ஆணுக்கு
வீடு வாசல்
தெரு
புளிய மரம்
தம் அடிக்கும்
நிழல் கூடம்
என்று வெவ்வேறு நிலம் இருக்கிறது
வீடு
தெருமுக்கு தேநீர் கடை
எங்கே வேண்டுமானாலும்
தேநீர் பருக முடியும்
புத்தர் உள்பட
எந்த ஆணாய் இருந்தாலும்
துறவி ஆகிறேன் என
வெளியேற முடியும்
களி மண்ணில்
சின்ன சிலை செய்து
வீட்டில் வைத்து கொண்டாடும்
பெண்ணின் துறவறம் வேறு
நறுக்கும்
வெண்டை காயில்
ஒதுக்கி வைக்கும்
காம்பை கூட
கலை பொருளாய் பார்க்கும்
அவள் அக மகிழ்வு வேறு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

