புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவில் சிறந்த நூல்களுக்கான விருது

புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவில் சிறந்த நூல்களுக்கான விருது



நூல் விருதுகள் – இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு

ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022ஐ முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் அறிவிப்பு வந்துள்ளது

இதில் முக்கியமாக, உலக சமூக வலைதளக் காட்சிகளில் முதன்முறையாக(?) இணைய எழுத்தாளர்க்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வலைப் பக்க எழுத்தாளர்கள் வருக.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமிகு கவிதா ராமு இஆப அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7, 2022 வரை பத்துநாட்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது.

இப்புத்தகத் திருவிழாவினையொட்டி மாணவர்க்கான கலை இலக்கியப் போட்டிகள், புத்தகப் பேரணிகள், புதுக்கோட்டை வாசிக்கிறது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2020, 2021ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும்
இணையத்தில் வெளியான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகவிழா மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

கீழ்க்கண்டவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கவிதை பிரிவில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை ஆகிய மூன்று விருதுகள்

கட்டுரை – அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், கலை இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்குமாக இரண்டு விருதுகள்

சிறுகதை நூல் விருது ஒன்று

நாவல் விருது ஒன்று

சிறார் இலக்கியம் விருது ஒன்று

இணையத்தில் மட்டுமே வெளியாகி நூலாக வெளிவராத, தமிழ்- புனைவு(கதை, கவிதை) படைப்பு ஒன்றிற்கும், அபுனைவுப் (கட்டுரை) படைப்பு ஒன்றிற்கும் என இரண்டு விருதுகள் என மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருதுக்கும் ரூ 5000 பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழுடன், விருதுப் பட்டயமும் 29-7-2022 – 07-8-2022 பத்துநாள் புதுக்கோட்டை புத்தகவிழாவில் விழா மேடையில் வழங்கப்படவுள்ளது.

மேற்படி விருதுகளுக்கான பரிசீலனைக்கு – பதிப்பகத்தார், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.

நூல்களின் 3 பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி-

எழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வன்,
தலைவர் – விருதுக்குழு,
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்,
புதுக்கோட்டை-622001

என்ற முகவரிக்கு 12-7-2022 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

(அனுப்பிய நூல்கள் கிடைத்த விவரத்தைக் கேட்க –9486752525)

இணையப் படைப்புகளின் இணைப்பினை rasipanneerselvan@gmail.com என்ற

மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கியமான குறிப்புகள்

படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 12.07.2022 படைப்புகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் முதல்பதிப்பாக வெளிவந்ததை உறுதிசெய்ய வேண்டும்.

தேர்வு பெற்றோர் விவரம் ஊடகவழியும், விருது பெற்றோர்க்கு செல்பேசி, மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கப்படும். நூல்களை அனுப்பியபின், கிடைத்த விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதன்றி, விருதுத் தேர்வு அறிவிப்புகள் வரை எந்தத் தொடர்பும் விரும்பத்தக்கதல்ல.

நன்றி: நா.முத்துநிலவன் வலைப்பக்கம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *