இரா.மதிராஜ் கவிதைகள்

இரா.மதிராஜ் கவிதைகள்




இதயத் துடிப்பு
நிற்கும் போது
மட்டுமல்ல,
உன் நினைவுகள்
மறக்கும் போதும்
மரணிக்கிறேன்.

கண்ணிலிருந்து
வரும்
கண்ணீரும்
எரி தணலாய்
கொதிக்கிறது,

உன்னைப் பற்றிய
செய்திகளே
இன்னும்
என்னை
வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது.

உறவுகள் கூடி
இழுக்கும் தேரில்
உட்கார்ந்து
கொண்டிருக்கும்
நான்
அடிக்கடி
தனிமையாயிருக்கிறேன்.

அன்று என்ன
சொன்னாய்?
இப்போது என்ன
செய்து கொண்டிருக்கிறாய்
என்றொரு கேள்வி
கேட்கிறது,

ஆழ்கடல் பெரிதென்று
நினைக்கிறார்கள்
கண்ணீர்க் கடலில்
விழாதவர்கள்.

தேவதைகளின்
ஊர்வலத்தில்
குறுக்கே
சென்றவர்களும்
வாழ்க்கையைத்
தொலைக்கிறார்கள்.

உலகைச் சுற்றவைப்பது
சூரியனும், சத்திரனுமல்ல,
தானமும், தாயன்பும்
தான்.

இன்னும் ஆவலுடன்
பார்த்து ரசித்துக்
கொண்டிருப்பது
வெற்றி பெறாமல்
முயற்சி செய்துகொண்டிருக்கும்

மனிதன் தான்.

இரா. மதிராஜ்,
97884 75722.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Raju Arockiasamy

    காதல் ஊறிவிட்டால் இப்படித்தான் கவிஞன் கற்கண்டாய் கவிதைகள் கொட்டிடுவான்…அழகும் அற்புதமாய்…சிறப்பு கவிஞரே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *