAI PERIYARIN MUKKIYA NERKANAL DK தந்தை பெரியாரின் முக்கிய நெற்கனல் டி.கே 70
32 PERIYAL ILLAVITTAL THAMIZHAGAM? பெரியாள் இல்லவிட்டல் தமிழா? 40
33 NEETHIMANDRANGALIL THANTHAI PERIYAR நீதிமந்திரங்களில் தந்தை பெரியார் 150
34 RAMAN RAMAYANAM KRISHNAN GEETHAI – DK ராமன் ராமாயணம் கிருஷ்ணன் கீதை – டி.கே 80
35 GEETHAIYIN MARUPAKKAM – DK கீதையின் மறுபக்கம் – டி.கே 300
36 RAMAYANAM RAMAN RAMARAJYAM – DK ராமாயணம் ராமன் ராமராஜ்யம் – டி.கே 120
37 VAZHGA DRAVIDAM DK வாழ்க திராவிடம் டி.கே 15
38 PERIYARIN PENNIYA PURATCHI DK பெரியாரின் பெண்ணிய புரட்சி டி.கே 20
39 THEE PARAVATTUM NEW DK தி பரவட்டும் புதிய டி.கே 50
40 PENNAL MUDIUM DK பென்னல் முடியம் டி.கே 125
41 THAMIZHUKKU ENNA SEITHAR PERIYAR? DK தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? டி.கே 180
42 KUDIARASU ETTIL PURATCHIKAVINGAR KAVITHAIGAL குதிரை ஏட்டில் புரட்சிகவிஞர் கவிதைகள் 80
43 BHARATHHIDASANUM NAGARATTHOTHANUM பாரதிதாசனும் நாகரத்தோதனும் 60
44 ANNAI E.V.R. MANIAMMAIYAR – 100 – DK அண்ணா ஈ.வெ.ரா. மணியம்மையார் – 100 – டி.கே 40
45 KARUNCHSOORIYAN – DK கருஞ்சூரியன் – டி.கே 80
46 JADHI OZHIYA VENDUM YEN? ஜாதி ஒழிய வேண்டும் யென்? 25
47 KARUPPU SATTAI – DK கருப்பு சட்டை – டி.கே 20
48 THIRUKURALUM MANUDHARMAMUM DK திருக்குறளும் மனுதர்மமும் டி.கே 30
49 SUYAMARIYATHAI THIRUMANAM EAN? சுயமரியாதை திருமனம் யேன் ? 12
50 THAMIZH NATTIL SAMUGA NEETHI VARALARU தமிழ் நாட்டில் சமூக நீதி வரலாறு 20
51 JADHIYAI OYZHIKAVA EIDAVUTHIKIDU ஜாதியாய் ஒழிகவா எய்தவுதிகிடு 50
52 69% EDAOTHIKKEDU SATTAM EAN? EPPADI? 69% எடாஒத்திக்கேடு சத்தம் யேன் ? எப்படி?? 60
53 CHAKARAVARTHHI THIRUMAGAM – DK சக்கரவர்த்தி திருமகம் – டி.கே 50
54 THAMIZHA NEE ORU INDHUVA? DK தமிழா நீ ஒரு இந்துவா? டி.கே 40
55 PAKTHARKALAY PATHIL SOLVIR பக்தர்கலை பதிலில் சொல்விர் 30
56 ERUTHAYA PADUKAPPUKAGA DK எருதய படுகாப்புகக டி.கே 20
57 NOYATTRA VAZHVUKU நோயாற்ற வாழ்கு 20
58 SEERTHIRUTHA SEMMAL PANAGAL ARASAR – DK சீர்திருத்த செம்மல் பனகல் அரசர் – டி.கே 35
59 DRAVIDA LELIN T.M. NAYAR DK திராவிட லெலின் டி.எம். நாயர் டி.கே 40
60 DRAVIDA THALAPATHI SIR A.T. PANNER SELVAM – DK திராவிட தளபதி சர் ஏ.டி. பன்னீர்செல்வம் – டி.கே 30
61 NEETHIKATCHIEN THANTHAI SIR. PT. THIYAGARAYAR நீதிகட்சியன் தந்தை ஐயா. PT. தியாகராயர் 25
62 DRAVIDA EIYAKA THALAIVAR C. NATESANAR – DK திராவிட ஈயக்க தலைவர் சி.நடேசனார் – டி.கே 25
63 THANTHAI PERIYARUM DR. AMBEDKARUM – DK தந்தை பெரியாரும் டாக்டர். அம்பேத்கரும் – டி.கே 12
64 DR. AMBEDKARIN BHUTHA KATHALUM PUTHTHAGA KATHALUM – DK DR அம்பேத்கரின் பூத காதலும் புத்தக கதையும் – டி.கே. 50
65 DRAVIDA DESIYA MANILA SUYATCHI EAN? DK திராவிட தேசிய மணிலா சூயாட்சி ஈஎன்? டி.கே 15
66 DRAVIDA INDHIYA – DK திராவிட இந்தியா – டி.கே 40
67 AARIYATHAL VEELNTHOM DRAVIDATHAL EZHUNTHOM அறியாத்தல் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம் 150
68 MARAIKAPATTA MAMANITHARGAL DK மரைக்காப்பட்ட மாமனிதர்கள் டி.கே 220
69 VISAVUKKAGA KATHIRUKKIREN (NEW) விசாவுக்கா காத்திருக்கேன் (புதிய) 20
70 THANTHAI PERIYAR EZHUTHIYA SUYASARITHAI DK தந்தை பெரியார் எழுதிய சுயசரிதை டி.கே. 10
71 EIYAKKA VARALATRIL RAMAYANA ETHIRPPU – NEW எய்யக்க வரலாற்றில் ராமாயண எதிர்ப்பு – புதியது 30
72 NAAN YEN KRITHUVANALLA நான் யென் கிருத்துவநல்ல 20
73 NAAN NATHIGAVATHI ANATHEN (INGERSOL) நான் நதிகாவதி அனாதன் (இங்கர்சோல்) 15
74 THAMIZHAGATHIL PARPANARGAL – NEW தமிழகத்தில் பார்ப்பனர்கள் – புதியது 220
75 GCARALMARX VAZHKAI VARALARU ஜிகரால்மார்களின் வாழ்க்கை வரலாறு 15
76 3000 ANDUGALUKKU MURPATTA INDIYA 3000 அண்டுகழுக்கு முற்பட்ட இந்தியா 50
77 THANTHAI PERIYARUM THAZHTHAPATURUM தந்தை பெரியாரும் தாழ்த்தபடும் 50
78 THANTHAI PERIYARIN PENNURIMAI SINTHANAI – NEW தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை – புதியது 20
79 SUYAMARIYATHAI IYAKKATHAI THOUTRUVITHATEN – NEW சுயமரியாதை இயக்கத்தாய் துருவித்தேன் – புதியது 15
80 MANU NEETHI ORU KULATHTHUKKU ORU NEETHI – NEW மனு நீதி ஒரு குளத்துக்கு ஒரு நீதி – புதியது 12
81 JOTHIDA ARAITCHI ஜோதிட அரைச்சி 20
82 RAMAYANA KURIPPUKAL ராமாயண குறிப்புகள் 30
83 ILAINGARKALUKKU PERIYA ARIVURAI இளையர்கழுக்குப் பெரிய அறிவுரை 20
84 VAZHKAI THUNAI NALAM – NEW வாழ்கை துணை நலம் – புதியது 35
85 INIVARUM ULAGAM – NEW இனிவரும் உலகம் – புதியது 30
86 INGERSOL VAZHKAI VARALARU NEW இங்கேர்ச்சோல் புதிய வாழ்க்கை வரலாறு 15
87 ILAINGARKALUKKU THANTHAI PERIYAR VARALARU இளையர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு 15
88 VAKUPPUVAARI URIMAI YEN? GO NEW வகுப்புவாரி உரிமை யென்? புதியதாக செல் 25
89 NEETHI KETTATHU YAARAI? NEW நீதி கேட்டது யாரை? புதியது 60
90 PAGUTHARIVU YEN? ETHARKKAGA? பகுத்தறிவு யென்? ஈதர்க்ககா? 70
91 THAMIZHAR THALAIVAR தமிழர் தலைவர் 350
92 THANTHAI PERIYAR ARIVURAI – 100 தந்தை பெரியார் அறிவுரை – 100 25
93 PERIYAR AMBEDKAR NATPURAVU பெரியார் அம்பேத்கர் நாட்டுப்புறவு 220
94 NEET THERVU AVALANGAL நீட் தேர்வு அவளாங்கல் 30
95 NEET NUZHAIVU THERVU KUDATHU YEN? நீட் நுழைவு தேர்வு கூடத்து யென்? 10
96 MOZHI PORATTAM – DK மொழி போராட்டம் – டி.கே 50
97 RSS ARIYA VENDIYA UNMAIGAL DK ஆர்எஸ்எஸ் ஆரிய வேண்டிய உண்மைகள் டி.கே 90
98 VARUNA JAATHI URAVAKKAM DK வருண ஜாதி உறவாக்கம் டி.கே 40
99 THAMIZHIL PEYARIDUVOM DK தமிழில் பெயர் எடுப்போம் டி.கே 50
100 SAMUGA NEETHIKU ETHIRANA PUTHIYA KALVIKOLGAUM NEET சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விகோல்கௌம் நீட் 10
2023 சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி – கலந்துரையாடல்

2023 சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி – கலந்துரையாடல்



#2023 #Chennai #International #Book #Fair #Discussion #Bharathitv #Bookday

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy RSS Indhiyavirkku Or Achuruthal Pre-Release Plan. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்

“கழிசடை” கவர்னர் கட்டுரை – அ.பாக்கியம்




இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.

தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார். அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.

பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார்.

பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.

கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.

இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது 18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.

உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.

இப்போது உ.பி. விட கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.

கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.

இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.

இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.

தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.

இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.

ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக எச்சரித்து உள்ளார்.

– அ.பாக்கியம்

புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022



புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: தமுஎகச மாநாடு வெல்லட்டும- ஆசிரியர் குழு
♻️ புத்தகக் காதல் 8: என் புத்தகங்கள் நீரைப் போன்றவை – ச.சுப்பாரவ்

♻️ தமுஎகச மாநில மாநாடு 15: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: தமுஎகச வின் கோட்பாடும் எனது கலையின் வெளிப்பாடும்! – இயக்குநர் சீனு ராமசாமி
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: கலை இரவும் நானும் – சைதை சா.துரைசாமி

♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 20: வாசிப்பும் சேமிப்பும் – எஸ். வி. வேணுகோபாலன்

♻️ நூல் அறிமுகம்: குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: ஆனந்தவல்லி – ஸ்ரீதர் மணியன்

♻️ அஞ்சலி: தோழர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி – இரா. தெ.முத்து

♻️ நேர்காணல்: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… மதுக்கூர் ராமலிங்கம் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்

♻️ தமுஎகச மாநில மாநாடு 15: 2018 – 22ஆம் ஆண்டுகளில் வெளிவந்த தமுஎகச படைப்பாளிகளின் படைப்புகள்

♻️ நூல் அறிமுகம்: மதஎந்திரங்களை உருவாக்கும் RSS எனும் உளகளாவிய அச்சுறுத்துல் – ஜமாலன்

நூல் அறிமுகம்: ஏ.ஜி.நூரானியின் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் தமிழில்: ஆர். விஜயசங்கர் – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: ஏ.ஜி.நூரானியின் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் தமிழில்: ஆர். விஜயசங்கர் – பெரணமல்லூர் சேகரன்




நூல் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் 
ஆசிரியர் : ஏ.ஜி.நூரானி
தமிழில்: ஆர். விஜயசங்கர்
விலை : ரூ.₹ 800/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஏ.ஜி‌. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எனும் நூலின் தமிழாக்கத்தை பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் மூலம் பாரதி புத்தகாலயம் அழகுற அச்சிட்டு பதிப்பித்துள்ளது.

இந்நூலின் 25 தலைப்புகளில் 626 பக்கங்களும் பின்னிணைப்புகள் 198 பக்கங்களும் என 824 பக்கங்கள் படிப்பதற்கு முதலில் மலைப்பாக இருந்தாலும் படிக்கப் படிக்க அறியப்படாத புதிய புதிய செய்திகளாக தொடர்ந்து கொண்டே போகிறது. சுரங்கப்பாதை போல போய்க் கொண்டேயிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்தது போன்ற உணர்வை இறுதியில் பெற முடிகிறது.

சில மிரட்டும் மொழிபெயர்ப்பு நூல் போலன்றி மூல தமிழ் நூலை வாசிப்பது போன்ற உணர்வே மேலிடுகிறது. அவ்வகையில் வெகு நேர்த்தியாக மொழி பெயர்த்துள்ள ஆர். விஜயசங்கர் அவர்களையும் அவருக்கு உறுதுணையாக இருந்த கமலாலயன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்நூலின் முகவுரையின் இறுதியில் நூலாசிரியர் “எதையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பதற்காகப் படியுங்கள்” என்று கூறியிருப்பது பொருள் பொதிந்தது. மேலும் மொழிபெயர்ப்பாளர் உரையில் நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சம் “அறிவுப் பூர்வமற்ற ஒன்று நாட்டிற்கு எவ்வளவு அபாயகரமானது, அரசியல் அமைப்பு அல்ல என்று கூறிக்கொண்டே ஒரு அரசியல் கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றித் தன்னுடைய இந்து ராஷ்டிரக் கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு விரைவாக நகர்கிறது என்கிற வரலாற்றை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வதுதான் இந்த மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது வெற்றி அடைந்துள்ளது எனலாம். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பாளர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. அது வெற்றி அடைந்திருக்கிறது என்பதை நூல் முழுவதையும் படித்தபின் உணர முடிகிறது.

இந்திய சுதந்திரப் போரில் பங்கு பெற்று ரத்தம் சிந்தி, சிறைப்பட்டு, இளமையை இழந்து, சித்திரவதைக்குட்பட்டு குடும்பத்தை இழந்த தியாகிகளுள் இஸ்லாமிய மக்கள் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்துள்ளனர் என்பதை வரலாற்று ஆவணங்கள் பறை சாற்றுகின்றன. இந்தியச் சுதந்திரப் போரின் முக்கியமான கட்டமான சிப்பாய் கலகம் என சொல்லிக் கொடுக்கப்பட்ட சிப்பாய் புரட்சியில் இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது என்பதை ‘அறிமுகம்’ எனும் முதல் தலைப்பிலேயே அறியலாம். இப்பகுதியில் இந்துக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களைக் கண்டே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகம் அஞ்சினர் என்பதையும் ஆகவேதான் அவர்கள் மீது அதிகமான அடக்குமுறை ஏவப்பட்டது என்பதையும் டெல்லி மண்டலத்தில் இருந்த முஸ்லீம்களின் அசையா சொத்தில் நான்கில் ஒரு பங்கு அதிக வரிகள் வாயிலாகப் பறிக்கப்பட்டதும் அதே நேரத்தில் இந்துக்களின் மீது 10 சதவீத வரியே விதிக்கப்பட்டது என்பதையும் தெரியப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும் பிரிட்டிஷாரின் பிரித்தாள் சூழ்ச்சியில் சிக்குண்ட பல தலைவர்களை நூலில் பார்க்க முடிகிறது. பஞ்சாப் சிங்கம் என போற்றப்பட்ட லாலா லஜபதிராய் இந்து மகா சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றியதும் அதுசமயம் “இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பாலும் ஒரு இந்து அமைப்பு என்பதை மறைப்பதில் பயனேதும் இல்லை” எனப் போட்டு உடைப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்துக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் பார்வை, தேசத்தின் மீது மத-கலாச்சார ஒற்றைத் தன்மையைத் திணிக்க வேண்டும் என்கிற ‘சர்வாதிகார’ ஆசை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்பதையே லஜபதிராயின் கண்ணோட்டம் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

“ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு பவுத்தம் இந்தியாவின் பெரும் மதமாக இருந்தது என்னும் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பரின் கூற்று சிந்திக்கத் தக்கது. பவுத்தம் கடுமையான தாக்குதலைச் சந்தித்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.

பவுத்தத்தை அழித்து, இஸ்லாத்தை அழித்து இந்துத்துவாவைக் கட்டி எழுப்ப சாவர்க்கர் துவங்கி வரிசையாக பணியாற்றி அவர்கள் அளவில் வெற்றி முகமாக பயணித்துக் கொண்டிருப்பது வெள்ளிடை மலை. இந்துத்துவம் மதக்கோட்பாடு அல்ல. அது ஓர் அரசியல் கோட்பாடு‌ அந்தக் கோட்பாட்டினைப் புதிதாகப் படைத்தார் சாவர்க்கர்.

“நான் ராமர் என்ற காரணியைத் திறம்படப் பயன்படுத்தாமலிருந்தால், டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் தோற்றிருப்பேன்” என்று அத்வானி கூறியதாகவும், “இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் முகமதியா இந்துக்கள் தான், இந்தியாவிலிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்டி இந்துக்கள் என்று நான் கூறுகிறேன். கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் அவர்களுடைய மதமாக ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் தாம் அவர்கள். எனவே முஸ்லிம்களையோ இந்துக்களையோ அவர்களுக்கே உரிய தனி அடையாளங்களுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் இந்துமத மயமாக்கப்பட வேண்டும்” என 1991-ஜனவரி 12ல் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேசியிருப்பதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது. சிறுபான்மையினர் சரணாகதி அடைய வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஓர் இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்ட திருத்தத்தை செய்யவேண்டியதில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால் போதும். இதைத்தான் நரேந்திர மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார். ஜனநாயகமற்ற இந்திய மண்ணின் மீது போடப்பட்டிருக்கும் ஜோடனைதான் ஜனநாயகம்‌. மோடியின் திட்டமான நிறுவனங்களில் இந்துத்துவாவாதிகளை நிரப்புவது, யோகிகளை முதலமைச்சர்களாக்குவது, காபினட் முறையை முடக்குவது, ஆட்சிப் பணியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வருவது, நீதித்துறையைத்தன் செல்வாக்கிற்குள் கொண்டு வருவது என தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.

மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவர்களின் அமைப்பு 1998-டிசம்பர் 4 அன்று வெளியிட்ட கடிதத்தில் “நாடு சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளை விட அதிகமான தாக்குதல்கள் ஜனவரி 1998 முதல் கிறிஸ்தவ சமூகத்தின் மீது நடந்து வருகின்றன. கன்னியாஸ்திரீகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிரியார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பைபிள் எரிக்கப்பட்டுள்ளது. மதாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
கல்வி நிலையங்கள் தாககப்பட்டிருக்‌‌‌கின்றன. மத நம்பிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.”
என குறிப்பிடப்பட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.
இது கோல்வால்கரின் சிந்தனைக் கொத்தில் குறிப்பிட்டுள்ள ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்தாம் உள்நாட்டு அபாயங்கள் என்பதை ஒத்துள்ளன.

ஆர் எஸ் எஸ்ஏன் உருவாக்கப்பட்டது எனும் தலைப்பில் நூராணி ஆதாரங்களை அடுக்குகிறார்.

“ஒரு புறத்தில் அன்னிய நிர்வாகத்தின் அரசியல் ஆதிக்கமும் மறுபுறத்தில் முஸ்லிம்கள் செய்யும் சித்திரவதையும் கத்தரிக்கோலின் இரு கத்திகளுக்கு இடையே நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்துக்களை முஸ்லிம்களாக்குவதற்காக அவர்கள் நம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல்களையும் நம் மகள்களையும், மருமகள்களையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வதையும் குறித்து நான் பேசத் துவங்கினால் என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த இயலாது. எனவே நான் அவை குறித்து அதிகம் பேசவில்லை. கிறிஸ்தவர்கள் நம்மை காயப்படுத்துகிறார்கள். இந்தத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மை ஒரு அமைப்பாக்க வேண்டும். இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான் 1925 ஆம் ஆண்டில் ஆர். எஸ். எஸ். உருவாக்கப்பட்டது.”

மறு ஆண்டே மோதிலால் நேரு தன் மகன் நேருவுக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

“மதரீதியான வெறுப்பும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் சகஜமாக நடக்கிறது. நான் முழுவதுமாக வெறுத்துப் போய்விட்டேன். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன். அதற்குப் பின் என் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் எனக்குக் கவலை. நான் காங்கிரசின் கவஹாத்தி மாநாட்டிற்காகக் காத்திருக்கிறேன். அதுவரை பேசப் போவதில்லை. மாளவியா – லாலா கும்பல் பிர்லாவின் பண உதவியுடன் காங்கிரசைக் கைப்பற்ற நினைக்கிறார்கள்.”
தாராள பண உதவி செய்பவர் பிர்லாவாக மட்டும் இருக்க முடியாது. ஆர். எஸ். எஸ்‌ பங்கும் இல்லாமல் இருக்க முடியாது.”

இந்திய தேசியத்தின் மீதான உறுதிப்பாடு எனும் தலைப்பில் 1886ல் நடந்த இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டின் அறிக்கையில் “காங்கிரஸ் என்பது உலகியல் நலன்களை சார்ந்த சமூகமேயன்றி ஆன்மீக நம்பிக்கைகளுக்கானது அல்ல என்பதால் அரசியல் பிரச்சனைகளைப் பேசுவதில் அதிலிருக்கும் ஒருவர் மற்றவரை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதே அவர்களின் தகுதி. இந்த நாட்டில் அவர்களின் பொது நலன்கள் ஒரே மாதிரியானவை என நாங்கள் கருதுகிறோம்; இந்துக்களும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், பார்சிகளும் தத்தமது மத சமூகங்களின்
பிரதிநிதிகளாக இருந்து பொதுவாழ்வில் எழும்‌‌‌ மதம் சாராத பிரச்சனைகளை விவாதிக்கலாம்” என மதச்சார்பின்மை நிலை தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவிக் கால் பரப்பியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

“ஆர்.எஸ்.எஸ்.ஸின் யுக்தி பலனளிக்காது. அதற்கு இந்தியா முழுவதிலும் 1500 கிளைகளும் 2 லட்சம் உறுப்பினர்களும் இருப்பதாக அக்டோபர் 25, 1942 அன்று கோல்வால்கர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும் அதன் உறுப்பினர்கள் குடிமைச் சமூகம் மற்றும் ராணுவத்தின் அனைத்து முக்கியச் சேவைகளிலும் ஊடுருவி விட்டனர். நம்பத் தகுந்த அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், குமாஸ்தாக்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்த துப்பாக்கி தொழிற்சாலையிலும், கமாரியாவிலிருந்த ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையிலும் ஷாகாக்களை அமைத்தது. எனினும் பிரிட்டிஷ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாய் ஆங்கில அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். வெண்சாமரம் வீசி வந்தது.

இன்றைய பாசிச அரசின் வித்து அக்காலத்திலேயே ஐரோப்பிய பாசிஸ்டுகளின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ். வயல்களில் விதைக்கப்பட்டது. சாவர்க்கரின் ஹிட்லர் மீதான புகழ்ச்சி ஹிட்லரை ஒரு ஹீரோவாக வழிபடுவதற்கு இட்டுச் சென்றது. அவர்களின் கருத்துகளுக்கு வங்காளமும் பம்பாய் மாகாணமும் நல்ல விளைநிலமாக இருந்தன. 1931ல் மூஞ்சே இத்தாலிக்குச் சென்றதும், முசோலினியைச் சந்தித்ததும் வரலாற்றில் திருப்புமுனைகளாயின. போர்க்கொள்கையும், இனவாதமும் இருதரப்பையும் இணைத்த சபையானது.” எனும் குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவேதான் “இத்தாலிக்கு ஃபாசிஸ்டுகள் எப்படியோ, ஜெர்மனிக்கு நாஸ்திகர்கள் எப்படியோ, அப்படி இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ். என்றாக வேண்டும் என்றுதான் ஆர்.எஸ். எஸ்‌. நம்புகிறது என்று 1933லேயே உளவுத் துறையின் அறிக்கை எச்சரித்துள்ளது உற்று நோக்கத்தக்கது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி எழுதி அம்மணமானது அனைவரும் அறிந்ததே. 1913, நவம்பர் 14ல் சாவர்க்கர் சமர்ப்பித்த கடிதத்தில் “நான் எந்தத் திறன் அடிப்படையில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். அரசு எனும் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”

இப்படிக் கேவலப்பட்ட சாவர்க்கர் காந்தி கொலை வழக்கில் வழக்கைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 22-1948 அன்று மும்பையில் காவல் துறை ஆணையருக்கு “அரசாங்கம் சொல்லும் எந்தக் காலம் வரையிலும் நான் மதவாதம் அல்லது அரசியல் சார்ந்த எந்தப் பொது நிகழ்விலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பேன்” என்றார். சாவர்க்கர் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கிச் செல்லத் தயாராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. உண்மையான எந்த தேச பக்தரும் இவரை மன்னிக்க மாட்டார். ஆனால் காலக் கொடுமையால் சாவர்க்கர் வழிபாட்டிற்குரியராகவும் ஆக்கப்பட்டிருக்கிறார் எந்த மனிதரின் கொலைச் சதியில் சாவர்க்கர் ஈடுபட்டாரோ அவருடைய படத்திற்கு நேராக பாராளுமன்ற மைய மண்டபத்தில் சாவர்க்கரின் படமும் மாட்டப்பட்டிருக்கிறது என்னும் ஆதங்கம் நூலாசியருடையது மட்டுமல்ல. நம்முடையதும்தான்.

1996ல் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்கிற புத்தகம் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பைபிளாகப் போற்றப்படுகிறது. கோல்வால்கரின் பட்டியலில் ஏராளமான ஹீரோக்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை என்னும் நூலாசிரியர் பண்டைக்கால இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்று மும்பையின் ரிலையன்ஸ் ஹர்கிசோன்தாஸ் மருத்துவமனையில் மோடி ஆற்றிய
உரைக்கு இவரே ஊக்க சக்தியாக இருந்துள்ளார் என்கிறார்.

கோல்வால்கரின் சிந்தனைக் கொத்து என்ற நூலின் 10 மற்றும் 11ஆம் அத்தியாயங்களை விஞ்சும் வகையில் ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயத்தில் முஸ்லிம்கள்‌, கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று உள்நாட்டு அபாயங்களாகக் குறிப்பிடுவதையும் அதனடிப்படையில் இப்போதும் அவ்வாறே நாடாளும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் இம்மூன்று பிரிவினரையும் பரம எதிரிகளாகக் கருதுவதையும் பார்க்க முடிகிறது.

“ஆர்.எஸ்.எஸ்.ஸினை ஓர் அபாயகரமான அமைப்பாகவும் ஃபாசிஸம் என்கிற சொல்லின் கறாரான பொருளுக்கு உகந்ததாகவுமே” நேரு கருதினார் எனும் நிலையில் இத்தகைய அபாயத்தை மக்கள் மத்தியில் நேரு ஏன் அம்பலப்படுத்தவில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

நேருவின் அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்தது ஏற்க இயலாத முரண். “உங்கள் வீட்டின் மேல் பக்வா ஜண்டாதான் பறக்கிறது ‌. மூவண்ணக் கொடி இல்லை என்பதே எனக்குத் தெரியாது. தேசியக் கொடியல்லாத வேறு ஒரு கொடியை ஓர் அமைச்சர் பறக்க விடுவது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது” எனப் பேசிவிட்டு நேருவால் எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது என்பதும் உளவுத் துறையின் பணி குறித்த கேள்வியும் விடையின்றித் தொக்கி நிற்கின்றன. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய களையை ஆல் விருட்சமாக விட்டதில் நாட்டை ஆண்டவர்களுக்குப் பங்கு இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

‘ஆர்.எஸ்.எஸ்.ஸும் காந்தி படுகொலையும்’ எனும் தலைப்பிலான கட்டுரையில் ஒரு கொலைகாரன் அரசியல் வசைபாடுவதை ஒரு நீதிபதி ‘கண்ணீர் மல்கக்’ கேட்டது யாரும் கேட்டிராத செயல் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சேக்கு எதிராக பெரும் ஆதாரங்கள் இருந்தன எனப் பட்டியலிடுவதும் குறிப்பிடத்தக்கவை.

காந்தியின் படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ்‌.ஸுக்கு 04.02.1948ல் தடை விதித்த காங்கிரஸ் அரசு குறுகிய காலத்திற்குள்ளாகவே ஜூலை11,1949 அன்று தடையை நீக்கியது.

ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்னும் அரசியல் அமைப்பைத் துவக்கியது. “ஆர்.எஸ்.எஸ்‌.ஸுக்கு முறை தவறிப் பிறந்த குழந்தைதான் ஜனசங்கம்” என்று நேரு கூறியது வரலாற்றுப் பதிவு.

1957-ஜனவரி 7 தேதியிட்ட ‘ஆர்கனைசர்’ இதழில் ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்த தீர்மானத்தில்..”தேசியத்தை வளர்ப்பதற்காக நாட்டில் வாழும் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பாரதீய ஜனசங்கம் உறுதியேற்கிறது. இந்தக் கடமையை நிறைவேற்ற சமுதாயமும் அரசாங்கமும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” குறித்து அன்று பட்டியலிடப்பட்டவற்றை இன்று மோடி அமுலாக்கி வருகிறார் எனின் மிகையன்று. பா.ஜ.க. சமீப காலங்களில் வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகள் போன்ற ஆவணங்களில் வெளிப்படுத்திய கொள்கைகள் அந்தப் பழைய ஆவணத்தில் கலாச்சார தேசியம் என்ற பெயரில் கூறிய கருத்துக்களின் மறுபதிப்புக்கள்தான் என தெளிவுபடுத்தியுள்ளார் நூலாசிரியர். ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு கலாச்சாரம் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய உணர்வை முடுக்கி வலுப்படுத்துவது அதிகாரம் குவிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியினால்தான் முடியும். கூட்டாட்சித் தத்துவம் தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எனும் ஜனசங்கத்தின் 1965ஆம் ஆண்டின் கொள்கை விளக்கத்தைக் குறிப்பிட்டு அதுவே ‘பழைய கள் புதிய மொந்தை’ யாக பா.ஜ.க.வின் கொள்கையாக இருப்பதை உணர முடிகிறது.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் பாணியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் சங்பரிவாரங்களும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

“விவாகரத்து பெற்ற ஒரு இஸ்லாமியப் பெண் இரண்டாண்டுகளுக்குள் பிள்ளை பெற்றால் அக்குழந்தை அவளுடைய முதல் கணவனால் உண்டானதாகக் கருதப்பட வேண்டும் என குரான் கட்டளையிடுகிறது” எனும் பொய்யைக் கோல்வால்கர் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையென கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பினார்.

நச்சரவமான ஆர்.எஸ்.எஸ். மீது கடும் தொடர் நடவடிக்கையை நேருவும் அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர பிற எதிர்க்கட்சிகளின் பார்வையும் ஆர்.எஸ்.எஸ்‌. மீது மென்மைத்தன்மை மிக்கதாகவே இருந்தது. எனவேதான் 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் துவங்கிய முழுப் புரட்சி இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸால் எளிதாக இணைய முடிந்தது.
மேலும் “1974ல் பீகாரில் தான் துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவியை ஜெ.பி‌. ஏற்றுக் கொண்டது பெரிய சோகமாகிறது. அப்படிச் செய்ததன் மூலம் ஒரு வாசகர் சக்திக்கு அவர் கவுரவத்தை வழங்கிவிட்டார் என்கிறார் நூலாசிரியர்.

1975ல் இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தின் பின்னணியில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தியைத் தோற்கடித்து காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க மாற்றுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் இணைந்தது கொள்கை அடிப்படையில் முரணானது. புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையில் 85 உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது சாதாரண விசயமல்ல. கொள்கை அடிப்படையில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுதல் சாத்தியமற்றது. அதிகாரப் போட்டி வேறு. எனவே ஜனதா அரசு 1979ல் கவிழ்ந்தது. பாரதீய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

1980ல் உருவான பாரதீய ஜனதா கட்சி இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாட்டு அணிதான். ஆர்.எஸ்.எஸ். என்பது தாய். பா.ஜ.க. அதனுடன் தொப்புள் கொடியினால் இணைக்கப்பட்ட குழந்தை. பா.ஜ.க. தோன்றிய முதல் பத்தாண்டுகளுக்குள்ளாகவே இந்துத்துவம் என்பதை வெளிப்படையாக பரப்புரை செய்யத் துவங்கியது.

பா.ஜ.க. 1981ல் பொய்ப் பரப்புரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டது. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்திலிருக்கும் அனைத்து தலித் குடும்பங்களும் இஸ்லாமிய மதத்தினைத் தழுவக் காரணம் இஸ்லிமியத் தலைவர்களும் பணமும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர். ஆனால் இந்திய அரசின் பட்டியலின் மக்கள் மற்றும் பழங்குடியினர்க்கான பிராந்திய ஆணையரின் அறிக்கை இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என அம்பலப்படுத்தியது என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர். மீண்டும் 1985ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக 1986ல் இயற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துச் சட்டம் பாபர் மசூதியின் பூட்டுக்களைத் திறக்க பிரதமர் ராஜீவ் காந்தியைத் தூண்டியதாகவும் அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் புத்துணர்ச்சி பெற்று இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே இருந்த உறவைக் கெடுத்ததாகவும், நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளின் அடிப்படையைத் தகர்த்ததாகவும் பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் என்பது புலனாகிறது.

பாபர் மசூதியை அகற்ற வேண்டும் என்று ஏப்ரல் 8,1984 அன்று சங்பரிவாரமான விஸ்வ இந்து பரிஷத் அறைகூவல் விடுத்தது. ரத யாத்திரையும் துவக்கப்பட்டது. ராமர் கோயிலைக் கட்டுவதற்காக 2000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ராம்ஷிலா என்கிற பெயரில் பூஜையால் புனிதப் படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்து செல்லும் இந்த இயக்கத்தை வி.எச்‌.பி நடத்தியது. கருணை ததும்பும் ராமனின் பிம்பம் திரிசூலம், வில், அம்பு ஏந்திய வீரனைப்போல மாற்றி வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளை வி.எச்.பி. வெளியிட்டது.

