ப.கணேஷ்வரி கவிதைகள்

ப.கணேஷ்வரி கவிதைகள்

 

ஆரவாரம் இல்லை

அது எப்போதும் இருந்ததில்லை
கோபதாபங்களை எப்படிக்காட்டிலும்
கைகட்டி வாய்பொத்தி தலைவிழ்ந்து அடுத்தடுத்த
என் தரிசனத்திற்காய் காத்துக்கிடப்பது
சமையலறை மட்டுமே.
அது மட்டுமே
இரவிலும் பகலிலும்
முழுவதுமாய் எனக்காக…
  Image may contain: flower and text
இனி  எல்லாம் சுகமே
நிறைய பேர் இங்கு ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களைப்போலத்தான் நானும்
அவன் கூறினான்
என்னைவிட உனக்கு வயிறு பெரிதென்று
அவனுக்குத்தெரிந்திருக்கிறது பாவம்
கூடவே என் மார்க் கச்சை விலக்கி
அழும் மகளுக்கு எப்படிச்சொல்வேன்
என் தேசத்தின் கூக்குரலை.
நாங்கள் இப்போது கடலை நோக்கிப் பயணப்படுகிறோம்
அங்கு வானமற்ற பெருவெளி ஒன்றுண்டு.
வசிப்பதற்கும் புசிப்பதற்கும் நேசிப்பதற்குமான நிலவொளி அது.
ஊதிப்பருத்த இரண்டு பலூன்களில்
ஒன்றை கையிலும் மற்றொன்றை வாயிலும்
கவ்விக்கொண்ட மகளின் காலடிகீழே
எம்தேசத்தின் நாட்குறிப்போடு
மெல்லமெல்ல மேலேறுகின்றோம்.
ஒரு அதிகாலைப்பொழுதில்
தன் கூட்டினைச் சுமந்தலையும்
பட்டாம் பூச்சிகளாய் மாறியிருந்தோம்.
   நன்றி         
 ப.கணேஷ்வரி,
மல்லி, திருவில்லிபுத்தூர்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *