ஜன்னல் ஓர இருக்கையில்
அமர்ந்த குழந்தைகள்
ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு
எட்டிப் பார்க்கின்றன
மரங்களும் செடிகளும்
பின்னோக்கியே
எங்கே செல்கின்றன என்பதை கான,

பேருந்தின் முகப்பில்
பொழிந்த மழைத் துளிகள்
ஜன்னல் வழியாக ஒழுகி
குழந்தைகளின் ஆடைகளை ஈரப்படுத்துகின்றன
கதவுகள் இல்லாத ஜன்னல்களால்,

உடைந்து போன
ஜன்னல் கம்பிகள்
“கர்  கர்”என்று ஒலியை
எழுப்புகின்றன பள்ளம் மேடுகளில்
ஏறி இறங்கும் பேருந்தின்
உருண்டை சக்கரங்களால்,

பேருந்தின் ஒலிக்கருவிகள்
பாம் பாம் என ஒலியை எழுப்புகின்றன
சாலை வளைவுகளில்
சாரை சாரையாக
அணிவகுத்து போகும்
மாட்டு வண்டிகளை கடந்து செல்ல,

பேருந்தில் அசந்து
தூங்கிய குழந்தைகளை
தட்டி எழுப்புகின்றன விசில் சத்தமும்
ஒலி எழுப்பும் கருவிகளும்,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *