Subscribe

Thamizhbooks ad

கவிதை: மனித ஜீன்கள் மண்டியிடாது – சந்துரு

நிலையின்மையின்
சூச்சுமம் அறிந்தும்
எதிர்காலத்தின் தேவைகள்
நிகழ்காலத்தின்
பாத்திரங்களிலிருந்து திருடி
ஒளித்து வைக்கப்படுகிறது…!
துக்கம் மகிழ்ச்சி
எதன் மீதும்
ஆதிக்கம் செலுத்த முடியாமல்
உடல் நசுங்கிய புழுவாய்
இருந்த இடத்திலிருந்தே நெளிகிறது
இயலாமைகள்…!
தன்னிடமிருந்து தங்களையே
விலக்கிவைத்து
நடக்கத்தொடங்கிவிட்டார்கள்
மனிதர்கள்…!
உலகம்….
சுவர்களுக்குள் சுருங்கிவிட்டதால்
தனிமையின் முகமூடியணிந்து
மூச்சிறைக்கிறது
காலத்தின் குழந்தை…
பார்வைகள் தீண்டுமளவு
உடலின் தீண்டல்கள்
வலுவிழந்து விட்டது…!
ஜன்னலிலமர்ந்து கரையும் காக்கை…
கடந்து செல்லும் மேகம்…
கதவிடுக்கில் நுழையும் காற்று…
உணவுப்பண்டத்தின் மீது
ஊர்ந்து செல்லும் எறும்புகளென
எல்லா உயிர்களும்
அதனதன் போக்கில்
இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன...
ஜீவராசிகளனைத்தையும்
ஆறாம் அறிவுக்குள் அடக்கிவிட்டதாய்
ஆர்ப்பாட்டம் செய்த மனிதன்தான்
பூமியின் இயக்கங்களிலிருந்து
இடறி விழுந்து
சிறைப்பட்டுக் கிடக்கிறான்…!
ஆனாலும்
அழகான பூமிக்கு
வழிகாட்டும் மாலுமி
மனிதன் மட்டுமே…
கடவுளில்லாத பூமி கூட
எதிர் காலத்தில்
சாத்தியமாகலாம்…
மனிதனற்ற பூமி
சாத்தியமேயில்லை…
மனிதன் உலவாத பூமியை
கற்பனை செய்தால்
அதற்குப் பெயர் பூமியல்ல…
புதர்கள் மண்டி பாதைகளின்றி
விலங்குகள் அசையும் சூனியக் காடு
அவ்வளவே..!
கோடியாண்டுகள் காத்திருந்திருந்து
முதுகெலும்பபை முழுதாய் நிமிர்த்தி
எழுந்து நின்ற மனிதப்பரிணாமம்
நோய்க்கூட்டங்களிடம்
மொத்தமாய் முறிந்துவிழ
மனித ஜீன்கள்
ஒருபோதும் அனுமதிக்காது…
நோய்களின் கிடங்குகளில்
தொலைத்துவிட்ட
சொர்கத்தின் சாவியை மீட்க
கிருமிகளைக்கொண்டே
கிருமியை வெல்லும்
அதிசயமொன்றை
அறிவியல் உலகம்
விரைவில் நிகழ்த்தும்…
சுவாசப் பைக்குள் இறங்கி
யுத்தம் செய்து…
வைரஸ்களை சுத்தம் செய்து
பழைய வசந்தங்களை
பூமியின் மார்பில்
புதிய வாசனைகளுடன்
மனிதன் எழுதுவான்…!
அதுவரை…
அருகில்
பசிக்கும் வயிறுகளை மட்டும்
பத்திரமாய்
பார்த்துக்கொள்ள வேண்டும்…!
சந்துரு…
***************************************

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here