எப்போதும்
மனிதர்கள் …..
பார்த்த பிறகு தான்,
சிரிப்பார்கள்.
அவர்கள்
எப்போது
பார்க்காமல் சிரிப்பார்கள்
என யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
சரி….
நீங்கள்
கண்டவுடன்
கேட்டவுடன்
பார்த்தவுடன்
‘சிரிப்பீர்களா….?’
ஆம் ,
இன்று காலையில் கூட
என் முற்றத்து
நந்தியாவட்டை
பூத்து சிலிர்த்தது….
ஏனோ .
எனக்கு வெட்கம் படர்ந்தது.
நானும்,
பார்க்கிறேன்,
மலர்கள் ஒரு போதும்
வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை.