Printhalum Unnai (Even if you split up) Poetry by Neya Puthuraja in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

பிரிந்தாலும் உன்னை – நேயா புதுராஜா



பிரிந்தாலும் உன்னை…
———————————
எத்தனைத் துயர்களைக்
கொடுத்தாலும்…
உன்னை என்னால்
சபிக்க இயலாது…
என்றோ….
என் இனிய நேரங்களுக்கு
நீ காரணமாக இருந்திருக்கிறாய்…
என்றோ…
என் வலிகளை உன்னோடு
அணுக்கமாகப் பகிர்ந்திருக்கிறேன்…
என்றோ…
பொய்யாகவேனும் என்னை
பலவகையில் சமாதானப் படுத்தியிருக்கிறாய்…
என்றோ…
என் வரம்பு மீறல்களை
அனுமதித்திருக்கிறாய்…
என்றோ…
என் வயிறு உன்னால்
பசித்தீ அடங்கியது…
என்றோ…
என் கண்ணீர்த் துளிகள்
உன் சட்டையை நனைத்திருக்கின்றன..
என்றோ….
உன் மடி எனக்கு ஆறுதலாக
இருந்திருக்கிறது…
என்றோ…
என் பயத்தில் உன் கைப்பிடித்து
நடந்திருக்கிறேன்…
என்றோ…
உனக்கான பல நேரங்களை
எனக்காக செலவு செய்திருக்கிறாய்…
என்றோ….
என் தாகம் தணிக்கும்
நீராக நீ இருந்திருக்கிறாய்…
என்றோ…
யாருமற்ற தனிமைத்துயர்களில்
உன் இருப்பு மட்டுமே
எனக்குப் பலமாக….
கால ஓட்டத்தில்…
சில துரோங்களும்…
அணுக்கமின்மையும்…
புதிய தேடல்களுமாக…நீ…
உன் மன விலகலும்..உன்
மௌனங்களும் தொடர்ந்து
என்னைக் கொல்லாமல் கொல்கின்றன…
பிரிவுத்துயர் பிரசவ வலியிலும்
கேடாக இருக்குமென்று
இப்போது புரிகிறது…
ஆனாலும்…
உன்னை என்னால்
சபிக்க இயலாது…ஏனெனில்
நினைத்துப்பார்க்க பலநல்ல
நேரங்களை எனக்கு நீ தந்திருக்கிறாய்…
என் கண்ணீர் தவிர்த்து…
என் புன்னகையை
அள்ளிப்போ…
உனக்கான புத்தகத்தில்…
என் பக்கம் மறைந்துவிடுமா என்ன…
மாயை விலகி மறுபடியும்
நீ வரும் நாளை எதிர்நோக்கி…
நான்.

நேயா புதுராஜா
தமுஎகச-அறம் கிளை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 13 Comments

13 Comments

  1. சாந்தி சரவணன்

    பிரிந்த கணவரின் துயர் வலியை வரிகளாக படைத்த தோழமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  2. Priya Jayakanth

    சிறப்பான கவிதை தோழர்

  3. M.Paramadayalan, Pondicherry.

    பிரிவின் வலிகளை வரிக்குவரி உணர்ச்சி பூர்வமாக
    உயிரோட்டமுள்ள அழகிய கவிதையாய் செதுக்கி
    உள்ளீர்கள். கவிதையை செதுக்கிய சிற்ப்பிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல. கவிதைகள்
    பல எழுதுங்கள் தோழர்.

  4. கவிதா பிருத்வி

    பிரிவு தரும் துயரின்
    சுகமான கற்பனை வரிகள்
    வாழ்த்துகள் தோழர் 💐🎉

    • தே. மு. முருகேசன்

      பிரிவின் வலியை உனர்ந்து படைத்துள்ளீர்கள்.

  5. ஆ. கணேசன்

    எல்லையற்ற அன்பின் வெளிப்பாடு ,பிரிவுத் துயரத்தில் வருந்தும் சொற்கள் புரட்டி போட வைக்கின்றன. நமது உள்ளத்தை அள்ளிச் செல்ல வைக்கின்றன சிறப்பு தோழர்.

  6. Thahira Banu. Chennai

    மிகவும் அருமை நேயா…
    பிரிவின் வலி கொடுமையானது… அதையும் எப்படி பக்குவமாக கையாளக் கற்றுக்கொண்டால் வலியைத் தாண்டிய (மன)வலிமை நிச்சயம்…
    . அருமையான கவிதை வாழ்த்துகள் தோழி…

    • Ammu Selvam

      அருமையான வரிகள் அனுபவித்து படைத்துள்ளீர்கள். 💐

  7. அனிதா,புதுகை

    பிரிந்து வாழும் சோகத்திலும், வாழ்ந்த இனிமையான நாட்களின், நல்ல நினைவுகள் சுகமாக்கும் என்பதை உணர்த்தும், அழகான வரிகளால் அலங்கரிக்கப்பட்ட கவிதை.அருமை வாழ்த்துகள் தோழமையே.👌👌🎊🎊🎊🎊🎊

  8. Mohanasundarapandiyan Pa

    கவிதை அருமை தோழர், வாழ்த்துகள்

  9. Rathika vijayababu

    பிரிவின் வலியை உணர்த்தும் அழகான வரிகள் வாழ்த்துகள் தோழர்

  10. கீதா பத்மநாபன்

    மிகவும் ஆழமான வரிகள் தோழர். எளிதில் கடக்க முடியாத வரிகள்

  11. KALAISELVI

    பிரிவின் துயர் பிரசவ வலியிலும் கேடானது…
    வலி மிகுந்த கவிதை 👌👍
    வாழ்த்துகள் தோழர் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *