Subscribe

Thamizhbooks ad

பெத்தவன் – இமையம் | நூல் அறிமுகம்: பிருந்தா காசி

 

இக்கதை சாதி வெறியர்களை எப்படி அடையாளப்படுத்துகிறதோ, அதே போல ஒரு தந்தை மகளுக்கான உறவையும், அவரின் அன்பையும், மகளுக்காக ஒரு தந்தையின் தாகத்தையும் எடுத்துரைக்கின்றது…

இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருக்க கூடியவர் பழனி, இவரின் துணைவியார் சாமியம்மாள். இவர்களின் வீட்டை சுற்றி ஒரே கூட்டம். அக்கூட்டத்தில் இவர்களின் மகளான பாக்கியமே இங்கு பேசும் பொருளாக உள்ளார். அங்கு கூடிய மக்கள் கூட்டம், சாதிக் கட்சிகாரனலாம் எப்போது கதையை முடிக்க போகிற என்ற கேள்வியை பழனியின் மேல் வாரி தொடுக்கிறார்கள், உன்னால் முடியவில்லை என்றால் சொல்லிவிடு நாங்கள் முடித்து விடுகிறோம் என்று சாதிக்காரன் மேலும் அழுத்தம் கொடுக்கிறான்.

பழனி நானே நாளைக்கு முடித்து விடுகிறேன் என்கிறான், இதை நம்பாமல் அவரின் துணைவியார் சாமியம்மாளை கூப்பிட்டு கேட்கிறார்கள், பால்டாயில் வாங்கி வந்து கொடுங்கள் நானே ஊற்றி விடுகிறேன் என்று கூறுவதை அடுத்து பஞ்சாயத்து கலைகிறது. ஆனாலும் சில பெண்களின் கூட்டம் பழனியை நச்சரித்ததை அடுத்து பழனி தனது வேட்டியை போட்டு தாண்டி அவள் நாளை பொணமாகவில்லை என்றால் நான் இதே இடத்தில் பொணம் ஆகி விடுவேன் என்று கூறியதை அடுத்து அக்கூட்டம் நகர்ந்தது…

நடந்தது என்ன?

பழனி – சாமியம்மாள் இணையருக்கு 20 ஆண்டு கழித்து தவம் இருந்து பிறந்தவள்தான் பாக்கியம். இவள் கல்லூரியில் படிக்கும்போது கீழ் சாதியை சேர்ந்த பெரியசாமி என்பவனைக் காதலித்து வந்துள்ளார்.. ஒருநாள் இவர்கள் இருவரும் திரையரங்கு சென்றதை பார்த்த செய்தியை வீட்டில் சொல்லி விட்டார்கள். இதை அறிந்த அவளின் தாயார் ஆத்திரமடைந்து, அவளை மாட்டை அடிப்பது போல அடித்து வீட்டிற்குள் அடைக்கப்பட்டால். மூன்று, நான்கு முறை வீட்டை விட்டு வெளியே செல்ல, முயற்சித்து பல தோல்வி கண்ட அவள் பல அவமானங்களையும் பெற்றால்.

ஊர் பஞ்சாயத்தில் வைத்து அவள் முடி கத்தரிக்கப்பட்டன, சாணியை கரைத்து, செருப்பால் ஊர் முச்சந்தியில் அடிக்கப்பட்டால், ஊர்க்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி நாயைப் போல அடித்து விரட்டினார்கள்… மரத்துப்போன உடலும் உயிரும் மட்டும் மிஞ்சுகிறது… இந்த செய்தி தெரிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் உயிரோடு இருப்பது இதுவே முதல் முறையாக உள்ளது அந்த ஊரில், ஏனென்றால் அவள் காதலிக்கும் கீழ்ச்சாதியை சேர்ந்த பெரியசாமி ஒரு போலீஸ்காரன், அவனின் உயர்ந்த பதவியும் முக்கிய காரணமாக உள்ளது…
இதனால் தான் இந்த பஞ்சாயத்து கூட்டம்…

வாசகர் அனுபவம்: பெத்தவன்

நல்லூரு பாலூரு

இக்கதையில் நல்லூரு, பாலூரு என்ற ஊர், சாதி மறுத்து காதல் செய்பவர்களுக்கு ஒரு பயமுறுத்தக் கூடிய ஊராக இவை எடுத்துக் காட்டப்படுகின்றன.
நல்லூரில் ஏற்கனவே சாதி மறுப்பு காதல் செய்பவர்களை பஞ்சாயத்து கூட்டங்களில் வைத்து, அவர்களின் பெற்றோரின் கண்களின் முன்னால் அவர்களின் காதில் மறந்து ஊற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டார்… அதேபோல பாலூரு ஊரிலும் சாதி மறுப்பு திருமணம் செய்ய கோவிலுக்கு சென்ற அவர்களை நிர்வாணமாக கட்டி வைத்தும் 20 ஆண்களால் மானபங்கம் செய்யப்பட்டு கொலை செய்ததை இந்தக் கதையில் எடுத்துரைக்கின்றன…

பெத்தவனின் அன்பு

என்னதான் இருந்தாலும் 20 வருடம் கழித்து தவமிருந்து பிறந்த மகளை தன் கையால் கொல்ல மனமில்லாத பழனி, கூட்டம் கலைந்த பிறகு வீட்டிற்குள் வந்து கதறி அழுகிறான். சிறிது நேரம் கழித்து ஒரு தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டு மூன்று வருடமாய் பேசாமல் இருந்த தன் மகள் பாக்கியத்திடம் கொடுத்து சாப்பிடச் சொல்கிறான். விஷம் கலந்து இருப்பாரோ என்று அவள் அஞ்சுகிறாள் இருந்தாலும் அவள் அதை கண்ணீர் சிந்தியவாறு சாப்பிடுகிறாள்.

பிறகு வீட்டிற்கு சென்று 60,000 பணத்தையும், வீட்டில் இருந்த நகைகளை கொடுத்து,
நீ போ……. நீ உசுர கூட வாழனும்…… என்று சொல்லி கதறுகிறான் பழனி. அவளோ என்னை மருந்து ஊற்றிக்கொண்டு விடுங்கப்பா என்று அழுகிறாள். ஆனாலும் அவளை கட்டாயப்படுத்தி இவ்வூருக்கு தெரியாமல் வழியனுப்பி வைக்கிறான் பழனி….வழி அனுப்பி வைத்த பழனியோ விடியற்காலையில்…

“தன் மகளுக்காக, சாதி வெறிப்பிடித்த மனிதர்களால் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள் பெத்தவன்….”

பெத்தவன்…
ஆசிரியர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

Image

பிருந்தா காசி
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

1 COMMENT

  1. வலி மிகுந்த வாசிப்பனுபவம் தரும் நூல்…
    அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்களும் நன்றியும்…
    பரிந்துரைகள்:
    காட்சிப் படிமங்களை இன்னும் நுணுகித் தேரலாம்.
    பாத்திரங்களின் உரையாடல்களில் இழையோடும் அவலச்சுவை அழுத்தத்தைக் கோடிட்டிருக்கலாம்.
    எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க முனையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here