1990, ஆகஸ்ட் 7 அன்று அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்துவதாக பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார். கூர்மையாக எதிர்வினையாற்றிய அத்வானி ரத யாத்திரை திட்டத்தை அறிவித்தார். ரத யாத்திரையின்போது பீகாரில் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்யவும் வி‌பி.சிங்.அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றது. வி.பி.சிங் அரசு வீழ்ந்தது.

1991, ஜுன் 21ல் காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்றது. அப்போதே காவி உடையணிந்த பா.ஜக. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தது இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே ஆண்டு கணிசமான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் பா.ஜ.க.வில்
இணைந்த செய்தியை விவரிக்கிறார் நூலாசிரியர்.

மீண்டும் ரத யாத்திரை.
“அத்வானியின் ரத யாத்திரை பி.ஜே.பி.யால் எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.ஸினால் வடிவமைக்கப்பட்ட யுக்தி” எனும் நூலாசிரியர் கட்சியின் சின்னமான தாமரையைப் பெரிய அளவில் சுமந்து சென்ற அந்த டொயோட்டா ரதம் அவர்களின் அரசியல் நோக்கத்தை அறிவித்தது என்கிறார்.

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அனைத்து அதிகாரங்களை வழங்கியிருந்த போதிலும் அவர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். உலகின் முன் இந்தியா வெட்கித் தலை குனிந்தது. ஆர்.ஏஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டன. உ.பி. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பா.ஜ.க. அரசுகள் கலைக்கப்பட்டன. குதிரைகள் பறந்த பிறகு லாயம் பூட்டப்பட்டன.

அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் இயற்றுவது என்னும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கவனம் சென்றது. இன்றளவும் படிப்படியாக அவை நிறைவேறறப்பட்டு வருவது கண்கூடு.

பா.ஜ.க.வை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் சுதர்சன் பேசியவை அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே.
“முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கடலில் தூக்கி எறிய வேண்டும்‌. அவ்வாறு செய்ய இயலாதென்பதால் அவர்களை இந்திய மயமாக்க வேண்டும். இந்துத்துவம் என்பதன் மறைமுகம் அது.

சங்க பரிவாரம் என்னும் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து பாரத் பூஷன் குறிப்பிடும் பட்டியல் மிக நீளமானது. அப்பட்டியல் முழுவதையும் வாசித்தால் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கேற்ப சங் பரிவாரம் எடுத்துள்ள பல அவதாரங்களை அறியலாம். குஜராத் அரசு தன் ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மீதிருக்கும் தடைய நீக்கும் விதமாக அரசுப் பணியாளர் நடத்தை விதிகளைக் திருத்திய தையும் அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் பிரதமர் வாஜ்பாய் ஆதரவுடன் தடையை நீக்கியதையும் இந்நூல் விளக்குகிறது.

2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய முஸ்லிம்களின் படுகொலையும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“குஜராத் படுகொலையினால் மோடி அரசியல் ரீதியாக பாதிப்படைவதற்குப் பதிலாக, அத்வானியை ஓரம் கட்டிவிட்டு பிரதமர் பதவிக்கான பா.ஜ.க.வின் வேட்பாளரானார். அத்வானி செய்த உதவிக்குப் பரிசாக முக்கியமான நேரத்தில் அத்வானியைத் தகுந்த சடங்குகளுடன் பரணில் தூக்கிப் போட்டார் என்னும் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை.

“காங்கிரசும் பாகிஸ்தானும் ஏதோ ஆபத்தான செயலில் ஈடுபட்டிருப்பதால் டிசம்பர் 12 அன்று நடக்கவிருக்கும் தேர்தலின்போது குஜராத்தியர் கவனமாக இருக்க வேண்டும்” என்று மோடி பேசியதன் தீய எண்ணத்தையும் அப்பட்டமான பொய்களையும் கலந்து சேற்றை வாரி இறைப்பதில் மோடி எந்த அளவிற்கு இறங்கிச் செல்லத் தயங்க மாட்டார் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

“பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் நடந்த ரயில் படுகொலையைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு மாநில நிர்வாகம் மறைமுக ஆதரவு அளித்தது மட்டுமன்றி, முதல்வர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வி.எச்.பி/பஜ்ரங் தளத்தின் அதிரடிப் படையினர்க்கு வேலையை முடிக்க 24 மணி நேரம் கொடுத்தது.” எனும் தி டெலிகிராப் பத்திரிகை செய்தியை ஆதாரமாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.

2005-ஜுன் 15ல் நீனா வியாஸ்’தி இந்து’ பத்திரிக்கையில்..”மக்களுக்குப் பதில் சொல்ல பா.ஜ.க கடமைப்பட்டதல்ல; நாட்டுக்கு நல்லது எது என தமக்குத் தெரியும் என்று நினைத்த சூப்பர் தேசியவாத, சூப்பர் தேசபக்தக் கூட்டம் ஒன்றிற்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதை அக்கட்சி மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்‌ ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை மறந்து விடாதீர்கள். பா.ஜ.க. எப்போதாவது தன் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ்‌. என்கிற தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைப்புதான் நாட்டை ஆளும். ஜனநாயக இந்தியா என நாம் இன்று அறிந்து வைத்திருக்கும் ஒன்று பழைய கதையாகி விடும்.” என்று தீர்க்கதரிசனமாக எழுதியிருக்கிறார் என்பதை இன்றைய யதார்த்தக் களநிலவரம் மெய்ப்பிறக்கிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் 2005-அக்டோபர் 24ல் “பா.ஜ.க சரியான வழியில் செல்கிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்வதுதான் எங்கள் வேலை” என்று மோகன் பகவத் பேசியதாக குறிப்பிடப்பட்டிருப்பது சாதாரண விசயமன்று. ஆர்.எஸ்.எஸ்‌. பா.ஜ.க.வுக்குப் பரிந்துரைத்த 5 அம்சங்களாக 1. இந்துத்துவக் கொள்கைக்கு முதன்மை 2. அமைப்பை பலப்படுத்துவது 3. தொண்டர்களுக்கும் பயிற்சி அளிப்பது 4. நன்னடத்தை 5.கலந்தாலோசனை செய்வதற்கான கட்சி அமைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை இன்றளவும் ஆர்
எஸ்.எஸ், பா.ஜ
க.வால் பின்பற்றப்படும் அன்றாட நடைமுறை வேலைகள் என்பது அனைவரும் அறிந்ததே.

“பெண்கள்‌ 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சுதர்சன் சொன்னதும் “12 மகன்களைக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியரின் சந்ததி 1200 ஆண்டுகளில் 1200 ஆகப் பெருகியிருக்கும். 11 மகன்களைக் கொண்ட குடும்பம் 1100 சந்ததிகளை உருவாக்கியிருக்கும். மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு 38 வாரிசுகள் இருப்பர். ஆனால் இரண்டே மகன்களைக் கொண்ட குடும்பத்தினுடைய சந்ததி பூஜ்யத்திலேயே இருக்கும்” என பீதி கிளம்பியதும் “இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாட்டினைக் கைவிட வேண்டும்” என்று பேசியதும் மதவெறிப் பரப்புரைதானே!

ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்வதற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியைக் குறிப்பிடும் நூலாசிரியர், இவ்வுறுதி மொழியை ஏற்றபின் அந்நபர் பிரதமர் ஆகும்போது ஏற்கும் உறுதி மொழியையும் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். எப்படி மக்களை ஏமாற்றுகிறது என் விவரிப்பது முக்கியமானது.

ஆர்.எஸ்.எஸ்‌ கூறும் அகண்ட பாரதத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான் நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும் என்பதை மோகன் பகவத் வாய்வழி அறியமுடிகிறது. அவர் சொல்கிறார்: “தேசப் பிரிவினை தீர்மானமானதல்ல. அதனை ரத்து செய்வது பாகிஸ்தான் உட்பட அனைத்து தரப்புகளின் நலனுக்கு உகந்தது என்பதால் நாங்கள் அதைச் செய்வோம்‌. காந்தாரம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட ஆப்கானிஸ்தானத்தில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், திபெத், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிலையைப் பாருங்கள். அகண்ட பாரதத்திலிருந்து அவை பிரிந்து சென்ற பிறகு என்ன மகிழ்ச்சியைக் கண்டன?”

இந்நூலின் முக்கியமான இன்றைய தேவையான பகுதியாக விரிகிறது ‘மோடியின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். ராஜ்யம்”. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து நேருவின் மரபினை முற்றிலும் அழித்து எதிர்க்கட்சிகளே இல்லாத ஓர் ஆட்சியை அமைக்கும் எண்ணத்துடன் சர்வாதிகாரியாகக் காய்களை நகர்த்தி வருகிறார் மோடி.

“கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ்‌ பிரதான கவனம் செலுத்துகிறது. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், ஏகல் வித்யாலயா, சேவா பாரதி, விவேகானந்தா கேந்திரா, பாரத் கல்யாண் பரிஷத், ஃபிரண்ட்ஸ் ஆஃப் டிரைபல் சொசைட்டி, ஆகிய ஆர்.எஸ்.எஸ்‌ அமைப்புகள் ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிவது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சில துளிகள்:
மார்ச் 2015ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் காவி ஆட்சியாளர்களின் ருசிக்கேற்றபடி மாற்றியமைக்கப்பட்டது. மதச்சார்பற்ற நாட்டைத் தகர்த்து ‘ஏகத்தலைவர்’ கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு இந்து நாட்டை உருவாக்க படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அரசியல் முக்கியத்துவம் இல்லாதவர்களாக்கி ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசின் உதவி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளுக்குப் புது வேகமளித்தது. 2012க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 2000 என்கிற விகிதத்தில் ஆர்.எஸ்.எஸ்‌ ஷாகாக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2015க்குள் இந்தியா முழுவதிலும் 51,335 ஷாகாக்கள் தினசரி பயிற்சி நடத்தும் நிலை ஏற்பட்டது என டைம்ஸ் ஆஃப் இந்தியா மூலம் விவரிக்கிறார் நூலாசிரியர்.

அறிவியலுக்குப் புறம்பான பழமைவாத மூடநம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்படுவது இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “பறந்து கொண்டிருக்கும் விமானங்களை மாயமாய் மறையச் செய்யும் வேதியியல் சூத்திரத்தினை மகரிஷி பரத்வாஜ் என்பவர் எழுதிய வைமாணிக சாஸ்திரம் பரிந்துரைத்தது. மனிதர்களைக் குளோனிங் முறையில் தயாரிக்க முடியும் என்பதன் முதல் சான்றுதான் கௌரவர்கள் என்றும் புற்றுநோயை கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை ஆளும் பா.ஜ.க.வினர் கூறி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்தியாவின் பின்னோக்கிய பயணத்தை உணர்த்துகிறது.

“நாடு முழுவதும் கல்வியைக் காவி மயமாக்கும் பணியைச் செய்து வருகிறேன். அதனை விரைவில் செய்து முடிக்க நினைக்கிறேன்‌. உலக வளர்ச்சிக்கு நமது வல்லுநர்கள் என்ன பங்களித்திருக்கின்றனர் என்று நாம் உலகிற்குச் சொல்லிக் கொடுப்போம்” என்று தீனா நாத் பாத்ரா எனும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவவியலாளர் உயர்கல்வித்துறை ஆலோசகராகி இவ்வாறு கூறியிருப்பதை எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடியும்?
2016-ஜூலை 27 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளைப் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தெளிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரே அடியில் இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அறங்காவலர் குழுவை மாற்றியமைத்து தனக்கு விருப்பமானவர்களை நியமித்ததை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இவ்வத்தியாயம்.

