Subscribe

Thamizhbooks ad

வளவ. துரையன் கவிதைகள்




தோல்வி
**********
எதைச் செய்தாலும்
எப்பொழுதும் எனக்குத்
தோல்வியே மிஞ்சுவதேன்?

அப்போதுதான் நான்
ஆனந்தத்தை அனுபவிக்கலாமா?

தொட்டுவிடும் தொலைவிலிருந்தது
கோடு எனக்கு.
எட்டாக்கனியானதேன்?
எட்டியதுதான் இனிக்குமா?

ஓரிரு மதிப்பெண்கள்
கிடைக்காததால் கண்ட
ஒரு தோல்விதான்
எனக்குப் பாடம் சொன்னது.

கோயிலுக்குச் சென்று
முறையிடலாமென்றால்
அங்குக் கொற்றவை முன்
திரையிடுகிறார்கள்.

எப்பொழுதும் பெரும்பான்மை
எங்கும் வெல்வதுபோல்
என் தோல்வியே
என்னிடம் வெற்றி பெறுகிறது.

சோகம்
**********

எங்கு பார்த்தாலும் சோகம்
எதைப் பார்த்தாலும் சோகம்

சோகத்திற்கே சோகம் வருகிறது.
எல்லா இடத்திலும் சோகம்;

சோகத்திலிருந்து ஒளிய முடியவில்லை
தப்பிக்க இயலவில்லை

ஏனிந்த சோகமென்று
சோகமே கேட்கிறது.

எதைச் செய்தாலும்
பின்னிருந்து நாலு பேர்
கால்களை இழுத்துச்
சோகக் குழிக்குள் தள்ளுகிறார்கள்.

நரிவேடம் மறைத்து
நண்பனாயிருப்பவரின்
நாலைந்து செயல்கள்
நன்றாகப் புரிந்தபின்
சோகம்தான் மிச்சம்.

என்ன செய்வது?

அறுந்து அறுந்து விழுந்தபின்னும்
மீண்டும் கட்டுவதுதானே
சிலந்தியின் வாழ்வு.

நாவற்பழக் கண்கள்
***********************
உன்னை இதுநாள்வரை பார்த்ததில்லை.

என் கண்களுக்கு விருந்தாக நீ
இன்று வந்து காட்சி தருகிறாய்.

கறுப்பும் வெண்மையும் கலந்த
கன்றுக்குட்டியாய் நீ
‘ம்மா’ என்றழைக்கையில்
நான் அகிலத்தையே மறக்கிறேன்.

கூட்டத்தைவிட்டுப் பிரிந்து விட்ட
உன் கூக்குரல் அன்னையின் காதில்
விழுந்திருக்கும் கண்ணே!
சீக்கிரம் வந்திடுவாள் அவள்.

பட்டுப் போன்ற உன் மேனியைப்
பார்வை விட்டு அகற்றாதே.

மெலிந்த கால்களுடன்
நீ துள்ளித் துள்ளி
ஆடும் நாட்டியம்
பார்க்கப் பார்க்கப்
பரவசம் தருகிறது.

நாவற்பழக் கண்களில்
நல்லதொரு மிரட்சியும்
சிற்றுடலில் நல்ல திரட்சியும்

உன் அழகின் போதையே
இனிமையான கவிதைதான்.

யட்சி
*******
அந்தச் சுடுகாட்டுப் பாதையின்
வழியெங்கும் பிச்சிப்பூக்கள்
பூத்துச் சிரிக்கின்றன.

அங்கு அவை மட்டுமே
சிரிக்க இயலும்.

அருகிலுள்ள ஆலமரத்தடிதான்
கணக்குகள் தீர்த்துப்
பஞ்சாயத்து செய்யும் இடம்.

அரசு செலவில் அமைந்த
கொட்டகையைச் சுற்றிப்
பயணம் வந்தவரின் பாடைகள்;
ஆடு தின்ற மீதிப் பூக்கள்.

உள்ளே பல சாம்பல்கள்
எலும்புகள் ஏதுமில்லை
பாலுக்குப் போயின போலும்.

உடைந்து கிடந்த
பானையிஞ் சில்லுகள்
உலக உண்மையைச்
சொல்லாமல் சொல்லின,

உண்மையாகவே அழுத
உள்ளங்களின் கண்ணீர்
உறைந்த தடம் தெரிகிறது.

எப்பொழுது காரியம் முடியும்
போகலாம் என்று
காத்திருக்கும் ஒரு சிலர்.

காலம் வரவேண்டுமே!

மரத்தின் மீதுள்ள யட்சி
அனைத்தையும்
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறது.

வளவ. துரையன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here