அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
ஆசிரியர் : ச.மாடசாமி
விலை : 70
பக்கங்கள் : 72
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com
பேராசிரியர் ச. மாடசாமியின் இந்தப் புத்தகம் மொத்தம் 12 கட்டுரைகளை உள்ளடக்கியது.
பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின் மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள் தான்.
மாணவர்களுக்குள் பல்வேறு முகங்கள் உள்ளன. ஆசிரியர்கள் தான் அந்த முகத்தை அடையாளம் காண மறந்து விடுகின்றனர் அடையாளம் கண்டால் அந்த மாணவன் வாழ்வில் சிகரத்தை தொட்டு விடுவான்.
சடங்குகள் சூழ்ந்த வகுப்பறை ,விவாதங்கள் நிறைந்த வகுப்பறையாக மாற வேண்டும் ஆசிரியர் நினைத்தால் முடியாதது எது?
தலைகீழ் வகுப்பறை அல்லது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறையைக் கண்டுபிடித்தவர்கள் ஜோதைன் பெர்க்மமேன் மற்றும் ஆரன் சாம்ஸ் என்ற இரு அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் கோபம் கொண்ட மாணவர்களோடு தயவு செய்து கைகுலுக்குங்கள், கண்டித்த மாணவர்களை அழைத்து தோளைத்தட்டிக் கொடுங்கள்.
வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்காக தோற்றுப் போங்கள் தோற்பதற்குக் கூச்சப்படாதவர்கள் தான் உண்மையான வீரர்கள் உண்மையான ஆசிரியர்கள்.
ஒரு செயலை முடிக்கும் தருணம் கடினமானது மற்றும் முக்கியமானது ஆகும்.
கேரளாவில் பள்ளிகள் திறக்கும் நாளில் குழந்தைகளை வரவேற்க வாசிக்கும் பாடல்.
“வாகை மரங்கள் பூத்த வசந்த காலம் பள்ளிக்கூட காலம் வண்ணத்துப்பூச்சிகள் தோப்பு நிறைய பறக்கும் பட்டுப்பூச்சி காலம் ”
குழந்தைகளின் உலகங்கள் உயிர்ப்பெற தொழில்நுட்பம் மட்டும் போதாது பாடப்புத்தகம் மட்டும் போதாது உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்.
உலகில் லட்சக்கணக்கில் பேனாக்கள் இருக்கின்றன ஒவ்வொரு பேனாவுக்குள்ளும் லட்சக்கணக்கில் உலகங்கள் ஒளிந்து இருக்கின்றன அவற்றையெல்லாம் வகுப்பறை வெளிக் கொண்டு வந்து விட்டதா? என்ற கேள்வியை கிறிஸ்டோபஸ் மையர் எழுதிய “என் பேனா” (My Pen)என்ற குழந்தை கதை எழுப்புகிறது.
“ஒரு மழைத்துளி போல் எளிமையானது பேனா ஆனால் பேனாவின் பார்வை ஊடுருவும் எக்ஸ்ரே பார்வை ..!”
தொடுதிரைக்கு ஆசைப்படும் வகுப்பறைகள் பேனாக்களையும் பேனா பிடிக்கும் விரல்களையும் எவ்வளவு வளர்த்திருக்கின்றன என்பது கேள்விக்குறிதான் ….?
தடுமாறும் பிள்ளைகளோடு கைகோர்த்துக்கொண்டு அவர்கள் வேகத்தில் ஆசிரியர்கள் நடந்து போனால் பயணமும் தித்திக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உறைந்து கிடக்கும் உலகங்களும் உயிர்ப்பெறும் அதற்குத் தேவை வகுப்பறைக்கு ஒரு மனித முகம்.
திறமையானவர்கள், உண்மையானவர்களை விட நெளிவு சுழிவு தெரிந்தவர்களே அன்றாட வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
செயல்படுவது தான் சுதந்திரம்.
ஆசிரியப் பணியில் சோர்வு ஏற்படும் போது மனம் புத்துணர்வு ஏற்பட பேராசிரியர் ச. மாடசாமியின் புத்தகங்கள் உதவும்.
மாணவர் மைய ஆசிரியர்கள் தங்களை மென்மேலும் செதுக்கிக் கொள்ள இந்தப்புத்தகம் கண்டிப்பாக உதவும்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
வ.பெரியசாமி
புத்தக ஆர்வலன்
தன்னம்பிக்கை பேச்சாளர்&போட்டித்தேர்வு பயிற்சியாளர்,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.