Subscribe

Thamizhbooks ad

நூல் மதிப்புரை: சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர் பெ. சசிக்குமாரின் ரயிலே ரயிலே – பா. இளங்கோவன்

குழந்தையின் மொழியில் அவர்களுக்குப் புரியுமாறு ஒன்றை விளக்கிச் சொல்வதற்க்கு அசாத்தியத் திறமை வேண்டும். அந்தத் திறமை வாய்த்திருக்கிறது இந்த நூலாசிரியர்கள் திரு. சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர். பெ. சசிக்குமார் இருவருக்கும். “ரயிலே ரயிலே” – என்ற தலைப்பில் தொடர்வண்டியின் வரலாறு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை இத்தனை எளிமையாக தமிழ் மொழியில் சொன்ன புத்தகத்தை நான் இதற்குமுன் வாசித்ததில்லை.

பழங்குடிக் கிராமத்து பத்தாம் வகுப்புச் சிறுவனின் பார்வையில் மொத்தப் பயணமும் அமைந்திருக்கிறது. கூடவே நாமும் பயணிக்கிறோம். கோவை ரயில் நிலையத்தில் தொடங்கும் பயணம் டெல்லி வரை சென்று முடிகிறது. அறியாமையே வரம் என்பதற்கு ஏற்ப முதன் முதலாக ரயில் பயணம் செய்யும் அந்தச் சிறுவனின் கோணத்தில் எழும் கேள்விகள் எல்லாம் ரயில் குறித்த ஒட்டுமொத்த எல்லோருக்குமான புரிதலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. கேள்வி பதில் வடிவில் மொத்தப் புத்தகமும் அமைக்கப்பட்டது கூடுதல் சிறப்பு. சுப்பு என்னும் சிறுவனும் கூடவே இரு சிறுவர்களும் கேள்விகள் கேட்க, ஆசிரியர் கணேசனும் ரயில்வே துறையில் பணிபுரியும் துறைசார்ந்த வல்லுநர்களும் அக்கேள்விகளுக்குப் பதில்கள் சொல்வதாக அமைந்திருக்கிறது.

சிறுவர்களுக்கான நூலாக இது அமைந்திருந்தாலும் பெரியவர்களும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்வதற்கான நிறைய சங்கதிகள் நூலில் உள்ளன. தாமதமாக வரும் ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்காமல் போய்விடுமா? லோகோ பைலட்டுக்கு வண்டியைத் திருப்பும் வேலை இருக்காதா? தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் வைக்கும் கற்களால் ரயில் தடம் புரளாதா? என்ற குழந்தைத் தனமான கேள்விகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய தொழில் நுட்பச் சங்கதிகளும் நிறையஉண்டு. கூடவே இருதரப்பாரும் தெரிய வேண்டிய ரயில் தோன்றி வளர்ந்த வரலாறு – ரயில் டாய்லெட் தோன்றிய கதை உட்பட – உலக அளவில் இயங்கிவரும் பல்வேறு விதமான ரயில்கள் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்புகளும் அருமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

இந்திய மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் ரயில் குறித்து எல்லாத் தரப்பினரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சங்கதிகளை தொகுத்துத் தந்திருக்கிறார்கள் ரயிலே ரயிலே ஆசிரியர்கள். இருவருக்கும் பாராட்டுகள். வாசிக்கப் போகும் பயனாளிகளுக்கும் கனிவான வாழ்த்துகள்.

நூல்: ரயிலே ரயிலே
ஆசிரியர்: சு. ஹரிகிருஷ்ணன் மற்றும் முனைவர் பெ. சசிக்குமார்
வெளியீடு: புக் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
விலை: 170/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here