பூமி பிளக்குமடா !
எஸ் வி வேணுகோபாலன்
வந்தோம் வந்தோம் வந்தோம் வந்தோம்
கொடியெடுத்தே
தம் தோம் தம் தோம் தம் தோம் தம் தோம்
படையெடுத்தே !
ஏரெடுத்துப் பாடெடுத்துப்
போரடித்த வேளாண் கூட்டமடா –
உழைப்பே ஊட்டமடா !
நீரடித்துப் புகையடித்தால்
வாயடைத்துப் போக மாட்டமடா –
நியாயம் கேட்பமடா! (வந்தோம்…வந்தோம்.)
காடுவெளஞ்சத ஈடு மறுத்து
வீடுபுகுந்து கொள்ளை அடிப்பாயோ
எதிர்த்தால் உதைப்பாயோ ?
காலகாலமாய்ச் சோறளித்தோரைக்
கூளமாக்கி வீதியில் எறிவாயோ
வேதனை அறிவாயோ ? (வந்தோம்…வந்தோம்.)
மூலதனத்துக்கு ஆலவட்டம்
ஏழைவிவசாயிக்கு எல்லாம் நட்டமாடா
வேளாண் சட்டமாடா ?
பாடுபட்டவர் நாதியற்றிருக்க
மேடிருப்பவர் மேலும் கொட்ட மாடா
இதுதான் திட்ட மாடா? (வந்தோம்…வந்தோம்.)
ஊன்பெரிதில்லை உயிர்பெரிதில்லை
ஓய்ந்திருப்பவர் யாமில்லை தோள் தட்டுவோமடா
முரசு கொட்டுவோமடா !
மேலடுக்கினில் நீயொடுக்கினால்
கீழடுக்கினில் பொங்கிக் கலக்குமடா
பூமி பிளக்குமடா ! (வந்தோம்…வந்தோம்.)
*********************
பாடுபட்டவர் நாதியற்றிருக்க
மேடி(மோடி)ருப்பவர் மேலும் கொட்ட மாடா…
இதுதான் திட்ட மாடா?
காலகாலமாய்ச் சோறளித்தோரைக்
கூளமாக்கி வீதியில் எறிவாயோ
வேதனை அறிவாயோ ?
மேலடுக்கினில் நீயொடுக்கினால்
கீழடுக்கினில் பொங்கிக் கலக்குமடா
பூமி பிளக்குமடா !
அற்புதமாகப் படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
வேளாண் சட்டம் திரும்பப்பெறும்வரை,பூமி பிளக்க வருகிறோம்… வருகிறோம்
அடடா பாரதியின் குரல் பாட்டில் தெறிக்குது.
கவிதையும் போட்டிபோடுகின்றது. சிறப்பான கவிதை நன்று.
ஊன்பெரிதில்லை
உயிர்பெரிதில்லை
ஓய்ந்திருப்பவர் யாமில்லை
தோள் தட்டுவோம்
முரசு கொட்டுவோம்
பூமி பிளக்கட்டும்
தோழர் எஸ் வி வி,
‘பூமி பிளக்குமடா’
அருமையான கவிதை .
தம்மை உழுது பயிர் வளர்க்கும்
வேளாண் மகன்களின் கண்ணீரை கண்டு
பொறுமையின் இலக்கணம் பூமாதேவிக்கே பொறுக்காமல்
நெஞ்சு பிளந்து பொங்கி வருவாள்
நிச்சயம்.
ஏ. எம். சாந்தி.