ரா. சண்முகவள்ளியின் கவிதைகள்| Kavithaikal - Poetry யாரும் தேடாதயாருக்காகவும் வாடாதவாழவென்பதோஅவளின் அதிகபட்ச கனவானது - https://bookday.in/

ரா.சண்முகவள்ளியின் கவிதைகள்

ரா.சண்முகவள்ளியின் கவிதைகள்

1

யாரும் தேடாத
யாருக்காகவும் வாடாத
வாழவென்பதோ
அவளின் அதிகபட்ச கனவானது

2

அன்று வீட்டுச் சுவரை
அலங்கரித்த புகைப்படங்கள்
இன்று கைபேசியில் கைதாகின!

3

தடுமாறும் சமயங்களில்
தட்டிக்கொடுக்க ஆள்தேடாதே
உன் இருகைகளே போதும்
துவளும் போதெல்லாம் தலைகோத
இரவல் கைகளை
நம்ப முடிவதில்லை !

4

பூ விற்கும் பாட்டி
கூடுதலாகவே வழங்குகிறாள்
சில முழப் புன்னகைகளை.

5

பிரியமானவளாய்
இருந்த நான் என்று
பிழையானவளாய்
ஆனேன் என்று
எண்ணியே கழிகின்றன
எந்தன் பொழுதுகள்

6

கைப்பாவையாக இருந்தவரை
கிடைத்த காதலிப் பட்டம்
காற்றில் கரைந்தது
ஏன் என்ற வினாவால்…

7

என்னைக் குறித்து
நீ வாசிக்கும்
குற்றப்பத்திரிக்கையில்
உன் இயலாமையை
என் அறியாமை என்று
விளம்புகிறாயே
ஓ இதுதான்
உன்னில் என்னை
கலப்பதோ?

8

சண்டையிடும் போதெல்லாம்
என் குழந்தை என வாதிடும் நீ
கழிவறைப் பணிவிடைகள் செய்ய
கண்டுகொள்ளாததும் ஏனோ?

9

உனக்கான தேவைகளுக்கு
வெள்ளைக் கொடியுடன்
வலம் வரும் நீ
என் தேவைகளின் போது
நீதி தேவதையாக
நியாய தராசு ஏந்துவதும்
ஏனோ!
அதுவும் கண்ணில் ஒரு கறுப்புத் துணி
கட்டியபடி!

எழுதியவர் : 

ரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *