சருகை
நழுவ விடுவதையறியாத
மரம் போல்….
காற்றிலுதிரும்
இதழையறியாத
பூவின் காம்பைப்போல்….
வானோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே உதிரும்
இறகையறியா
பறவையைப்போல்….
துடிப்பை நிறுத்துவதறியா
மெய் கூட
மெய்யாலும் அழகான வரம்தான்….
உனக்குப்
பிடிக்காததொன்றை..
எனக்குப்
பிடிக்குமென்பதால்
உனக்குப் பிடித்ததாக்கியதை விட
வேறெது
அதி பெரும் நேசங்களாகிவிடப்
போகிறது??…..
ஸ்ரீவாரி மஞ்சு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.