பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி

பறக்கும் மனது கவிதை – ராஜு ஆரோக்கியசாமி




உன் நினைவுகளுடனும்
அவற்றின் கனவுகளுடனும்
பேசிக் கொண்டிருக்கிறேன்
தூக்கமில்லா இரவில்

“நம்மை அழ வைத்தவளை
அலற வைப்போனே ஆம்பளையாம் ”
எனக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா
உன்னை வாழ வைப்பதே…

உன் தீண்டல்களால்
எந்தத் துலங்கல்களுமில்லை
உன் மௌனம்தான்
ஓங்கி அரைகிறதெனை

ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் அப்படியே
என்னிடமோ ஒன்றேயொன்றுதான்
காதல், கடைசி வரை

எந்நேரமும் காதல்
தூக்கி அலைகிறேன்
பாரம் ஏதுமின்றி
பறக்கும் மனது

எனக்கு நீ ஆச்சர்யம்
உனக்கு நான் சௌகர்யம்
காதலே அனைத்தின் அஸ்திவாரம்
ஆகவே வாழ்க்கை அபூர்வம்

உன் பரவச பாவனைகள்
என்னுள் ஏதேதோ செய்ய
இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னொரு ரோமியோ- ஜுலியட்

– ராஜா ஆரோக்கியசாமி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Raju Arockiasamy

    எனது தன்முனைக்கவிதைகள்…
    சிறப்பாக வெளியிட்டு பெருமை படுத்திய ஆசிரியர் அருள் மற்றும் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் , வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    # Raju Arockiasamy, Trichy, Tamilnadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *