சிவப்பு
————–
ஏங்கி அழுகிற பிள்ளைக்கும்
ஓங்கி எம்பி நுழைக்கிற
வற்றிய முலை தாய்க்கும்
இடையிலான பசி
பாலின் நிறம் வெண்மையை
சிவப்புச் சாயம் பூசி விடுகிறது……..
ஒரு மார் நுனி மாறி
இன்னொரு நுனி
மூச்சிழுத்து குழந்தை சூம்புகையில்
பசி மொழி பெயர்க்கிறது
வறுமை நிறம் சிவப்பென……….
பொள்ளாச்சி முருகானந்தம்……