Rasi Azhagappan's Kala Puthirvanam Poetry Collection Book Preview. Book Day is Branch of Bharathi Puthakalayam



பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின்
பதிப்புரையிலிருந்து சில வரிகள்
********************************************

இனிய நண்பர் ராசி. அழகப்பன் அவர்களின் காமிரா கண்கள் உருப்பெருக்கமடைந்து நம்முன் பிரமாண்டத்தை நிகழ்த்துகின்றன. கவிதையெங்கும் சொற் கூடுகள். கூடுகள் உடைந்து பல்வேறு தரிசனங்களைத் தருகின்றன. கலைடாஸ்கோப் மாதிரி ஒரு பன்முக எதிரொளிப்பு கவிதைகளில் காணப்படுகின்றன. வார்த்தைகளை மின்மினிப் பூச்சிகளால் கோர்த்து கவிதையெங்கும் ஒளிரச் செய்யும் வித்தை தெரிகிறது.

திரைப்பட இயக்குநர், தமிழ்நாடு அரசு விருதுபெற்ற இயக்குநர் எனும் பெருமைக்குரியவர் இயக்குநர் ராசி அழகப்பன் அவர்களின் இந்தக் “காலப்புதிர்வனம்” கவிதை நூல் பல்வேறு புதிர்களை நம்முள் களையெடுக்கிறது.

அகம் புறம் சார்ந்த காலப்புதிர்வனம் வாசிப்பவருக்குள் நிகழ்த்தும் பெரும் தத்துவ விசாரணை மகத்தானது.

கவிதைகளின் அற்புத கணமொன்றில் காலப்புதிர்வனம் வாசிக்கக் கிடைக்கும். வாசியுங்கள்.. காலப்புதிர்வனத்தில் ஒளிரும் மின்மினிப் பூச்சியொன்றைக் கையில் எடுக்கிறவன் ஒளிர்வான் எனும் பேருண்மை புரிபடும். புலப்படும்.


“காலப்புதிர்வனம்”
(கவிதை நூல்)
திரைப்பட இயக்குநர்
ராசி. அழகப்பன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *