உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி

உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி




“உழவுமாடுகளோடு
உதவாமலே
போன நிலங்களை
விளைநிலங்களாக
சமநிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார்
உணவுக் கடவுள் ”

“மாடுகள்
முன்னோக்கி
இழுத்துக்கொண்டு போக
பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்
பக்தன்
கைகளில்
கடவுளுக்கே
வழிகாட்டும்
மூக்கனாங்கயிற்றைப் பிடித்தவாறே ”

“பசியோடு
உலகத்தின்
உணவுகளையே
இழுத்துப் போகும்
மாடுகளின்
உணர்வுகளுக்காக
தானும்
பசியோடு நடக்கிறான்
பாய்மரப்
படகுகளைப்போல ”

“கொழ கொழச் சேற்றையெல்லாம்
புரதச் சத்து
உணவுகளாக
மாற்றிக்கொண்டிருக்கும்

உழுது வாழும்
மாடுகளும் உழவனும் ”

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *