Pitchumani Poetries About Equalize the People. Book Day Website And Bharathi TV Are Branches Of Bharathi Puthakalayam.

பிச்சுமணியின் கவிதை



ஆதாயந்தேடி..
கொழுத்துச் செழித்த
வார்த்தைகள் எதுவும்-இருவரும்
பறிமாறிக் கொள்ளவில்லை.

எதையும் தானமாகத் தந்து
புண்ணியம் தேடவில்லை

வஞ்சித்த செயல்களுக்குப்
பாவ மன்னிப்புக் கோரவில்லை

இதயத்தை இடமாற்றம்
செய்ததாய் தன் இனத்துக்குள்ளே
கலப்பு மணம் புரிந்ததாய்
கர்வமெதுவும் கொள்ளவில்லை.

அன்பையும்..
பிறர் வலியையும்
உணரும்
யாதும் உயிரே
யாவரும் கேளிர்.

– பிச்சுமணி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *