கவிதை Poem கவிதைகள்

கவிஞர் சந்துரு ஆர்.சியின் – கவிதை

உங்கள் மீது கவிழ்க்கப்பட்ட
இந்த இரவிலிருந்து
விரைவாய் வெளியேறிவிடுங்கள்
தார் கலவையைவிட
தடித்திருக்குமதை
குழந்தையின் நகங்களால் சுரண்டிக்கொண்டிருக்காதீர்கள்
உங்களிடம் நிறைய தீக்குச்சிகள்
இருக்கின்றன
பற்ற வைக்க வைத்திருக்கும்
பட்டைகளை அவர்கள்
நமத்துப்போகச் செய்கிறார்கள்
அவர்கள் தந்திரக்காரர்கள்
உங்கள் பகலையும் கொளுத்தி
புகையால் மறைக்கிறார்கள்
காலத்தை திரித்து எழுதுபவர்களின்
கொடுங்கோன்மைகள்மீது
வழக்குகள் குவிகின்றன
நீதிமான்கள்
வேறொரு கனவுக்குள் லயித்து
பகலின் இருட்டுக்கு காரணம்
நீங்கள் கண்களை மூடியிருக்கிறீர்களென்று
வழக்குகளை
தள்ளுபடி செய்கிறார்கள்
உங்களுக்கு வேறு வழியில்லை
இரவை எரித்தும்
பகலை அணைத்தும்
வெளிச்சமாக்க வேண்டும்
பகலை எரித்துக்கொண்டிருக்கும்
கங்குகளை மொத்தமாய் வாரி
இரவின் மீது வீசியெறிய வேண்டும்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *