Subscribe

Thamizhbooks ad

பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்ல சிறுகதை – சாந்தி சரவணன்

அசைவற்று மேரி அருகே அமர்ந்து இருந்தாள் தெரேசா. மேரி எந்த ஒரு சலணமும் இல்லாமல் கோமா நிலையில் படுத்து இருந்தார். முகத்தில் ஒரு மாஸ்க், வெண்டிலேட்டர் ஒரு புறம். சுயம் இழந்த நிலை, விட்டிலேயே மருத்துவமனை சடங்குகள், அரங்கேறிக் கொண்டு இருந்தது.

தெரேசாவின் நினைவுகள் சற்றே பின்நோக்கி சென்றது. அந்த மருத்துவமனையில் மேரி ஸிஸ்டர் என்றால் அனைவருக்கும் அவ்வளவு பிரியம்.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கூட அவரின் மேல் ஒரு நல்ல மதிப்பு. அது சென்னையில் ஒரு பிரபலமான மருத்துவமனை. முக்கியமாக ஒவ்வொரு வருடமும் “இலவச செக்கப்” செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு அந்த மருத்துவமணையை பிரபலமாக்கியது. இலவசம் தானே என பெரும்பால மக்கள் போய் செக்கப் செய்துவிட்டு வந்து விடலாம் என கூட்டம் கூட்டமாக வருவது இயல்பு தானே..

தெரேசா அந்த மருத்துவமணையில்தான் மேரியை முதன் முதலில் சந்தித்தாள். அந்த மருத்துவமனையின் யார் முதலில் வேலைக்கு சேர்ந்தாலும் மேரி சிஸ்டர்தான் அவர்களை நேர்காணல் செய்து பணியில் அமர்த்த உத்தரவு பிறப்பிப்பார்

தெரேசாவின் சொந்த ஊர் குடியாத்தம் செவிலியர் பணியை மிகவும் விருப்பத்தோடு படித்து சென்னையில் பணிபுரிய ஆவலோடு இருந்தாள். இந்த பிரபலமான மருத்துவமனையில் சேர்ந்தால் பலருக்கு சேவை செய்ய முடியும் என்ற காரணத்தினால் கண்டிப்பாக இந்த நேர்காணலில் வெற்றிபெற வேண்டும் என்ற முடிவோடு அமர்ந்திருந்தாள்.

முக்கியமாக அவளின் அம்மா லக்ஷ்மி ஒரு மரபு வழி மருத்துவர். நாடி பார்த்து மூலிகை மருந்துகள் தருவார். வருகின்ற பெரும்பாலும் வரும் நோயாளிகள் குணம் அடைந்து ஆரோக்கியமாக செல்வார்கள். அதனால்தான் தெராவிற்கு மருத்துவத்தின்மேல் நாட்டம் வந்ததது. அதனின் தொடர்ச்சிதான் இன்று அவளை இங்கு அமர்த்தி உள்ளது.

20 ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியின் உச்சம். மருத்துவமணைகள் இல்லாத தெருவுகளே இல்லை என சொல்லாம். ஆரோக்கியத்தைதான் தேடலில் விட்டது.

நேர்காணலில் எப்போது அழைப்பார்கள் என காத்திருந்த தெரேசாவிற்கு, வாட் பை வந்து , “அடுத்தது தெரேசா என்ற குரல் அவளின் நினைவுகளை திருப்பியது”.

“நான் தான் அண்ணா என ஒருவித பரபரப்புடன் எழுந்தாள்,” தெரேசா.

“நீங்களா மா”

“ஆமாம்”, அண்ணா

“சர்டிபிக்கேட் எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ள போங்க மா,: என்றார்.

“பரபரப்பு வெளியே தெரியாமல், குட் மார்னிங் மேடம்” என்றாள். மேரியின் கணிவான முகம் அவளை பார்த்த நொடியே, அவர்கள் மேல் நம்பிக்கையையும் அன்பையையும் வரவழைத்தது.

“வா மா குட் மார்னிங்:

“உட்காரு மா”.

“தெங்கியூ மேடம்”

“தொடர் கேள்வி கனைகள் தொடுத்த படி இருந்தாள் மேரி.”

“அனைத்திற்கும் விடைகளை சட்டு சட்டென அளித்த விதம், தெரேசாவின் குழந்தை முகம் மேரியையும் கவர்ந்தது.”

“ஓகே மா.. , கொஞ்சம் வையிட் பண்ணுங்க . தலைமை நிர்வாகியின் ஒரு நேர்காணல் உள்ளது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை உறுதி வெளியே சிறிது நேரம் காத்திருங்கள் என அடுத்த நபருக்கு அழைப்பு விடபட்டது”
அந்த நேர்காணலும் முடிந்தது.

“அப்பாயிண்மெண்ட் ஆர்டர் வாங்கிகிட்டு போங்க. அடுத்த மாதம் ஒண்ணாம் தேதி பணியில் சேர்ந்து விடுங்கள், என்றார்”

மிகவும் மகிழ்ச்சியோடு பணியில் சேர்ந்தாள் தெரேசா. முதலில் டிரைனிங் பிரியட். ஒரு வருடம் அனைத்து வார்டுகளிலும் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பெயருக்கு ஏற்றாற் போல் அன்பும் கணிவும் தெரேசாவோடு பிணைந்து இருந்தது. வருகின்ற நோயாளிகளுக்கு மகளாக, தமக்கைமாக இருந்து சேவை செய்வதில் தனது முழு கவனத்தையும் செலுத்தினாள். அவளின் அந்த ஈடுபாடு அந்த மருத்துவமனையில் அவளுக்கு ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியது.

ஐ. சி. யூ வார்ட்டில் ஷயூடல் கிடைத்த போது அந்த மருத்துவமனையில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தற்கு மிகவும் பெருமைபட்டாள். தினமும் அலைபேசியில் தனது தாயிடம் மருத்துவமனையின் சிறப்பையும் அந்த மருத்துவமனையால் எத்தனை பேர் குணமாகி செல்கிறார்கள் என சொல்லிவிட்டுதான் தூங்க போவாள்.

அன்று வெள்ளிக்கிழமை காலை வந்து அட்டன்டஸ் கையெழுத்து செய்துவிட்டு உள்ளே நுழைந்தவளுக்கு தோழி நர்மதாவின் குரல் அவளை திருப்பியது.

“ஒரு சந்தோஷமான செய்தி தெரேசா”

“சொல்லுடா.”.

“என்னவென்று கெஸ் செய் பார்போம்”

“என்னவென்று சொல்லு பா”

“சொல்லட்டுமா”

“சொல்லு மா பிளிஸ்”

உனக்கு பிடித்த மேரி மேடமுடன் இன்று முதல் உனது பணி என்றாள்.

அவ்வளவுதான் தெரேசாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவளின் கணவு நிறைவானது.

உடனே அம்மாவிற்கு போன் செய்து அம்மா நான் நினைத்தபடி மேரி மேடம் டிபார்ட்மெண்ட் என்றாள். மகிழ்சியாக நாட்கள் கடந்து போயின.

அன்று இலவச பரிசோதனை நாள். நான் மேரி மேடமுடன் சேர்ந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன் என சொல்லி கொண்டு இருந்தாள். வழக்கம் போல் இலவச சிகிச்சை துவங்கியது.

வருகின்றன மக்களை வரிசையில் அமர்த்தி ஒவ்வொரு ஆய்வகத்திற்குள் அழைத்து சென்று சோதனை எடுத்து அவர்களை வழிநடத்தும் பணி அவளுடையது. பின்னர் அனைத்து சோதனை முடிவுகளையும் பையிலில் போட்டு தலைமை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அமர வைக்கும் பணி அவளுடையது.

ஆய்வு முடிவுகள் பிரிண்ட் ஆகி வர மிகவும் தாமதம் ஆனது. ஆய்வு கூடத்தில் ஆய்வுகள் எடுக்கும் நேரத்தைவிட ஏன் முடிவுகள் வர தாமதமாகிறது என ஆய்வகத்தில் கேட்டு கொண்டு இருந்தாள். தெரேசாவின் மாமா ஜான் திடிரென சென்னை ஒரு வேளை விஷயமாக வந்து இருந்தார்.

அப்படியே தெரேசாவின் பார்த்து விட்டு போகலாம் என மருத்துவமனையில் வந்து காத்து இருந்தார். தெரேசா மாமாவின் வரவால் மிகவும் மகிழ்ந்து போனாள். மேரி மேடமிடம் அனுமதி வாங்கி கொண்டு மாமா வந்து இருக்காங்க மேடம் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என அனுமதி வாங்கி கொண்டு, வாங்க மாமா வெளியே போய் டிபன் சாப்பிட்டு வரலாம் என்றாள்.

“வாம்மா போலாம் என இருவரும் வெளியே போய் அவளுக்கு பிடித்த பொங்கல் வடை வாங்கி கொடுத்தார்” மாமா.

“மாமா நீங்கள் இட்லி சாம்பார் வாங்கிக் கொள்ளுங்கள் , இங்கு சூப்பராக இருக்கும் “,என்றாள்.

“சரி” என்றார்.

“என்னம்மா ஆஸ்பத்திரியில் இவ்வளவு கூட்டம்”, என்றார்.

அதுவா மாமா, வருடம் ஒரு முறை எங்கள் ஆஸ்பத்திரியில் இலவசமாக ஆய்வு செய்வார்கள். Bp, sugar, ECG என… சட்டென்று “மாமா நீங்கள் கூட டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்களேன்”

“எனக்கு எதுக்குமா நான் நன்றாக தானே இருக்கிறேன்.”

“இல்லை மாமா எப்படியும் சென்னை வந்து இருக்கீங்க”.

“பாருங்கள் இது எனக்கு முன்பே தோன்றவில்லை.”

“வேண்டாம் மா… “

“நான் அத்தைக்கு போன் செய்கிறேன்… என சொல்லி அனுமதி வாங்கி, வாங்க போலாம் என கட்டாயப்படுத்தி அழைத்து சென்றாள்.

மாமாவிற்கு எல்லா டெஸ்டும் எடுத்தார்கள். அதிர்ச்சியான விஷயம் மாமாவிற்கு இதயத்தில் பிளாக்ம் உடனே சர்ஜரி செய்ய வேண்டும் என் சொன்னார்கள். ஒரே வாரத்தில், நல்லா வந்த மாமாவிற்கு, ஆப்ரேஷன் செய்துகூட காப்பாற்ற முடியவில்லை. அத்தை கேட்ட கேள்விக்கு பதில் இல்லை தெரேசாவிடம்.

அன்று அவரை டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்க கூடாதா என யோசித்து யோசித்து.. ஒன்றும் புரியவில்லை. அனைத்து காரியமும் முடிந்து வேலைக்கு வந்தாள். மாமாவின் மரணம் அவளை அந்த மருத்துவமணை மேல் சந்தேகம் கொள்ள செய்தது. அவளின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

வார்டு பாய் மணி அண்ணா வயதில் மூத்தவர். மெல்லமாக தெரேசா இங்கே வா மா என்றார்,

“என்னங்க அப்பா…”

“எல்லா ரிப்போர்டடும் மேரி ஸிஸ்டர் மற்றும் மருத்துவமணை நிர்வாகி பார்த்துதான் வெளிவரும்”.

“நல்லது தானே பா … என்ற தெராசாவிடம்….. இல்லமா…”

“ரிப்போர்ட் எடுத்தது வராதது….. நிர்வாகம் சொல்வதுதான் வரும்… ”

“புரியல பா….”

இந்த முதல் வரவேற்பறையில் நுழையும் மனிதர்கள் இலவசமாக நோயாய்களை தாங்கி செல்லும் நோயாளியாக அனுப்படுகிறார்கள்.

