Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – தோழர் SAP

சினிமாவில் புகழ்மிக்கவராக விளங்கும் சீனுராமசாமியின் 170 கவிதைகளடங்கிய புகார்பெட்டியின்மீது படுத்துறங்கும் பூனை என்ற தலைப்பில் பெரும்தொகுப்பாக வந்துள்ளது, முப்பதாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தமுஎச குழுவில் பலமுறை நான் சந்தித்த இளைஞர் சீனு, அவரது தென்மேற்குப் பருவக்காற்றைவிட எனக்கென்னவோ இக்கவிதைத் தொகுப்பு இனிக்கிறது.

இதில் நீள்கவிதைகளும் குறுங்கவிதைகளுமாய் இலக்கிய வகைகளில் அனைத்து விதமான கவிதைகளும் உள்ளன. ரியலிசம் சர்ரியலிசம் நவீனத்துவம் முதல் பின்நவீனத்தவம் வரை உரசிப்பார்த்துள்ளார். மார்க்சீயம் கற்றவர் என்றமுறையில் எளிய கிராமப்புற மனிதர்களையும் அவர்களது அவல வாழ்வையும் புதுவிதமான முறையில் கவிதைகளாய் படைத்துள்ளார், நவீன வாழ்வில் உள்ள மனிதர்களின் வாழ்வையும் அவர்களது வாழ்வுச்சிக்கல்களையும் சேர்த்தே வடித்துள்ளார்.

உரிமையில் உணர்ச்சியில்
உள்ளத்தின் காதலை
நியாயத்தின் இடதுபக்கத்தில்
நின்றே பேசுங்கள் ****என்று தொடங்கி

உழுத கழனிக்குள் ஒரு மண்புழுதான்
தலைதுாக்கிப் பார்க்கவில்லை
ஏனோ என் ஜனமோ குனிந்தும் பார்ப்பதில்லை,
என்கிறார்.

மெல்ல நெருங்கிடும்போது
நீ துாரப்போகிறாய் என்றெழுதிய பின்
அவன்சிரிப்பில்
ஒரு புத்தர் தனது பாயைச் சுருட்டினார்—
இந்தவரிகளை வாசிக்கும்போது கவிஞர் பாஷோ நினைவுக்கு வருகிறார்.

பசித்தால் தானே உண்னும்
பசியாக்குழந்தையோ
ஊட்டினால் கக்கும்
ஊட்டிய விரலைக்கடிக்கும்,
பிறப்பின் பத்து வயதுக்குள்
பறக்கும் பலுான்களே
இறுதிவரை மகிழ்வின் மேகத்திரள்கள்—–என்று முடிகிறது.

வேம்பு பாகற்காயின் தந்தை–ஆனால் வேப்பம்பழங்கள் பழுத்தால் இனிக்கும், பழுத்தால்தான் எதுவும் இனிக்கும் என்பதில் முதிர்ச்சி தெரிகிறது.

எளிய கதாசிரியனுக்கு வறுமையில் மழைகூட சோதனைதான், அதை—
கதை நோட்டுகள் நனைந்துவிடாதபடி போர்வையில் சுருட்டி வைப்பேன்
ஒழுகும் அவ்வீட்டில் நான் பக்கத்து வீட்டில் சாதம்
கருணையின் ஆவியோடு இந்தத்தனியன் அறைக்கு
வர– வழித்துணையாக இருப்பாார் கடவுள், என்கிறார்,

கடவுள் நம்பிக்கை இல்லாதவரானாலும் சோத்துக்குள்ளிருக்கான் சொக்கப்பன் எனும் கிராம உணர்வு தலைதுாக்குகிறது, நீ வாரத்தைகளை ஆயுதக்கிடங்கிலிருந்து எடுப்பவன் என்ற வரிகள் புரட்சிக்கு வித்திடும் வரிகள்.

அன்பின் தேவை எங்கும் எதிரொலிக்கவேண்டும்,
உயரப்பறக்கும் கழுகைவிடவும்–அருகில் உண்மைபேசும் கிளிகள் அறிதல் அன்பின் தேவை
என்ற சிறந்த வரிகள்,,,,
புரட்சி என்ற கவிதை——–
பூர்வஜென்ம மோப்ப சக்தி ஏதுமற்ற தவளைகள்
எப்படி ஆதிகுடிகளின் நிலமீட்பு முற்றுகையென
சூழ்ந்திருந்து ஒருசேரக்குரல் எழுப்பி உறங்கவிடாது
ஸ்தம்பிக்கச் செய்கின்றன,–
மறைத்தும் பறித்தும் ஒடுக்கியும்
முடப்பட்ட பாதைகளின் வழியே திரண்டு ஒருநாள் அவ்வாறு புரட்சி உண்டாகப் போகிறது என்கிறார்,

இதில் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு ரகம்,
சராசரி வாசகனும் கவிதை எழுத விரும்புவோரும் கற்க வேண்டிய நுால் இது, புகார் பெட்டியின்மீது லஞ்சப்பூனைகள் படுத்துறங்கும் காலமிது,,

வாழ்த்துகிறேன் உன்னை சீனு,,,,

விலை ரு 330 தொடர்புக்கு;
டிஷ்கவரி பப்ளிகேஷன்ஷ்
சென்னை.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும், சிறிய கதைகள் மூலம் பெரிய செய்திகளை கொண்டு சேர்க்கிறது இந்த புத்தகம்.ஒவ்வொரு கதைகளோடு தொடர்புடைய அழகு ஓவியங்களும் இடம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளிட்டிருக்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தேசம் பற்றிய விழிப்புணர்வு தருவிக்கும் படைப்பாக இது மலர்ந்திருக்கிறது....

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய கழிவறை இருக்கை நூல். அப்போது கண்ணில் பட்டு வாங்கியது தான் சாண்ட்விச் நூல். ஆனால் வாசிக்காமல் கிடப்பில் போட்டு தற்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here