கவிதை: பொறுமை காத்தல் S. மகேஷ் Kavithai

கவிதை: பொறுமை காத்தல் – S. மகேஷ்

 

 

 

பொறுமை காத்தல்!

பாரம்பரியம் துறந்த
ஏதோவொன்றின்
பரந்த வெளியிலும்
கட்டுப்பாட்டில் கலவரமாக
நழுவுகிறது பயணம்!

மூழ்கியவைகளை
மறக்கவியலாது
உணர்வில் தோய்ந்து
உள்ளும் புறமும்
உறுத்தும்!

இனி புதிதாய்
தொடங்கலிலும்
சறுக்கல்களே பிரதானம்
நாட்கள் விரையும்
பலனில்லா
ஆரவாரங்களைக்கடந்தே!

தீராதவொன்றின்
நகலில் நாடகம்
அடுத்தடுத்துத்தொடரலாம்
துன்ப ஊற்றுக்களில்

நனைதலே
நகர்தலின் அடியென!

பாழானவைகளும்
பறிபோனவைகளும்
நிகழ்த்தும்
குமுறல் ஊஞ்சலாட்டம்
உள்ளுக்குள்!

சக்கரம் நிற்காது
சுழன்றே தீருமெனில்
புதுமைகளும்
களங்களில் வசப்படலாம்!

ஏதோ ஓர்
சிறு நம்பிக்கை
மொட்டொன்று
மலரக்காத்திருக்கலாம்
அதுவரை பொறுமைக்கென
ஏதுமில்லை எல்லை!
…….

S. மகேஷ்
9841708284
mahicen@yahoo.com
No. 59A1, 
MC. Nagar 1st main road, 
Near Saibaba temple, 
Chitlapakkam, 
Chennai-600064

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *