பசியாறிய குழந்தை
உறங்கியது நிரந்தரமாக
கள்ளிப்பாலின் உபயம்
போராட்டம் முடிந்தது
ஏமாற்றத்துடன்
இறப்பில்
முழங்கியது சங்கு
மௌனமாக
அரசியல்வாதியின் காதுகளில்
ஆறியது நாவினால் சுட்டவடு
ஆறாதது
உன் மௌனம்
உயரப் பறந்தாலும்
கடிவாளத்தின் பிடியில்
காத்தாடியும் பெண்ணினமோ
விடிந்ததும்
இருண்டன
பசி மயக்கத்தில் கண்கள்
இரவிலும் பிரகாசித்தது
நிலவொளியால்
கூறையில்லா வீடு
மறைந்தன
மனக்கவலைகள்
பொய்யான புன்னகைக்குள்
கண்ணீரும்
இனித்திடும்
துடைக்கும் கரங்களிருப்பின்
பிரியா ஜெயகாந்த்
சென்னை
மின்னஞ்சல்: priyajayakanth78@gmail.com


அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிறப்பு பிரியா. மனமார்ந்த வாழ்த்துகள்
ஹைக்கூ அனைத்தும் சிறப்பாக உள்ளது
வாழ்த்துகள் தோழர்
வாழ்த்துகள் தோழர், மௌனத்தின் வலியை அழகாக கூறியிருக்கிறீர்கள்..
கவிதைகள் அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள் பிரியா.
மூன்றடியில் சமூக ஏற்ற இறக்கங்களை அளந்துள்ளீர்கள். அருமை