அதை கேட்டவுடன், தெரேசா கண் எதிரே இருந்த மேரி சிலை விரிசல் விட்டது.

“வேலைக்காரன்” சிவகார்த்திகேயன் நடித்த படம் கண்முன்னே காட்சி படிவமாக அரங்கேறியது.

விசுவாசம் என்ற ஒரு வார்த்தை பல மனிதனை நோயாளியாக மாற்றிவிட்டது. அதுமட்டும் அல்ல உயிரை பலி வாங்கிவிடுகிறது, விதை விதைப்பில் நஞ்சை கலந்து கொடுத்து அதன் மகசூலை பெருக்க பின்னர் மருந்துகள் கொடுப்பது போல? ஆரோக்கியமான மனிதனுக்கு இலவச பரிசோதனை என்ற பெயரில் நோயை உண்டாக்கி அவர்களை நோயாளியாக மாற்றுவது மருத்துவமா…?

சுயலாபத்திற்காக சுயநலமாக நடந்து கொண்ட மருத்துவ நிர்வாகிகள், உடன் பணிபுரிபவர்கள் என் எல்லோரும் கல்லாக தெரிந்தார்கள் தெராசவிற்கு, அன்றே வேலையை ராஜினமா செய்துவிட்டு, குடியாத்தம் சென்றிவிட்டாள். மருத்துவம் ஒரு சேவை. பணம் சம்பாதிப்பது மட்டும் அவர்களது நோக்கமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அந்த மாதிரி மருத்துவமணையில் பணியில் சேர்ந்து மகிழ்ச்சியாக பணி புரிந்துவந்தாள்.

வருடங்கள் கடந்தது. ஒரு நாள் உடன் பணி புரிந்த நர்மதாதான். மேரி சிஸ்டர் நிலையை சொன்னாள். ஆதனால் தான் சென்னை வந்து மேரியை பார்க்க வந்தாள். ஜோசப், தெரேசாவிடம், அம்மா ஒரு கல்யாணத்திற்கு போய் இருந்தார்கள். திடீர் என்று நெஞ்சு வலி வந்து இருக்கு. சொந்தகாரர்கள் ஒரு தப்பான ஆஸ்பட்டலில் அனுமதித்து விட்டார்கள் நாங்களும் அப்போ ஊரில் இல்லை.. மருத்துவர் ஒருவர் எங்க சொந்தகார்களிடம் கவலை வேண்டாம், அவுங்க நன்றாக இருக்கிறார்கள்.

இப்போது அறிவியல் எவ்வளவோ வளர்ச்சி அடைந்து உள்ளது. மேஜர் ஆடக் ஓப்பன் ஆர்ட் சர்ஜரி செய்து விடுவதுதான் நல்லது. எங்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள் இல்லை. நாங்கள் பார்த்து கொள்கிறோம். பணத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்கள்.

நாங்களும் பணத்திற்கு ஏற்பாடு செய்து ஓப்பன் ஆர்ட் சர்ஜரியும் செய்தார்கள். ஆனால் சர்ஜரி பெயிலியர் அதை அவர்கள் மறைத்துவிட்டார்கள். அம்மா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். இரண்டு வருடங்களாக இப்படியேதான் இருக்கிறார்கள் என்றார். ஒரு மரணத்தில் அவர்கள் செய்த பாவ கணக்குகள் சரி பார்க்கப்படும் என நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பாவ கணக்கு அதிகமானால் மரணம் கூட அவர்களுக்கு பிராட் சித்தம் தர யோசிக்கிறது நிஜம்தான் போல…..

தெரேசா, சரிங்க அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள், வருகிறேன் என வெளியே யோசித்தபடி “பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்லா: என்ற வாசகம் நினைவலையில்……”

“ஆட்டோ சென்டரல் போகனும். ஆட்டோ வருமா”, என்றாள்

“வாங்க மா”, என ஆட்டோ கிளம்பியது.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கணியனின் வரிகள் ஆட்டோவில் எழுதப்பட்டு இருந்தது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here