கவிதை 1
நீ இப்படியே என்னை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்
உன்னை அப்படியே எடுத்து
விழுங்கி விடுவேன் என்றேன்
எப்படி என்றாள்
பொதுவாக
என்னைப்போல் இல்லை
என் விழிகள்
அவை இரண்டும்
சுத்த
அசைவப் பிராணிகள் என்றேன்
கவிதை 2
நான் என்னவோ
அமைதியாகத்தான்
உன் அருகில் அமர்ந்திருக்கிறேன்
ஆனால் பரிக்குள் பாய்ந்து செல்லும்
அயிரை மீன்களைப் போல
என் அணுக்கள் அத்தனையும்
உன்னை நோக்கித்தான்
பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன
தங்கேஸ்