கவிவாணனின் கவிதை

கவிவாணனின் கவிதை




உயர்த்தப்படுவதும்
உயர்த்துவதற்காகவே
உருவாக்கப்பட்டதும்
எதுவெனக் கொள்ளும் போது.

உயர்த்துவதின் அர்த்தங்கள்
வெகு மனிதர்களின் நரம்புகளை
பிரித்தெடுத்துக் கொண்டே செல்கின்றன.

பிரிப்பதும் பிரித்தாளுவதும்
ஒற்றை..ஒற்றைப் பிறப்பென கொண்டாடுவதும்
எத்தனை நாழிகை
அனைத்தையும் கழுவில் ஏற்றும்
காலம் விரைகின்றன

உன்னையும் என்னையும்
குரல் எழுப்பச் சொல்லி நிற்கிறது

அப்போது-
வணங்கப்படும் எவையும்
உதவாது
உயிர்க்காது!

அப்போதேனும்
அப்போதேனும்
பிறப்பின் அர்த்தம் உணர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென!

– கவிவாணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *