பாவங்கள் பாவம்….
——————————

மரம் கலப்பையான போது
பூமி மகிழ்ந்திருக்கும்..
கலப்பை கடப்பாரையாகிற போது
தேசமே அதிர்ந்து கொண்டிருக்கிறது……

ரோம் நகரம்
தீப்பற்றியெரிந்த போது
பிடில் வாசித்த
வம்சாவழியினர் நீங்கள்…..
உங்களுக்கு
கூன் விழுந்த கிழவியோ
குமடு பால் கசிகிற பிள்ளையோ
எவர் வந்தாலும் அடிப்பீர்கள்….

அடிப்பதற்காயும்
சுடுவதற்காயுமே
அடிமைகளை உற்பத்தி செய்து வைத்திருக்கிற
பரமாத்மாக்கள் நீங்கள்..

நீங்கள் செய்கிற பாவங்கள்
இவர்களை விட பாவம்….
போதும் நிறுத்துங்கள்…..

பொள்ளாச்சி முருகானந்தம்……



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *