தினம் ஒருவரின் வருகை
அறை அழகு
சமையலறை சிறியதென்கிறார்…
நான்கு பேருக்குப் போதவில்லையென்கிறார்…
இருவருக்கு இவ்வளவு பெரிய வீடா என்றனர்
காற்று வரவில்லை என்றும்
வாஸ்து மாறியதென்றும்
சன்னல் சிறியதென்றும்
போனமாதம் வரை இருந்தவர் பற்றியும்
தலா நாளைக்கு பத்துப்பேர் விசாரித்த வண்ணத்தில்
நிலைக்கதவை கடந்து செல்ல…
போதும் என்றவரின்
நிறைவான
பாதங்களை மட்டும்
சேகரித்து வைக்கிறது
ஒட்டடைகள் நிறைந்து
திறந்த சன்னல் வழியாக நிறைந்த
மண்துகள்களில்
சேகரிக்கிறது
தினம் பலர் குடிபோகும்
புதுமனை…..!
நாளை யார் வருவாரோ…..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