நிதியமைச்சகம் நடத்திய பொருளாதார மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட ஜீன் ட்ரேஸ் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போதே பேச்சாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் ஏ. சேதுமாதவனைப் பதவியிலிருந்து இறங்கிச் சொல்லிவிட்டு அந்த இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். கருத்தியலாளர் ஒருவரை நியமித்தது மோடி அரசு.

2015-ஆகஸ்ட்3 நாளிட்டு ஏசியன் ஏஜ் பத்திரிகைச் செய்தி:-
“மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மதக்கலவரங்கள் அதிகரித்துவிட்டன; 2015ன் முதல் 6 மாதங்களை அதற்கு முந்தைய ஆண்டின் 6மாதங்களோடு ஒப்பிடும்போது மதக் கலவரங்கள் அதிகரித்திருக்கின்றன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.”

2015-அக்டோபர் 29 அன்று மதச்சார்பின்மைக்காக வீரமாகப் போராடி வரும் சமஹத் அமைப்பின் பதாகையின் கீழ் திரண்ட 53 வரலாற்றியலாளர்கள் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டனர் இது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராதது. பலர் பல விருதுகளைத் திரும்ப மத்திய அரசிடமே கொடுத்ததும் நிகழ்ந்தது.

இந்திரா காந்தி தேசியக் கலைகளின் மையத்தின் அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்பட்ட போது அதன் தலைவரான இந்தியாவின் வெளியுறவுத் துறையின் மதிப்புமிக்க தூதுவராக இருந்த சின்மயா காரேகான் நீக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ்‌ ஆதரவாளர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமுலாகும் திட்டங்களைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய ஒரு சர்வேயில் கிடைத்த தகவலாக இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டவை அதிர்ச்சி தருகின்றன. அவை: “பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்வது; சூரிய நமஸ்காரம்; பசுவதை கண்காணிப்பு; ஆர்.எஸ்.எஸ்‌ ஷாகாக்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதன் மீதிருந்த தடையை நீக்குவது; நகரங்களின் பெயர்களை மாற்றுவது; நிறுவனங்களின் பெயர்களை மாற்றுவது”

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலைக்கு நியூயார்க் டைம்ஸ் நேரடியாக குற்றம் சாட்டியது இந்தியப் பிரதமர் பதவிக்கு வெட்கக்கேடானது. ஆனால் அவருக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. மருத்துவர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோரைக் கொன்ற ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பே கௌரி லங்கேஷையும் சுட்டுக் கொன்றது. சனாதன் சன்ஸ்தா என்பதும் சங் பரிவாரம் என்னும் நிலையில் பிரதமரிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். வழக்கமான கள்ள மௌனம்தான்.

2018ல் இறுதி ஆட்டம் எனும் அத்தியாயத்தில் 2014ல் அடைந்த தேர்தலில் அடைந்த பலன்களை 2019ல் அடைவதிலும், ஒரு கட்சி ஆட்சி முறையை அமைப்பதிலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார் மோடி. சுருக்கமாகச் சொன்னால் 2025ல் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டுக்கு இந்தியாவைத் தயார் செய்கிறார் என்னும் நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனின் மிகையன்று.

குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குஜராத் அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியச் சுதந்திரதினப் பவளவிழாவை முன்னிட்டு விடுவிக்கப் பட்டிருப்பதும் அவர்களுக்கு மலர்மாலையும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியிருப்பதும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. இது சட்டப் போராட்டம் நடத்திய பில்கிஸ் பானுவிற்கு மட்டுமல்லாமல் சட்டத்தை நம்பும் அனைவருக்குமே மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிட கூடுதலான அதிர்ச்சி சட்டப் போராட்டம் நட்த்திய சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், மற்றும் காவல் துறை உயர் அலுவலர் சிரீ குமார் ஆகியோர் சர்வாதிகாரமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகத் தூண் இடிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் “ஆர்.எஸ்.எஸ். சார்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனம் கல்கத்தாவில் நடத்திய நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் கே.கே. ஷர்மா தன் சீருடையிலேயே கலந்து கொண்டது எப்படி? என் எழுப்பியிருக்கும் கேள்வி ஒவ்வொரு இந்தியரும் எழுப்ப
வேண்டிய கேள்வி தானே!

தி டெலிகிராப் பத்திரிகையில் 2018-மார்ச் 11ல் “இந்தியாவின் புவியியல் பரப்பில் 96 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாக அதன் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது‌ம் எச்சரிக்கை கொள்ள வேண்டியதும் ஆகும். மேலும் நாட்டிலிருக்கும் 37190 இடங்களிலுள்ள பூங்காக்களில் 58976 ஷாகாக்களை தினசரி நடத்துவதாகக் கூறும் அதன் ஆண்டறிக்கை புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் வன்முறையும் எனும் அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதவெறி வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை அதன் ஆக்டோபஸ் கரங்கள் நச்சு விதைகளைத் தூவியபடியே வளர்ந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கே ஆபத்தானது.

கலவரம் குறித்து டொனால்ட் ஈ. ஸ்மித் “உயிர்களையும் உடைமைகளையும் அதிகம் இழப்பவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்தான்‌.” எனக் குறிப்பிடுவது உள்ளங்கை நெல்லிக்கனி. 1961ல் நடைபெற்ற ஜபல்பூர் கலவரமாகட்டும், 1970ல் நடைபெற்ற பிவாண்டி கலவரமாகட்டும் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரமாகட்டும், 1982 மண்டைக்காடு கலவரமாகட்டும், 1992ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு மற்றும் இடிப்பைத்தொடர்ந்த கலவரமாகட்டும், 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்த குஜராத் கலவரமாகட்டும் ஸ்மித்தின் கூற்றே காட்சிகளாயின.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சந்ததிகளாக சங் பரிவார காவிக் கும்பலை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தியாவின் மாநிலங்களின் தன்மைகளுக் கேற்ப பற்பல அவதாரங்களில் வலம் வரும் இந்துத்துவா அமைப்புகளின் பட்டியல் மிக நீண்டது. அவை ஒவ்வொன்றுமே மதவெறி என்னும் நஞ்சு தேங்கிய கொடுக்குகளைக் கொண்டவை. அனைத்துக்கும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதத்தையும் ஆதாரமான நிதியைக் கையாள்வது குறித்தும் விரிவாகக் குறிப்பிடும் நூலாசிரியர் இறுதியில் “ஆர்.எஸ்.எஸ்தான் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அமைப்பு என்கிறார்.

பின்னிணைப்பாக நூலாசிரியர் தரும் 200 பக்கங்கள் முக்கிய ஆவணங்கள். ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்பதற்கான அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள். ஆர்.எஸ்.எஸ். தோன்றியதிலிருந்து அதன் சர்சங்சாலக்குகள் என உயர் பதவியை வகித்தவர்கள் கையாண்ட ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சுதந்திர இந்தியா என அரசுகளுக்கு எழுதிய கடிதங்கள் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. சாவர்க்கரின் சரணாகதியாகும் மன்னிப்புக் கடிதங்கள், மகாத்மா காந்தியின் படுகொலையின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கக் கோரிய கடிதங்கள், இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தையொட்டி கைதான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விடுதலை பெற வேண்டி எழுதிய கடிதங்கள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அக்கடிதங்கள் மூலம் ஆர்.எஸ்‌எஸ். தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கிச் செல்லும் என்பதை உணர முடிகிறது.

நூல் நெடுகிலும் ஆதாரங்களின் அணிவகுப்பும் பின்னிணைப்பான ஆதாரங்களும் ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நூல் உண்மையான தேச பக்தி கொண்டோர் மற்றும் மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் வீடுகளின் நூலக அலமாரியில் இடம் பெற வேண்டிய நூல். வரலாற்று ஆவணமாகப் பாதுகாப்பதன் மூலம் நாமும் நமது தலைமுறையும் மதச்சார்பற்ற இந்தியாவைப் படைக்க துணை நிற்கும் எனின் மிகையன்று.

– பெரணமல்லூர் சேகரன்
(கைபேசி எண்
9442145256)

கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த “ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை – பேரா.சோ.மோகனா

கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த “ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை – பேரா.சோ.மோகனா




1500 ஆண்டுகளுக்கு முன் கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்தவர் 
இன்றைக்கு சுமார் 15௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு துறவி  மற்றும் விஞ்ஞானியைப் பற்றிய பதிவு இது.  அவரது செயல்பாடுகள், அந்தக் காலத்திலேய மிகவும் ஆச்சரியமாக உள்ளன. அவரின் பெயர் வெனரபிள் பேட் (the Venerable Bede).
BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஆனால் பொதுவாக அவரை  பேட் என்றே அழைக்கப்படுகிறார். அவர் ஒரு துறவி. இங்கிலாந்தின் திருச்சபையின் ஆரம்பகால வரலாற்றாசிரியர், மத போதகர், ஆங்கில அறிஞர், பாடகர், கவிஞர், மொழியியலாளர் ,மொழிபெயர்ப்பாளர்  மற்றும் இறையியலாளர். அம்மாடி போதுமா ஒருவரின் திறமையும் செயல்பாடும். பேட் ஒரு பல்துறை வித்தகர். பேட் விஞ்ஞான, வரலாற்று மற்றும் இறையியல் படைப்புகளை எழுதினார். 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல,  இசை மற்றும் அளவீடுகள் முதல் வேதாகம வர்ணனைகள் வரை அவரது எழுத்துக்களின் வரம்பை பிரதிபலிக்கின்றன. அதைவிட இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கி.மு. மற்றும் கி.பி தொடங்கிய தேதிகள், அவற்றின் அவதானிப்பு, அத்துடன் ஈஸ்டர் தினத்துக்கான தேதிகள் உட்பட அவர்தான் நிர்ணயித்தார்.. இதற்காக பேட் வானவியலைப் பயன்படுத்திகொண்டார். பேட்
“ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

  பேட் பற்றிய சிறு குறிப்பு 

பேட்  ஆணாதிக்க இலக்கியங்களையும், பிளினி தி எல்டர், விர்ஜில், லுக்ரெடியஸ், ஓவிட், ஹோரேஸ் மற்றும் பிற கிளாசிக்கல்  எழுத்தாளர்களையும் அறிந்திருந்தார். அவருக்கு கிரேக்க மொழியும் தெரிந்திருந்தது. லத்தீனில்  பேடேயின் வேத பூர்வ வர்ணனைகள் உருவகமான விளக்க முறையைப் பயன்படுத்தின; அவர்  எழுதிய வரலாற்றில், அற்புதங்கள் பற்றிய விவரங்களும் இருந்தன. இது நவீனBC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனா வரலாற்றாசிரியர்களுக்கு அவரது வரலாற்றில் உள்ள பொருட்களைப் பற்றிய விமர்சன அணுகுமுறையுடன் முரண்பட்டதாகத் தெரிகிறது. ஆரம்பகால இடைக்கால அறிஞர்களின் உலகப் பார்வையில் இத்தகைய கருத்துக்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. பேட் இப்போது முக்கியமாக ஒரு வரலாற்றாசிரியராகப் பார்க்கப்பட்டாலும், அவரது கால இலக்கணம், காலவரிசை மற்றும் விவிலிய ஆய்வுகள் குறித்த அவரது படைப்புகள், அவரது வரலாறு மற்றும் வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளைப் போலவே முக்கியமானவை. கரோலிங்கியன் மறுமலர்ச்சிக்கு, வரலாறு சாராத படைப்புகள் பெரிதும் பங்களித்தன. இந்த படைப்பில் அவரது படைப்புரிமை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவர் ஒரு தவத்தை எழுதிய பெருமைக்குரியவர். பேட்  இறக்கும் தருவாயில், இறப்பு படுக்கையில் கூட கவிதை எழுதி சமர்ப்பித்தவர்.

ஈஸ்ட்டர் & நேரம் கணிக்க வானவியலைப் பயன்படுத்தியவர்

நேரத்தை கணக்கிடுவதில் பிரபஞ்சத்தின் பாரம்பரிய, பண்டைய மற்றும் இடைக்கால கருத்தின் படி, பேட் கணித்துள்ளார். கோளவடிவ  பூமி மாறிவரும் பகல் நீளத்தை எவ்வாறு பாதித்தது என்றும், சூரியன் மற்றும் சந்திரனின் பருவகால இயக்கம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கான விளக்கம் உட்பட அவரது எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கான அறிமுகம் அதில்  இருந்தது. மாலை அந்தி நேரத்தில் அமாவாசையின் மாறும் தோற்றம் பற்றியும் பேசுகிறார். பேட் சந்திரனால் அலைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பதிவு செய்கிறார். தினமும் இரண்டு முறை அலைகளின் ஏற்ற இறக்க நேரம் சந்திரனுடன் தொடர்புடையது என்பதையும், வசந்த கால சந்திர மாத சுழற்சியும், மற்றும் நேர்த்தியான அலைகளின் அளவும்  சந்திரனின் நிலையுடன் தொடர்புடையது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். அதே கடற்கரையில் அலைகளின் நேரங்கள் வேறுபடுகின்றன என்பதையும், மற்ற இடங்களில் அதிக அலை இருக்கும்போது நீர் அசைவுகள் ஒரே இடத்தில் குறைந்த அலைகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.  பேட் தனது புத்தகத்தின் கவனம் கணக்கீடாக இருந்ததால், ஈஸ்டர் தேதியைக் கணக்கிடுவதற்கும், பாஸ்கல் – பௌர்ணமி தேதியிலிருந்து ராசி மண்டலத்தின் வழியாக சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தைக் கணக்கிடுவதற்கும், காலெண்டர் தொடர்பான பல கணக்கீடுகளுக்கும் பேட் அறிவுறுத்தல்களை வழங்கினார். . ஆங்கிலோ-சாக்சன் காலண்டரின் மாதங்களைப் பற்றி அவர் சிலஅவசியத்  தகவல்களைத் தருகிறார்.

சமகால நாள் குறிப்பை சரி செய்தல்
பேட் கி.மு மற்றும் கி.பி.யின்  ஈஸ்டருக்கான சரியான தேதியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, அவர் வானியல் பற்றிய அறிவைப் பயன்படுத்தினார்.  சோசிஜெனீஸின் ஜூலியன் காலெண்டரில் ஒரு குறைபாடு காரணமாக, 21 மார்ச் பாரம்பரிய தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வந்ததாக குறிப்பிட்டிருந்து. வசந்த கால உத்தராயணம் (வசந்த கால சமகால நாள்-மார்ச் 21 )ஒரு கட்டத்திற்கு நழுவியிருப்பதை அவர் கண்டறிந்தார். BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஇருப்பினும், ஒரு லீப் ஆண்டுகளின் எண்ணிக்கையில் தேவையான சரிசெய்தல் தொடர்பாக அவர்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்பது நூற்றாண்டுகள் கழித்த்துதான் பேட்டின் இந்த செயல்பாடு சரிசெய்யப்பட்டது.  பூமி ஒரு கோளம் என்று பேட் கருதினார். சந்திரனின் நகர்வை அலைகள் தொடர்பான பைத்தாஸின் ஆலோசனையை அவர் பாதுகாத்தார்.  மேலும் அதிக அலை என்பது ஓர் உள்ளூர் விளைவு மற்றும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் ஏற்படாது என்ற செலூகஸின் கருத்தை பின்பற்றினார்.

பிறப்பு &வளர்ப்பு

பேட்டின் பிறப்பு கி.பி  672/673 ஆக இருக்கலாம் என அவரே பிற்காலத்தில் அவரே தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். 673 ஆம் ஆண்டில் தான் பிறந்ததாகவும், வேர்மவுத் மடத்தின் நிலங்களில் இருப்பதாகவும் பேடே கூறினார். அவரின் ஏழாவது வயதில், அவரது குடும்பத்தினரால் வியர்மவுத்தின் மடாதிபதி பெனடிக்ட்BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனா பிஸ்காப்பிடம்.பேட்   கல்வி கற்பிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டார். பேட், தனது  பத்தொன்பது வயதில் தேவாலயத்தில் ஒரு டீக்கனாகவும், முப்பது வயதில் அவர் ஒரு பாதிரியாராகவும் நியமிக்கப்பட்டார். அவர் தனது

 

 

சமூகத்தில் சுறுசுறுப்பாக இருந்தபோது, ​​பேட் படிப்பு, எழுதுதல் மற்றும் அவருக்கு பிடித்த செயல்பாடுகளை கற்பித்தல் ஆகியவற்றைக் கண்டார். அவர் பைபிள் மற்றும் லத்தீன் மொழியைப் படித்தார். அவர் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டார்,. BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஏனென்றால் அப்போது அதுதான்  மடத்தின் நூலகத்தில் உள்ள பைபிளின் மொழி மற்றும் பிற புத்தகங்களில் உள்ளதும் கூட. .அவரது போதனைகள்  மிகவும் அடிப்படையானது. மேலும்  அவரது கருத்துக்கள் மிகவும் வழக்கமானவை (எந்த வகையிலும் முற்போக்கானவை அல்ல).

  ஸ்காட் டெக்ரிகோரியோ எழுதிய புனித பேடேயின் எழுத்துக்களில் புதுமை மற்றும் பாரம்பரியம் உள்ளது என்றார். எனவே அவரை புத்தக பரிந்துரை யில் “பேட் ஆங்கில வரலாற்றின் தந்தை” என்று கூறி பெருமைப்படுத்தி அழைக்கப்படுகிறார்.

உயிர்ப் போராட்ட வாழ்க்கை 

பேட் தன் சிறுவயதில் ஜாரோவில் மடாலயத்தில்,  அபோட் சியோல்ஃப்ரித் உடன் இருந்தார்.  அங்கே  இருவரும் கி.பி 686ம் ஆண்டில்  தாக்கிய உயிர்க்கொல்லி நோயான  பிளேக் நோயிலிருந்து அதிருஷ்டவசமாகத் தப்பினர், பிளேக் நோய் ஊரெங்கும் வெடித்தது அங்குள்ள பெரும்பான்மையான மக்களை உயிர்ப்பலி வாங்கியது. . ஏறக்குறைய கி.பி 710ம் ஆண்டில் எழுதப்பட்ட தகவல் என்னவென்றால்,: ” சியோல்ஃப்ரித்தின் வாழ்க்கை”என்ற புத்தகத்தில் ” அந்த ஊரில் பிளேக் நோயிலிருந்து தப்பிபிழைத்தது எஞ்சியிருந்தது இரண்டே இரண்டு துறவிகள் மட்டுமே. ஒருவர் சியோல்ஃப்ரித், மற்றவர் ஒரு சிறுவன், அதுதான் பேட் அநாமதேய எழுத்தாளரின் கூற்றுப்படி சியோல்ஃப்ரித் கற்பித்தார். மற்றவர்கள் பயிற்சி பெறும் வரை இருவரும் வழிபாட்டின் முழு சேவையையும் செய்ய முடிந்தது. ” என்று தெரிவிக்கிறது. அந்த சிறுவன் கிட்டத்தட்ட நிச்சயமாக பேடே,தான். பின்னர்  அவன் பயிற்சி எடுக்கும்போது, அவனுக்கு  14 வயதாக  இருந்திருக்கும்

குறைந்த வயதில் பாதிரியாராக  

பேடேவுக்கு சுமார் 17 வயதாக இருந்தபோது, ​​அயோனா அபேயின்  மடாதிபதியான அடோம்னான், மாங்க்வேர்மவுத் மற்றும் ஜாரோவைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது பேட் மடாதிபதியை சந்தித்து, ஈஸ்டர் டேட்டிங் சர்ச்சையில் அடேமோன் பேடேவின் ஆர்வத்தைத் தூண்டினார். இது கி.பி 69ம் ஆண்டு, , பேடேவின்19 வயதில் பேட் பிஷப்பாக இருந்த அவரது மறைமாவட்ட பிஷப் ஜான் ஒரு டீக்கனாக நியமிக்கப்பட்டார். ஹெக்சாம். ஒரு டீக்கனின் நியமனத்திற்கான நியமன வயது 25; பேடேவின் ஆரம்பகால நியமனம் என்பது அவரது திறன்கள் விதிவிலக்கானதாகஇருந்ததால் அவரிறிற்கு முக்கியம் தரப்பட்டது. அதனால் குறைந்தபட்ச வயதுத் தேவை என்பதும் புறக்கணிக்கப்பட்டது. பேட் தனது 3௦ வயதில் (கி.பி 702), அவர் ஒரு பாதிரியார் ஆனார், இதனை பிஷப் ஜான் நிகழ்த்தினார்.

எழுத்தாளர் மற்றும் அறிஞர் 

பேட், மாங்க்வேர்மவுத்-ஜாரோவின் சகோதரி நார்த்ம்ப்ரியன் மடாலயங்களில் உறுப்பினராக இருந்தார். அவர் ஜாரோவில் இருந்த அதன் பெரிய நூலகத்துடன் அதிக நேரம் செலவிட்டார். இருவரும் டர்ஹாம் (இப்போது டைன் மற்றும் வேர்) என்ற ஆங்கில கவுண்டியில் வாழ்ந்தனர்.  அவர் ஓர் அற்புதமான எழுத்தாளர் மற்றும் அறிஞராக பலராலும் நன்கு அறியப்பட்டவர். ” ஆங்கில மக்களின் பிரசங்க வரலாறு” என்ற புத்தகம் அவருக்கு “ஆங்கில வரலாற்றின் தந்தை” என்ற பட்டத்தை தந்தது. .பேட் தனது வாழ்நாளில்,  பல அறிவியல், வரலாறு மற்றும் இறையியல் படைப்புகளை எழுதினார். இவையாவும், பல இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிற மடங்களால் நகலெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

படைப்பு 

பேட்டின்  குறிப்பாக மிகவும் பிரபலமான ஒரு படைப்பு இருந்தது. ஆங்கிலோ-சாக்சன் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று பேடேவின் ஆங்கில தேசத்தின் பிரசங்க வரலாறு. பேட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜாரோவில் கழித்தார், இங்குதான் அவர் தனது தன் வரலாற்றை எழுதினார். பிரசங்க வரலாறு ஐந்து புத்தகங்கள் மற்றும் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட சுமார் 400 பக்கங்களால் ஆனது. இது சீசரின் காலம் முதல் அது நிறைவடைந்த தேதி வரை (731) இங்கிலாந்து வரலாற்றின் 800 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாற்றைக் விரிவாகக் கொண்டுள்ளது. அதன் கடைசி அத்தியாயம் பேடே பற்றியது.

பெனடிக்ட் பிஸ்காப் உதவியால் உயர்வு 

பேடேவின் வேலையை சாத்தியமாக்கிய ஒருவர் பெனடிக்ட் பிஸ்காப் என்ற அறிவியலாளர் ஆவார். அவர் வேர்மவுத் மற்றும் ஜாரோ மடங்களை நிறுவினார். மிக முக்கியமாக அவர் பேடேவின் பெரும்பாலான தகவல்களைப் பெற்ற நூலகத்தை உருவாக்கினார். கி.பி 689ம் ஆண்டில்  பெனடிக்ட் பிஸ்காப்  இறக்கும் போது, ​​பேட்  ரோம் மற்றும் தெற்கு பகுதிக்கு நான்கு பயணங்களை முடித்து, ஒவ்வொரு முறையும் பெரிய புத்தகங்களை திரும்பவும்  கொண்டுவந்தார். அந்த மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான சியோல்ஃப்ரிட் இல்லையென்றால் பேடேவின் பணி இன்னும் சாத்தியாமாகி இருக்காது. பெனடிக்ட் பிஸ்காப் விட்டுச் சென்ற நூலகத்தின் அளவை, பேட் இரட்டிப்பாக்கினார். பேட், யார்க்(York) மற்றும் லிண்டிஸ்பார்னை  தாண்டி வேறு எங்கும் அதிக தூரம் பயணம் செய்யவில்லை. தொலைதூர இடங்களில் அவர் எப்போதும் நூலகங்களைப் பார்வையிட்டதாக எந்த பதிவும் இல்லை. பேட் தனது ஆதாரங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

“கடவுளின் உதவியுடன், கிறிஸ்துவின் ஊழியரும், ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் பவுலின் வேர்மவுத் மற்றும் ஜாரோவின் மடத்தின் பாதிரியாருமான நான், பிரிட்டனில் உள்ள திருச்சபையின் வரலாறு மற்றும் ஆங்கில சர்ச்சின் வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்தேன். குறிப்பாக, பண்டைய எழுத்துக்களிலிருந்தும், நம் முன்னோர்களின் மரபுகளிலிருந்தும், எனது சொந்த அறிவுகளிலிருந்தும் அவற்றைக் கண்டறிய முடிந்தது. அவற்றையே நான் பதிவு செய்தேன்” என்று தெரிவிக்கிறார்.

காலண்டர் தேதிகளை கணக்கிடும் அறிவியல் தந்தவர் பேட் 

பேட் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மடத்தில் கழித்தபோது, ​​பேட் பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள பல தங்குமிடங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மடங்களுக்குச் சென்றார்.  யார்க்கின் பேராயர் மற்றும் நார்த்ம்ப்ரியாவின் மன்னர் சியோல்வல்ப் ஆகியோரையும் பார்வையிட்டார். பேட் எழுத்தாளர், ஆசிரியர் , மற்றும் அறிஞர் என நன்கு அறியப்பட்டவர், மற்றும் அவரது மிகப் பிரபலமான படைப்பான ஆங்கில மக்களின் பிரசங்க வரலாறு, அவருக்கு “ஆங்கில வரலாற்றின் தந்தை” என்ற பட்டத்தைப் பெற்றது. அவரது “எக்குமெனிகல்” எழுத்துக்கள் விரிவானவை மற்றும் பல விவிலிய வர்ணனைகள் மற்றும் பிற இறையியல் படைப்புகள் ஆகியவை . பேடேவின் மற்றொரு முக்கியமான ஆய்வு பகுதி, கம்ப்யூட்டஸின் கல்வி ஒழுக்கம். அதுவே அவரது சமகாலத்தவர்களுக்கு காலண்டர் தேதிகளை கணக்கிடும் அறிவியல் வரலாறு என்று பலராலும் அறியப்படுகிறது.

ஈஸ்டர் தேதி நிர்ணயிப்பு 

பேட் கணக்கிட முயற்சித்த மிக முக்கியமான தேதிகளில் ஒன்று ஈஸ்டர் தேதி.  இது அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது. கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து முன்னோக்கி தேதிகள் குறிப்பிடுவதை  பிரபலப்படுத்த அவர் உதவினார், இது ஒரு அப்போதைய நடைமுறை ஆகும். பின்னர் அது இடைக்கால ஐரோப்பாவில் பொதுவானதாக மாறியது. ஆரம்பகால இடைக்காலத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான பேட், கி.பின் 604 ம் ஆண்டில் முதலாம் கிரிகோரி மரணம் மற்றும் கி.பி 800ம் ஆண்டு ல் சார்லமேனின் முடிசூட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான காலத்திற்கு பழங்காலத்தின் மிக முக்கியமான அறிஞராக பல வரலாற்றாசிரியர்களால் “பேட்” கருதப்படுகிறார். பேட்டின் சிறப்பு பல காலங்களில் கொண்டாட்டப்பட்டது. அவரின் பெருமை உலகம் உள்ள அளவும் நீடிக்கிறது.

மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

பன்னிரெண்டாம்  போப் லியோ, பேட்டை திருச்சபையின் மருத்துவராக அறிவித்தார். இந்த பெயரை அடைய கிரேட் பிரிட்டனின் ஒரே பூர்வீகம் அவர்; திருச்சபையின் டாக்டரான கேன்டர்பரியின் ஆன்செல்ம் முதலில் இத்தாலியைச் சேர்ந்தவர். பேட் ஒரு திறமையான மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக இருந்தார், மேலும் அவரது பணி ஆரம்பகால சர்ச் பிதாக்களின் லத்தீன் மற்றும் கிரேக்க எழுத்துக்களை அவரது சக ஆங்கிலோ-சாக்சன்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாக மாற்றியது, இது ஆங்கில கிறிஸ்தவத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. பேடேவின் மடத்திற்கு யூசிபியஸ், ஓரோசியஸ் மற்றும் பலரின் படைப்புகள் அடங்கிய ஒரு சுவையான நூலகத்தை அணுக முடிந்தது.

பேடேயின் வாழ்க்கை பிரசங்க வரலாற்றின் கடைசி அத்தியாயம் 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேடேயின் வாழ்க்கையைப் பற்றி ஏறக்குறைய அறியப்பட்ட அனைத்தும் இங்கிலாந்தில் உள்ள தேவாலயத்தின் வரலாறான அவரது ஆங்கில மக்களின் பிரசங்க வரலாற்றின் கடைசி அத்தியாயத்தில் உள்ளன. இது சுமார் கி.பி 731ம் ஆண்டில் நிறைவடைந்தது, மேலும் பேட் அப்போது தனது 59ம் வயதில் இருந்தார், இது அவரது கி.பி 672 அல்லது 673 இல் பிறந்த தேதியிலிருந்து கணக்கிடப்பட்டது

 ஒரு சிறிய தகவல் ஆதாரம் 

 ஜாரோவில் உள்ள மடாலயம் பின்னர் கட்டப்பட்ட இடத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள மோன்க்டனில் அவர் பிறந்தார் என்ற பாரம்பரியமும் உள்ளது. பேட் தனது தோற்றம் பற்றி எவ்விடத்திலும் எதுவும் கூறவில்லை, ஆனால் உன்னத வம்சாவளியைச் சேர்ந்த மனிதர்களுடனான அவரது தொடர்புகள் அவரது சொந்த குடும்பம் நல்வாழ்வைக் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன.  அவர்களில் ஒருவர் பேடே. பேடேவின் படைப்புகளில் ஒன்றான குத்பெர்ட்டின் வாழ்க்கையின் சில கையெழுத்துப் பிரதிகளில், குத்பெர்ட்டின் சொந்த பாதிரியார் பேட் என்று பெயரிடப்பட்டார்; இந்த பூசாரி லிபர் விட்டேயில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற பெயர்.

ஏழு வயதில், பேடே தனது குடும்பத்தினரால் பெனடிக்ட் பிஸ்காப் மற்றும் பின்னர் சியோல்ப்ரித் ஆகியோரால் கல்வி கற்க மாங்க்வேர்மவுத்தின் மடத்திற்கு அனுப்பப்பட்டார்.இங்கிலாந்தில் உள்ள ஜெர்மானிய மக்களிடையே இந்த நடைமுறை பொதுவானதாக குழந்தைப் பருவத்தில் மடாலயத்துக்கு அனுப்புவது என்பதும்  வழக்கத்தில்  இருந்தது. ஜாரோவில் உள்ள மாங்க்வேர்மவுத்தின் சகோதரி மடாலயம் கி.பி 682 ஆம் ஆண்டில் சியோல்ப்ரித் என்பவரால் நிறுவப்பட்டது, மேலும் பேட் அந்த ஆண்டு சியோல்ஃப்ரித்துடன் ஜாரோவுக்கு சென்றார்.  தேவாலயத்திற்கான அர்ப்பணிப்புகள் இன்றுவரை பிழைத்து வருகிறது; இது ஏப்ரல் 23, 685ம் ஆண்டு  தேதியிட்டதும் கூட.  பேட் தனது அன்றாட வாழ்க்கையில் மோசமான பணிகளுக்கு உதவ வேண்டியிருக்கும்  என்பதால், அசல் தேவாலயத்தை கட்டியெழுப்ப அவர் உதவியது சாத்தியமாகும்.

படைப்புகள்

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேட் கி.பி 701ம் ஆண்டில்  தனது முதல் படைப்புகளான டி ஆர்டே மெட்ரிகா மற்றும் டி ஸ்கேமடிபஸ் எட் டிராபிஸ் ஆகியவற்றை எழுதினார்; இரண்டும் வகுப்பறையில் பயன்படுத்தும்  நோக்கத்தைக் கொண்டவை. அவர் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எழுதினார் ,எழுதினார், எழுதிக்கொண்டே இருந்தார். சாகும் தருவாயிலும் கூட எழுதிக்கொண்டே உயிர் துறந்தார்.  இறுதியில் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி முடித்தார், அவற்றில் பெரும்பாலானவை தப்பிப் பிழைத்தன. அவரது வெளியீடு அனைத்தையும் எளிதில் தேதியிட முடியாது; மேலும் பேட் சில ஆண்டுகளில் சில நூல்களில் பணியாற்றியிருக்கலாம். அவரது கடைசி எஞ்சிய படைப்பு கி.பி  734ம் ஆண்டு  எழுதப்பட்ட முன்னாள் மாணவரான யார்க்கின் எக்பெர்ட்டுக்கு எழுதிய கடிதம்தான் எஞ்சியது . 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனா கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் கிரேக்க மற்றும் லத்தீன் கையெழுத்துப் பிரதியான  அப்போஸ்தலர்களின் செயல்களை  பேட் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது, இப்போது அது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது; இது கோடெக்ஸ் லாடியனஸ் என்று அழைக்கப்படுகிறது. ஜாரோவில் நகலெடுக்கப்பட்ட சில லத்தீன் பைபிள்களிலும் பேட் எழுதினர். அவற்றில் ஒன்று, கோடெக்ஸ் அமியாட்டினஸ், இப்போது புளோரன்ஸ் நகரில் உள்ள லாரன்டியன் நூலகத்தால் அது  நடத்தப்படுகிறது. பேட் பலே கில்லாடி. அவரே  ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்தார்; அவர் இசையையும் ரசித்தார்; ஒரு பாடகராகவும்இருந்தார்.  தனது சொந்த மொழியில் கவிதை வாசிப்பவராகவும் சாதனை செய்தார்.

பேச்சில் சிக்கல்/ திக்குவாய் பேட்  

அவருக்கு பேசும்போது பேச்சில் சிக்கல் மற்றும் பிரச்சினை இருந்தது. பேட்டுக்கு சரளமாக பேச வராது. , ஆனால் இது செயிண்ட் குத்பெர்ட்டின் அவரது வசன வாழ்க்கையின் அறிமுகத்தில் ஒரு சொற்றொடரைப் பொறுத்தது. இந்த சொற்றொடரின் மொழிபெயர்ப்புகள் வேறுபடுகின்றன, மேலும் பேட் பேச்சு சிக்கலில் இருந்து குணமடைந்துவிட்டார்; துறவியின் படைப்புகளால் அவர் ஈர்க்கப்பட்டார்.க்ளூசெஸ்டர் கதீட்ரலில் உள்ள ஒரு கண்ணாடி டம்ளரில் , பேட் ஒரு எழுத்தாளருக்கு ஆணையிடுவதை போல சித்தரிப்பு உள்ளது.

