கவிதைப் பெண்
கொள்ளை எழிலவள்
குணத்திலே கோபுரமாய்
வெள்ளையுளம் தாங்கி
வேதனைகள் தீர்த்திடுவாள்
கிள்ளை குரல் சேர்த்து
கீதம் ஈந்திடுவாள்
தொல்லை தனை அறிவாள்
தொடர்ந்திடுவாள் இன்பக்கதை
மங்கையரில் மணிமகுடம்
மாறாத துன்பமெல்லாம்
கங்கையிலே கரைக்கின்ற
கலங்கரைத் தீபமவள்
தங்கமோ அவள் இல்லை இல்லை
தரணியில் அவளோ ஒரு
மங்காத ஒளிச் சிதறல்
மலர்கவிதைப் பெண்ணவளே!
— ச.லிங்கராசு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super bro