கத்தியோடு ரத்தமின்றி
யுத்தமொன்று நடக்குது
காட்டில் மரங்கள்
உன்னை விட உயர்ந்தவன் என்பதால்
என் மீதும் வன்முறையா?
வெட்டப்பட்ட மரங்கள்.
நிராயுதபாணியாய் நிற்கின்றோம்
இருந்தும் எங்கள் மீதும் போரா?
நீங்கள் அறுப்பது
என் அடியல்ல
உன் தலைமுறை
என் நிழலில் அமர்ந்து கொண்டே
என்னை வெட்டத் திட்டம் தீட்டுகிறாய்.
நீயும் புத்தனாகு
போதி மரமென்று தப்பித்து கொள்வேன்.
என் சந்ததியின் அழிவில்
மீண்டும் வனமாவோம்.
பாவ வனமாவோம்.
எங்களுக்கும் குருதி இருந்திருந்தால்
சமுத்திரமும் சிவப்பாகிப்
போயிருக்கும்.
என் காட்டில் உன் காலடி தடம்
என் மரணத்தின் நாள் குறிக்கும்
காலனின் தடம்.
இதுவும் கடந்து போகும்
உங்களுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் தான்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

