பல்லவி
ஊருக்குள்ள எளவட்டம் நூருபேரு இருந்தாலும் _ என்
உசுருக்கு புடிச்சவன் நீதானே !
மன்மதனா நீயுமில்ல மமதையும் உனக்குயில்ல _ இவ
மனசுக்குப் புடிச்சவன் நீதானே !
முறுக்காக மீசை வச்சு
கிறுக்காக லுங்கி கட்டி _ நீ
காத்திருப்ப பொட்டிக்கடையில…
அருகாமை வந்து நின்னா _ என்ன
அறுப்பாயே முட்டக் கண்ணால
உன்னைப் பூபோல சூடிக்குவேன் ரெட்டை சடையில..
சரணம் 1
தரிசு போல மனம் கிடக்கையிலே_ நீ
தண்ணியத்தான் இரைக்கிற
பொறண்டு பொறண்டுங்கூட உரக்கம்வல்ல_
நெஞ்சுல புளியத்தான் கரைக்கிற…
நடுச்சாமம் எந்திருச்சு சருவத்த தூக்கிக்கிட்டு
தனியாத்தான் நடக்குறேன்_
ஒரு விதமாத்தான் இருக்குறேன் !
கத்தாழப்பழமா செவக்குறேன் _ அவன்
கண்ணப் பாக்கத்தான் மருகுறேன் .
சரணம் 2
மத்தியான வெயில் நேரத்திலும்
என் மண்டைக்குள்ள முறைக்குற !
கண்ணாலம் கட்டி வாழ்ந்துக்கிற _
என்ன கைய நீட்டி அழைக்கிற..!
சிறுகாத்து வீசுனாலும் ஒருதூசு விழுமென
புருவத்துப் பக்கத்துல _
காவலுக்கு நிக்குறியே !
சாதி தடுத்தாலும் சேரணும் _
நாம கோடி வருசங்கள் வாழணும் !

க. பாண்டிச்செல்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

