நீலகண்ட பறவையைத் தேடிவந்த
காளிதாசன்
தாகத்துடன் அலைகிறான்.
சாதகப்பறவையை விரட்டி அடித்த
சாபமிது.
பட்சி சாஸ்திரம் பொய்த்துவிட்டதால்
புலஸ்தியன் நீராடிய பொய்கை
வற்றிவிட்டது.
காக்கையின் சிறகைத்தொட்டு
வண்ணம் பூசிக்கொண்ட பறவை
நிலவைத் தின்று பசியாறுகிறது.
விசும்பின் துளியாய்
மிச்சமிருக்கும் நினைவுகளில்
காக்கைப்பாடினி பாடுகிறாள்.
விருந்து வருமோ மருந்தாய் ? !
காளிதாசன் கிளையில் தொங்கிக்கொண்டு
அடிமரத்தை அறுக்கிறான்.
தேவியின் தாம்பூல எச்சில் முத்தம்
தாமதமாகிக் கொண்டே இருக்கும்
காத்திருப்புகள்..
தொடரமுடியாமல் “ருது சம்ஹாரம் “
– புதியமாதவி மும்பை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