உலக வயதை கணக்கிட; 

கி.பி 708 ஆம் ஆண்டில், ஹெக்ஸாமில் உள்ள சில துறவிகள், பேட் தனது டி டெம்போரிபஸ் என்ற படைப்பில் மதங்களுக்கு எதிரான கொள்கையைச் செய்ததாக குற்றம் சாட்டினர். அந்த நேரத்தில் உலக வரலாற்றின் நிலையான  இறையியல் பார்வை உலகின் ஆறு யுகங்கள் என்று அழைக்கப்பட்டது; பேட் தனது புத்தகத்தில், செவில்லேவின் ஐசிடோரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை விட, உலகின் வயதை கணக்கிட்டார். பின்னர் , உலகத்தை உருவாகிய பின் 3,952 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்து பிறந்தார் என்ற முடிவுக்கு வந்தார்;  ஆனால் அது இறையியலாளர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 5,000 க்கும் மேற்பட்டஆண்டுகள் அல்ல என்றார் .

விவிலிய நூல் உருவாக்கம் 

கி.பி 733 ஆம் ஆண்டில், பேட் அப்போது யார்க்கின் பிஷப்பாக இருந்த எக்பெர்ட்டைப் பார்க்க அங்கு சென்றார். 735 ஆம் ஆண்டில் சீக் ஆஃப் யார்க் ஒரு பேராயராக உயர்த்தப்பட்டார், மேலும் பேட் மற்றும் எக்பெர்ட், தனது வருகையின் போது பேட் உயர்வதற்கான முன்மொழிவைப் பற்றி விவாதித்திருக்கலாம். கி.பி 734 இல் மீண்டும் எக்பெர்ட்டைப் பார்வையிட போனார். ஆனால் அப்போது அவரால்   பயணத்தை மேற்கொள்ள முடியாவில்லை.  உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்  இருந்தது.. அவர் அப்போதும் கூட லிண்டிஸ்பார்னின் மடத்திற்குச் சென்று, சில சமயங்களில் விக்டெட் என்ற துறவியின் அறியப்படாத மடத்தை பார்வையிட்டார்.அந்த விஜயம் அந்த துறவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் தீவுகள் முழுவதும் மற்றவர்களுடன் அவர் பரவலாக தொடர்பு கொண்டதன் காரணமாகவும், பல கடிதங்களில்  பேட் தனது நிருபர்களைச் சந்தித்ததாகக் குறிப்பதால், பேட் வேறு சில இடங்களுக்கும்  சென்றார். நேரம் அல்லது இருப்பிடங்களைப் பற்றி மேலும் எதுவும் யூகிக்க முடியாது. எவ்வாறாயினும், அவர் ரோமிற்கு விஜயம் செய்யவில்லை என்பது அப்போது உறுதியானது. ஏனெனில் அவர் தனது ஹிஸ்டோரியா எக்லெசியாஸ்டிகாவின் சுயசரிதை அத்தியாயத்தில் அது பற்றி ஏதும்  குறிப்பிடவில்லை. ரோமில் அவருக்கான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவருக்கு உதவிய பேடேயின் நிருபர் நோத்ஹெல்ம்,  பேடேவுக்கு விஜயம் செய்ததாக அறியப்படுகிறது. நோத்ஹெல்மின் ரோம் வருகைக்குப் பிறகும் கூட அவர்களால் தேதியைத் தீர்மானிக்க முடியாது. மற்ற மடங்களுக்கு ஒரு சில வருகைகளைத் தவிர, அவரது வாழ்க்கை ஒரு சுற்று பிரார்த்தனையிலும், துறவற ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலும், புனித நூல்களைப் படிப்பதிலும் கழிந்தது. அவர் தனது காலத்திலேயே மிகவும் கற்றறிந்த மனிதராகக் கருதப்பட்டு சிறந்த விவிலிய மற்றும் வரலாற்று புத்தகங்களை எழுதினார்.

இறப்பு 

பேட் கி.பி 735ம்  ஆண்டு  மே மாதம் 26,ம் நாள் , ஒரு  வியாழக்கிழமை, ஒரு விருந்தின்போது தனது  உயிரை இயற்கையுடன் கலந்தார்.  “பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாகட்டும்” என்று பாடி, பேடேயின் சீடரான ஜாரோ குத்பெர்ட்டில் அடக்கம் செய்யப்பட்டார். குட்வினுக்கு ஒரு கடிதம் எழுதினார், பேடேவின் கடைசி நாட்கள் மற்றும் அவரது மரணம் ஆகியவற்றை விவரித்தார். குத்பெர்ட்டின் கூற்றுப்படி, ஒரு ஈஸ்டர் திருநாள் முன்பு, “மூச்சுத் திணறல் தாக்குதல்களால் ஆனால் கிட்டத்தட்ட வலி இல்லாமல்” பேட் நோய்வாய்ப்பட்டார். செவ்வாயன்று, பேட் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது சுவாசம் மோசமாகி, அவரது கால்கள் வீங்கியிருந்தன.

இறக்கும்போதும் கவிதை எழுதிய பேட் . 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேட்  ஒரு எழுத்தாளரிடம் தொடர்ந்து ஆணையிட்டார்.  இருப்பினும்,கூட அவர்  இரவில் விழித்திருந்து ஜெபத்தில் கழித்த போதிலும், மறுநாள் அவர் மீண்டும் ஆணையிட்டார். மூன்று மணிக்கு, குத்பெர்ட்டின் கூற்றுப்படி, அவர் தன்னுடைய ஒரு பெட்டியை மடத்தின் பூசாரிகளிடையே கொண்டு வந்து விநியோகிக்கும்படி கேட்டார், அவரின் “சில பொக்கிஷங்கள்”: “சில மிளகு, நாப்கின்கள், மற்றும் சில தூபங்கள் அங்கு  வந்தன. “. அன்று இரவு அவர்  வில்பெர்ட் என்ற சிறுவனுக்கு எழுத்தாளருக்கு இறுதி தண்டனையும்  விதித்தார்.. குத்பெர்ட்டின் கணக்குப்படி  நள்ளிரவுக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ பேட் இறந்தாரா என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பேடேயின் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம், பழைய நாளிலிருந்து புதிய இடத்திற்குச் செல்வது நள்ளிரவில் அல்ல, சூரிய அஸ்தமனத்தில் நிகழ்ந்தது,.  ஆகவே, மே மாதம்  25ம் நாள்  புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் அவரது பெட்டி கொண்டு வரப்பட்டபோது, ​​இறுதி ஆணையின் நேரத்தில், மே 26 அன்று அந்த மதச்சார்பற்ற அர்த்தத்தில் ஏற்கனவே  என கருதப்படலாம், இருப்பினும் 25 மே சாதாரண அர்த்தத்தில். குத்பெர்ட்டின் கடிதம் மூல , பேட் தனது மரணக் கட்டிலில் “பேடேயின் மரண பாடல்” என்று அழைக்கப்படும் ஐந்து வரிக் கவிதைகளையும் தொடர்பு படுத்துகிறது. இது மிகவும் பரவலாக நகலெடுக்கப்பட்ட பழைய ஆங்கிலக் கவிதை மற்றும் 45 கையெழுத்துப் பிரதிகளில்உருவாகிறது. , ஆனால் பேடேவுக்கான அதன் பண்பு உறுதியாகத் தெரியவில்லை-எல்லா கையெழுத்துப் பிரதிகளும் பேடேவை ஆசிரியராகப் பெயரிடுவதில்லை, மேலும் அவை பிற்காலத்தில் இல்லாதவை அல்ல.

கல்லறைக் கொள்ளை 

 பேடேவின் எச்சங்கள்/பொருட்கள்  11 ஆம் நூற்றாண்டில் டர்ஹாம் கதீட்ரலுக்கு மாற்றப்பட்டன. அவரது கல்லறை கி.பி 1541ம் ஆண்டில் கொள்ளையடிக்கப்பட்டது, ஆனால் அதன்  உள்ளடக்கங்கள் கதீட்ரலில் உள்ள கலிலீ தேவாலயத்தில் மீண்டும் இணைக்கப்பட்டன.

விந்தை மனிதர் 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேட் எழுத்துக்களில் இன்னொரு விந்தை என்னவென்றால், ஏழு கத்தோலிக்க நிருபங்களின் வர்ணனை என்ற அவரது படைப்புகளில், அவர் திருமணமானவர் என்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதுகிறார். பொதுப் பார்வையில் எழுதப்பட்ட அதில் கேள்விக்குரிய பகுதி மட்டுமே உள்ளது. பேட் கூறுகிறார்: “என் மனைவியின் காரணமாக நான் அடிக்கடி ஜெபம் செய்ய இயலாது என்பதால், பிரார்த்தனைகள் ஒருங்கிணைந்த கடமையால் தடைபடுகின்றன.” மற்றொரு பத்தியில், லூக்கா பற்றிய  வர்ணனையில், மனைவியையும் குறிப்பிடுகிறார்: “முன்பு நான் ஆசை உணர்ச்சியில் மனைவியைக் கொண்டிருந்தேன், இப்போது நான் அவளை கெளரவமான பரிசுத்தமாக்கலிலும் கிறிஸ்துவின்  உண்மையான அன்பிலும் வைத்திருக்கிறேன்.” வரலாற்றாசிரியர் பெனடிக்டா வார்ட் இந்த பத்திகளை பேட் ஒரு சொல்லாட்சிக் கருவியைப் பயன்படுத்துகிறார் என்று வாதிடுகிறார்


வேறு வரலாற்று படைப்புகள் .   பேட்  மரணிப்பு

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஈ டெம்போரிபஸ், அல்லது ஆன் டைம், கி.பி 703 இல் எழுதப்பட்டது, ஈஸ்டர் கம்ப்யூட்டஸின் கொள்கைகளுக்கு ஒரு அறிமுகத்தை வழங்குகிறது.இது செவில்லின் சொற்பிறப்பியல் ஐசிடோரின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் யூரோபியஸிடமிருந்து பெறப்பட்ட உலகின் காலவரிசைகளையும் உள்ளடக்கியது, ஜெரோம் பைபிளின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகயும்  கொண்டது.

கி.பி 723 ம் ஆண்டில் இடைக்காலம் முழுவதும் செல்வாக்கு செலுத்திய ஆன் தி ரெக்கனிங் ஆஃப் டைம் என்பதில் பேட் ஒரு நீண்ட படைப்பை எழுதினார். கம்ப்யூட்டஸின் குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் பல மரணிப்பு குறுகிய கடிதங்களையும் இறையியல்,  கட்டுரைகளையும் எழுதினார்.

பேட் 735 இல் இறந்தார். அவர் ஜாரோவில் அடக்கம் செய்யப்பட்டார்,.கி.பி 836 ஆம் ஆண்டில் பேட் ‘வணக்கத்திற்குரியவர்’ என்று சர்ச் அறிவித்தது. அவர் 899 இல் ஒரு புனிதராகவும், சர்ச்சின் டாக்டராகவும் அறிவிக்க்ப்படுகிறார். அந்தப் பட்டத்தை வகித்த ஒரே ஆங்கிலேயர் பேட் மட்டுமே,

பெடேஸ் வேர்ல்ட் என்பது வடக்கு இங்கிலாந்தின் ஜாரோவில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும், இது அவரது வாழ்க்கை மற்றும் பணியை விவரிக்கிறது. இது ஒரு புனரமைக்கப்பட்ட ஆங்கிலோ-சாக்சன் பண்ணை மற்றும் நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் அந்தக் காலத்திலிருந்த படிந்த கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

– பேரா.சோ.மோகனா