ஓடையின் கண்ணீர்
****************************
பருகப் பருக பதனீர் தோற்கும்,
ஆடும் மாடும் மக்களும் பருகும்,
பால்நிறத்தில் பாய்ந்தோடிய
எங்களூர் ஓடை,
மண் வாசனை மணக்கும்
மூலிகை வாசம் வீசும்,
எந்நோயும் தீண்டியதில்லை,
எவ்விடரும் நேர்ந்ததில்லை.
காலம் உருண்டோட
காய்ந்துபோச்சு எம்
கனவுகள் போல
ஓடையும் இல்லை
கால்கள் நனைக்க
தண்ணீரும் இல்லை,
தாகம் தீர்க்க
மறை நீர் பற்றி
மேலை தேசம் பேச,
விலை நீரானது
எம் தேசத்தில்.
— முத்துராமன் முத்துமாணிக்கம் , திருமங்கலம் .
இப்போதும் இதைப் போன்று வளங்களின் வாட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும், EIA 2020க்கு எதிரான இக்காலகட்டத்தில், பின்விளைவுகள் குறித்து சிந்திக்க தூண்டும் கவிதை.
அருமையான கவிதை தோழர் முத்துராமன்.. மேலும் எழுத வாழ்த்துக்கள்..
ஓடையும் ஆறுகளும் வற்றி போன நிலையில் இந்த கவிதையின் வரிகள் இழந்து போன மகிழ்வுகளின் சாட்சியாக நிற்கிறது…வாழ்த்துகள் தோழர்..மேலும பல நல்ல கவிதைகளை எதிர்பார்கிறோம்..💐💐💐
சிறப்பான பதிவு தோழர்..
சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதின் அவசரத்தை வலியுறுத்திய வரிகள்.
இன்றைய உண்மை நிலவரத்தை கூறும் கவிதை. ஆறு ஏரி குளம் கண்மாய் ஓடை எதுவுமே இல்லாமல் செய்துவிட்டோம். ஓடையின் கண்ணீர் மட்டுமே இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது.