அழகிய வீடொன்று வரைய நெடுநாள் அவா
நேற்றுதான் வாய்த்தது நேரம்
கைமுறுக்கு கோலமிட்ட வாசல்
கயிற்றுக் கட்டிலிடும் படியாக இரு திண்ணைகள்
அகல் விளக்கேற்றும் படியாக இரு மாடங்கள்
மஞ்சள் குங்குமம் பூசிய மரக்கதவு
மரக்கதவில் சில மணிகள்
கூடவே அன்னப்பட்சியின் புடைப்புச் சிற்பம்
யாவும் வரைந்தும் நிறைவில்லை கடைசியாய்
கதவில் ஊசலாடும் கால்சராய் சிறுவனையும்
ஸ்தனங்களுடன் காசுமாலை சரடு
ஊசலாட திருகை சுழற்றும்
இரவிக்கையணியாதவளையும் வரைந்து முடித்தேன்
எங்கே இப்போது சொல்லுங்கள்
எப்படி இருக்கிறது வீடு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

