நமது புக் டே இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது…
அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்…
இப்படத்திற்கான கவிதை
ஆதித் தாத்தன்களின் எலும்பு மரம்
மண்ணைக் கீறிய முதல் கலப்பை
விதையின் சுதந்திரம்
விருட்சம்
விருட்சமோ
விவசாயிகளின் உள்ளங்கையில் வேர்விட்டு
உலகமெலாம் சிளை பரப்பும்
எந்த விலங்கின் விலங்கும்
முறுக்கேறும் முஷ்டியின்
திமிறலில் தெறிக்கும்!
–நா.வே.அருள்
ஓவியர் விவரம்:
இரா.அஜய் கண்ணன்
தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி
தேவகோட்டை

