https://bookday.in/pidunga-mudiyathavargal-poem-by-pangai-thamizhan/

பிடுங்க முடியாதவர்கள் கவிதை – பாங்கைத் தமிழன்

இன்னும்
பிடுங்க முடியவில்லை…

எத்தனை ஆண்டுகள்?
எத்தனை ராஜாக்கள்?
எத்தனை பிரபுக்கள்?
எத்தனை ஆட்சிகள்?

ஊஹூம்…
அசைக்கிக்கூடப்
பார்க்க முடியவில்லை!
அரசனோ
ஆட்சியோ….

நீர் ஊற்றி
நிலை நிறுத்தினரே தவிர…
பிடுங்க நினைத்தாரில்லை!

அது
இப்போது…
ஜோராகவே நடக்கிறது!

ஏதோ…
ஒன்று இரண்டு பேர்
சிறு சிறு
கிளைகளை
ஒடித்தார்கள்!

பாவம்
ஒன்றும் செய்ய
இயலவில்லை!

பிடுங்குவதைப் போல்
நடித்தவர்களும்
நடிக்கின்றவரும்
இருக்கும் வரை
எப்படி பிடுங்க முடியும்!

விஷ விதைகளை
நட்டவன்
முள் வேலிகளாக
வேள்வி என்றும்
வேதம் என்றும்
பாதுகாப்பு அரணை
பலப்படுத்தி….

பக்கத்துணையாக
பயில்வான்களை
வைத்துக்கொண்டான்!

எவ்வளவு
தொலை நோக்குப் பார்வை!
அப்பாவிகளை
அடிமைப் படுத்தி….

வழி வழி
வாரிசுகளுக்கு
வழிவிடாமல்
வாழ விடாமல்…

அடர் இருள்
காட்டிற்குள்
அநாதைகளாக்கி….

மண்டிக் கிடக்கும்
மதமெனும்
சாதியெனும்
காட்டு மரங்களை….

எந்த ஆட்சியாலும்
பிடுங்க முடியவில்லை!
முடியாதோர்
மூலையில் படுங்கள்!

பிடுங்கிப் பார்க்க
முயல்வோரை
தடுக்காமல் இருங்கள்!
சாதி மத மரங்களை
பிடுங்குவார்கள்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *