Red Ink book by SaKa Muthukannan Bookreview by Era Kalaiyarasi நூல் அறிமுகம்: சக. முத்துக்கண்ணனின் ரெட்இங்க் - இரா. கலையரசி

நூல் விமர்சனம்: சக. முத்துக்கண்ணனின் ரெட்இங்க் – இரா. கலையரசி

நூல் அறிமுகம்: ரெட்இங்க்
ஆசிரியர்: சக. முத்துக்கண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் அக்டோபர் 2021
விலை: ரூபாய் 95
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சாரல் மழைக்கு காத்திருந்த மண்ணாய் புத்தகத்தின் வாசம் இதயம் தொட காத்திருக்கிறது. பட்டும் படாமலும் விட்டு விட்டு பெய்த மழை நாளில் கூடலூர் மண்டபத்தில் எட்டிப் பார்த்தது , “ரெட் இங்க்”.

குமரவேல் , பன்னீர் சார் போன்றவர்களின் பெயர்களை அரங்கில் உச்சரித்துக் கொண்டே இருந்தனர்.

குமரவேல் கதாபாத்திரத்தை முதலில் தேடினேன். “வாத்தியார்கள் தினத்தில்” கண்டுபிடித்தேன். ஏழு பேரில் ஒருவர் விடுபட எடுக்காத அலைபேசிகள் ஆயிரம் கதைகள் சொல்லும்.

“ஆசிரியர்களுக்கு டீ இலவசம்’.குமரவேல் ஒரு நாள் குடித்தால் பேருவகை கொள்வேன்.பால்பன் வெட்டும் பால்யநண்பன்.”கொத்து கரண்டி” யுடன் ஒரு செல்பியை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி இருந்தான்.”கலைந்து போன மேகங்களாய் சிதைந்து போயின கனவுகள்”.

அவனே சொல்லட்டும் கதையில் “அவனது கால்கள் வெள்ளரிபிஞ்சு போல இருந்தது.” ஆசிரியரின் மனமும் அப்படி தான் என்பதை நிரூபிக்கிறார். கிறுக்கு பெரியம்மா எறிந்த பாட்டில் கதையை சொல்லி விட்டானா?சார்.

கலர் கோழிக்குஞ்சுவிற்கு புத்தகம் போடும் மாணவர்கள் பழைய நினைவுகளை அள்ளி வருகின்றனர். பள்ளியில் களேபரம் நடக்க கணக்கு டீச்சர் கோழிக்குஞ்சு வாங்கி வருவது ???

“ட்ராப் அவுட் “கார்த்திக் பள்ளிக்கூடத்துக்கு வருவது ரமா டீச்சரின் அன்பை பறைசாற்றுகிறது.”நைட்டு இவ்வளவு நடந்து இருக்கு. அவன் ஏன் சார் ஸ்கூலுக்கு ஓடி வரனும்”அன்பில் நனைந்த உயிர் அன்றோ? இவர்கள்.

நீலபந்து ராசா ,மாணவர்களை ஏன்?பெயில் ஆக்ககூடாது என கேட்போருக்கான சரியான பதில். இன்று பள்ளி பாதுகாக்கும் இடமாகவே இருக்கிறது.

மெர்லின், அகமது,ராதாக்கா ஓவியர் குமரப்”பரு”வ நினைவுகள். அது சரி மெர்லின் படம் எப்புடி ஓவியர் கிட்ட?

ஜெயந்தி டீச்சர்(மாணவி) புருவத்த ட்ரிம் பண்ண ராசாத்தி டீச்சர் அரட்ட மனம் மாறி போய் நொந்து கொள்வது பாவம். வயது வரும் பெண் குழந்தைகளை வீடு சென்று விட இவ்வளவு தயங்குகிறார்களா?என்ன? பெண் ஆசிரியர்கள். இந்த லீடர் வச்சி படிக்க வக்கிறது அத்தனை ஏற்புடையதா?

பன்னீர் சார் “சில்லிப்புல “வந்துட்டாரு. ஜீவிதா போன்ற மாணவிகள் பன்னீர் சாரை தாயுமானவர்களாகவே கண்டெடுக்கிறார்கள்.பன்னீர் சார்.! நீங்க “செம”. போங்க.

போஸ் அண்ணண் கொரோனாவில் எங்கேயோ இறந்து போக “தோள் உயர்த்தி ஆத்தும் டீ” நம் கண் முன் வந்துக் கொண்டே இருக்கிறது.தாச்சிக்கு தந்த ஐந்து ரூபாய் அவள் இருந்த திட்டை நியாபக படுத்துகிறது. ஈரத்தை தேக்கும் இதய அணை ஆங்காங்கு உடைந்து அழுகிறது.

வெள்ளை பூக்கள் சிரித்தபடி ஆசிரியரை வழி அனுப்புகின்றன.அனைத்து கதைகளும் கண்களை ஈரமாக்கி நனைத்து விடுவதை தவிர்க்க இயலவில்லை.

எழுத்தாளனின் இதயம் பேசுகையில் உணர்வுகள் பஞ்சு பொதியாய் மனம் வருடுவது இயல்பே.இப்பணியை செவ்வனே செய்துள்ளது. “ரெட் இங்க்”

வாழ்த்துகள் தோழர்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *