sa.linga raasu kavithai ச.லிங்கராசு கவிதை
sa.linga raasu kavithai ச.லிங்கராசு கவிதை

ச.லிங்கராசு கவிதை

‘ கருப்பரசியல்’

காலம் போன கடைசியில்
இப்போது கருப்போடு
வெறுப்பரசியல்….
கருப்பென்று ஒன்று இருப்பதாலேயே
வெண்மைக்கு மரியாதை என்பதை
மறந்து விடுகிறீர்கள்

சீப்பை மறைத்து விட்டால்
இங்கு திருமணங்கள் நின்றா
போகின்றன?
கருப்பை மறைத்து விட்டால்
உங்கள் கயமைகள் போய்விடுமென்று கனவு
காண்கிறீர்கள்

வேற்றுமையில் ஒற்றுமை
காலங்காலமான கனவு
ஆனால் ஒற்றுமையில் வேற்றுமையே
உங்களின் ஓங்கார குரல்

இருட்டும் கூட கருப்புத்தான்
அதை இல்லாது செய்ய
இயலுமா உங்களால்?
வினை விதைத்திருக்கிறீர்கள்
விளைவுகளுக்கு தயாராகிக்
கொள்ள வேண்டாமா?

***  ச.லிங்கராசு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *