Porada Va En Thozha Kavithai By Theni Sundar. போராட வா என் தோழா கவிதை தேனி சுந்தர்

போராட வா என் தோழா கவிதை – தேனி சுந்தர்




இழந்தால்
இரண்டு நாள் சம்பளம் தான்..
அதுவும் இப்போதைக்கு..!
வாய்ப்புகள் நெறய இருக்கு..
அதையும் திரும்ப பெறுவதற்கு..!!

கடந்த கால
வேலை நிறுத்தங்களில்
அதிகம் இழந்தவர்கள் தான்
இன்று
மற்றவர்களை விட
அதிகம் அடைந்தும் இருக்கின்றனர்..!

இன்றைய இழப்பு முக்கியமா..?
நிரந்தர பென்சன் முக்கியமா..?
முடிவெடு நண்பா..
முடிவெடு தோழி..!

இவர் வேண்டாம் என்கிறார்..
அவரெல்லாம் பங்கெடுக்கவில்லை..
நீஙகள் காரணமாய் சொல்லும்
இவரும் அவரும்
உங்க பென்சனில்
துண்டு விழுகும் போது
எங்கிருப்பர்..??

நிரந்தர பென்சன்
நிச்சயம் என்றால் தான்
நம் குடும்பமே
நம்மோடு இருக்கும்..!!

தெம்போடு இருக்கும் போதே
போராடு..
வர மறுப்பவர்களுடன்
வாதாடு..

போராட்டக் களத்தில்
நீயும் நானும் முன் ஏரு..
இப்போதைக்கு
குழுவில் உந்தன் பேர் போடு

நம் ஊதியம்..
நம் பென்சன்..
நம் வாழ்வாதாரம்..
நம் போராட்டம்..
நமக்கான போராட்டம்..!

நிலம், விதை, உணவை
நம் கையில் இருந்து பறித்து
பகாசுர கம்பெனிகளிடம் ஒப்படைக்கும்
நாசகார அரசுக்கு எதிரான போராட்டம்..

உழைப்பைச் சுரண்டி விட்டு
தொழிலாளர்களை
தெருவில் எரியும் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்..
இது
விவசாயிகள் தொழிலாளிகள்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

நாடு முன்னேறவில்லை..
பிரதமரின்
நண்பர் தான் முன்னேறி இருக்கிறார்..

300வது இடத்தில் இருந்தவர்
இப்போது 12வது இடத்தில்..!

நாடு முழுவதும் உள்ள
அரசு ஊழியர் CPS தொகை
5 இலட்சம் கோடி..
அதானி ஒருவரின்
சொத்து மதிப்பும்
5 இலட்சம் கோடி..!
யாருக்கான அரசாங்கம் தெரிகிறதா..?
எனவே ஆசிரியர், அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

தடுப்பூசி உற்பத்தி செய்தவர்
இப்போது
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர்..!

எல்.ஐ சி. முதற்கொண்டு
எதையும் விற்கத் துணிந்த
ஊதாரி அரசாங்கத்திற்கு
எதிரான போராட்டம்…

மத்திய, மாநில அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

ஒட்டு மொத்த
உழைக்கும் வர்க்கமும்
ஒன்றாய் அழைக்கிறது..
தமிழகத்தில் ஆளும் கட்சியும்
ஆதரவாய் இருக்கிறது..

மறக்காதே என் தோழா..
மார்ச் 28,29..!
அறைகூவி அழைக்கிறது
அகில இந்திய வேலை நிறுத்தம்..!

வா.. என் தோழா..
துணிந்து களமிறங்கு..!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *