சலனமற்ற நதியாய்
ஓடப் பார்க்கிறேன்
நான் வேண்டி விரும்பாமலே
சேரும் சுயநல சாக்கடைகள்
எல்லாவற்றையும் மீறிய
ஆத்ம திருப்தி
அந்தப் புள்ளியில்
செல்லாமல் போகும் பணம்
பொய்மையில் சிக்கியழியும்
நீர்க்குமிழியல்ல நான்
உண்மையோடு உருண்டாலும்
மணலாகி மகிழும் பாறை
கீறி ஆற்றுகிறேன்
ஆறாப் புண்
நீ கிழித்த
என்மனக் கடிதங்கள்
உன் ஞாபகங்களைத்
துடைத்து எறிகிறேன்
அழுக்கு நீரில்
ஆயிரம் செந்தாமரைகள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.