ஆசை ஆசையாய் வாங்கிய
ரயில் வண்டியின் தண்டவாளங்களை
இதயம் ஒட்டி இணைத்து ஓடவிட
ஐந்து சுற்றுகள் முழுமையுருவதற்குள்
தீர்ந்துவிட்டது பேட்டரி.
தீரா ஆசையுடன்
தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்போன
நிகரனின் கனவில்
ஓடும் ரயிலுக்கு
நிறுத்தம் என்பதேயில்லை.
கவிதை எழுதியவர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

