1
கடன் அதிகாரம்
——————————-
கை நீட்டி
வாங்கிவிட்டான்.
வீட்டிற்குள்
கால் நீட்டிப் படுத்திருக்கிறது
பார்ப்பவர்கள் அதிகம்பேர்.
******
துக்க வீட்டிற்கு
வந்தவன் செத்துச் செத்துப்
பிழைக்கிறான்.
கடன்காரன் தலை
மறைகிற வரை.
******
அவசரத்திற்குத் தந்து
உதவியவன்.
பிறகு கேட்கவேயில்லை.
யதேச்சையாய்ச் சந்திக்கையில்
தரையில் தத்தளிக்கிற
மீனாய்த் தவிப்பதறிந்து
காதோரம் கிசுகிசுக்கிறான்.
மெதுவா தா.
அவசரமில்லை நண்பா.
******
கடனை வைத்துக்கொண்டு
கண்ணதாசனாய் உருவகஞ்
செய்துகொண்டு
கவியெழுத ஏட்டைப்
புரட்டுகிறேன்.
சிரிக்கின்றது ஏற்கனவே
எழுதப்பட்ட கடன்கணக்கு.
******
கடன்காரரின் மரணச்செய்தி
அறிந்ததும்
வேறெங்கோ வாங்கிக்கொண்டு
விரைகிறான்.
இரண்டு சொட்டு தூறல்
விழுகிறது.
******
2
அழகழகாய்
ஐந்தாறு குட்டிகள்.
ஆளுக்கொன்றாய்
பிரித்துக்கொண்டோம்.
நன்றியின் பொருட்டு
அனுமதித்து விட்டு
தெருமுனையில்
தலை தெரிந்ததும்
வீடுவரை ஓடிவந்து
பிள்ளையின் நலங்கேட்டு
போகிறது தாய் நாய்.
எழுதியவர்
கௌ.ஆனந்தபிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.